jump to navigation

கடந்துபோன ஆண்டு குறித்து சில நினைவுகள்… ஜனவரி 2, 2009

Posted by மு.வி.நந்தினி in கடந்துபோன ஆண்டு.
4 comments

உற்சாகத்தோடு ஆரம்பமாகி அமைதியாக முடிந்துபோனது 2008! குங்குமம் இதழில் எழுதிய தொடர் கட்டுரைகள் புத்தகமானது முதல் மகிழ்ச்சி; அடுத்து ஆனந்தவிகடன் இதழில் சேர அழைப்பு வந்தது,அரசியலிலிருந்து சமூக பிரச்னைகளை எல்லாம் எழுதி கிழித்து விடலாம் என நினைத்தது இரண்டாவது மகிழ்ச்சி(அது முடியாமல் போனது முதல் துயரம் :) ! )இப்படி ஒவ்வொரு மகிழ்ச்சியாக தேடி வந்துகொண்டிருந்த வேளையில், எப்படியோ என்னை எல்லோரும் ‘தோற்றுப்போனவள்’ என்று ஒப்புக்கொண்டதுதான் பெரும் மகிழ்ச்சியாக நினைக்கிறேன்! ஆனபோதும் தோற்றுப்போனவளாக இதே திமிர்தனத்தோடு அடுத்த ஆண்டையும் எதிர்கொள்ளப்போவதை நண்பர்கள் பொறுத்தாள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்…

(மன்னிக்கவும் இதுபோன்ற மொக்கை பதிவை இனி இடமாட்டேன் :) )