<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>மு.வி.நந்தினி</title>
	<atom:link href="http://mvnandhini.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://mvnandhini.wordpress.com</link>
	<description>எழுத்தும் எழுத்து நிமித்தமும்</description>
	<lastBuildDate>Wed, 26 May 2010 12:56:37 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='mvnandhini.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>மு.வி.நந்தினி</title>
		<link>http://mvnandhini.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://mvnandhini.wordpress.com/osd.xml" title="மு.வி.நந்தினி" />
	<atom:link rel='hub' href='http://mvnandhini.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>​போலி​யோவும் எய்ட்ஸும்தான் ஒழிக்கப்பட​ ​வேண்டிய ​நோய்களா?</title>
		<link>http://mvnandhini.wordpress.com/2010/05/26/%e2%80%8b%e0%ae%aa%e0%af%87%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e2%80%8b%e0%ae%af%e0%af%87%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%af%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%81%e0%ae%ae/</link>
		<comments>http://mvnandhini.wordpress.com/2010/05/26/%e2%80%8b%e0%ae%aa%e0%af%87%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e2%80%8b%e0%ae%af%e0%af%87%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%af%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%81%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Wed, 26 May 2010 12:54:45 +0000</pubDate>
		<dc:creator>மு.வி.நந்தினி</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[மருத்துவ ​​மோசடி]]></category>
		<category><![CDATA[மருத்துவர் புக​ழேந்தி]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[மருத்துவ மோசடி]]></category>

		<guid isPermaLink="false">http://mvnandhini.wordpress.com/?p=443</guid>
		<description><![CDATA[&#8221;மருத்துவம் என்பது உயிர்காக்கும் சேவை! மனித உயிர்களை மூலதனமாக்கி மருத்துவத்தை வியாபாரமாக்கும் வித்தையைத்தான் பல மருத்துவர்கள் செய்துவருகிறார்கள். நம்முடைய அரசுகளும் இந்த வியாபாரத்தின் கூட்டு ​கொள்​ளையர்கள் என்பதுதான் அவலம். அதனால்தான் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர் உயிரிழக்கக் காரணமான தொழுநோய் பற்றி கண்டுகொள்ளாமல், வெறுமனே 864 பேரை மட்டுமே பாதிக்கும் (உயிரிழப்பு அல்ல!) போலியோவுக்கு அதிகமாக நிதி ஒதுக்குகிறார்கள். போலியோ வந்துவிட்டால் குணப்படுத்த முடியாது என்று மக்கள் மேல் உள்ள அக்கறையில் அப்படிச் செய்யவில்லை. வெட்ட [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=443&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<h4><a href="http://mvnandhini.files.wordpress.com/2010/05/polio_vaccine_in_jakarta.jpg"><img class="aligncenter size-full wp-image-444" title="Polio_vaccine" src="http://mvnandhini.files.wordpress.com/2010/05/polio_vaccine_in_jakarta.jpg?w=365&#038;h=404" alt="" width="365" height="404" /></a></h4>
<h4><span style="color:#ff0000;">&#8221;மருத்துவம் என்பது உயிர்காக்கும் சேவை! மனித உயிர்களை மூலதனமாக்கி மருத்துவத்தை வியாபாரமாக்கும் வித்தையைத்தான் பல மருத்துவர்கள் செய்துவருகிறார்கள். நம்முடைய அரசுகளும் இந்த வியாபாரத்தின் கூட்டு ​கொள்​ளையர்கள் என்பதுதான் அவலம். அதனால்தான் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர் உயிரிழக்கக் காரணமான தொழுநோய் பற்றி கண்டுகொள்ளாமல், வெறுமனே 864 பேரை மட்டுமே பாதிக்கும் (உயிரிழப்பு அல்ல!) போலியோவுக்கு அதிகமாக நிதி ஒதுக்குகிறார்கள். போலியோ வந்துவிட்டால் குணப்படுத்த முடியாது என்று மக்கள் மேல் உள்ள அக்கறையில் அப்படிச் செய்யவில்லை. வெட்ட வெளிச்சமாகச் சொல்லப்போனால் போலியோவுக்குக் கிடைக்கும் பன்னாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிதியும் சொட்டு மருந்து தயாரிக்கும் மருந்து கம்பெனிகள் மூலம் கிடைக்கும் கமிஷன் தொகையும்தான் காரணம்!&#8221; மருத்துவத்துறையில் நடக்கும் சுரண்டல்களை ஆதாரத்தோடு அடுக்கிக்கொண்டே போகிறார் மருத்துவர் புகழேந்தி. மருத்துவத்துறை கார்ப்பொரேட் மயத்தால் மக்களை சுரண்டி பைகளை நிரப்பிக்கொண்டிருக்கும் சூழலில் பத்து ரூபாய்க்கு மருத்துவம் செய்துகொண்டிருக்கிறார் மருத்துவர் புகழேந்தி. கடந்த 18 ஆண்டுகளாக கல்பாக்கம் அருகே இருக்கும் வாயலூர் கிராமத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறார் இவர். மக்கள் நலனுக்கு எதிரான மருத்துவ திட்டங்களை பின்பிளைவுகள் பற்றி கவலையில்லாமல் விமர்சிக்கும் ஒரே மருத்துவர் இவர் மட்டுமே!</span></h4>
<h4>&#8221;மத்திய பட்ஜெட்டில் எய்ட்ஸ், போலியோ போன்ற நோய்களை கட்டுப்படுத்த சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அந்த அறிவிப்பிலேயே எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 53 லட்சத்திலிருந்து 25 லட்சத்திற்கு குறைந்திருப்பதாக சொல்கிறார்கள். நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும் பட்சத்தில் எதற்காக சென்ற ஆண்டைவிட அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும்? அரசு தந்திருக்கும் கணக்கின்படி பார்த்தாலும் எப்படி ஒரு வருடத்தில் லட்சக்கணக்கில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்? அத்தனை பேரும் இறந்திருக்க வேண்டும் அல்லது தவறான புள்ளிவிவரம் அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.<br />
போலியோவில் நடந்ததுபோல்தான் எய்ட்ஸிலும். எய்ட்ஸ் தடுப்புக்காக பரிந்துரைக்கப்படும் சிரிஞ்ச், காண்டம், இரத்தப் பரிசோதனை போன்றவற்றால் பயனடையும் மருந்து தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் மீதும் கார்ப்பொரேட் மருத்துவமனைகள் மீதும் அரசுகளுக்கு உள்ள கரிசனமே அதிக நிதி ஒதுக்கீட்டுக் காரணம்!<br />
காண்டமை பயன்படுத்துங்கள், ஊசியை ஒரே ஒருமுறை மட்டும் உபயோகியுங்கள் என்று சொல்பவர்கள், அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் கருவிகள் மூலம் பரவும் எய்ட்ஸ் பற்றி ஏன் எந்த எச்சரிக்கையையும் மக்களுக்கு சொல்வதில்லை?</h4>
<h4>
நமது மேன்மைக்குரிய நீதிமன்றங்களும்கூட இதே வழியில் சிந்திப்பதுதான் நமக்கு வேதனையாக இருக்கிறது. தைராய்டு வருவதாக சொல்லி, அயோடின் கலக்காத சாதாரண உப்பை தடை செய்ய உத்தரவு போடுகிறது நீதிமன்றம். கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோயை உண்டாக்கும் பீடி, சிகரெட், மதுபானங்களை தடை செய்ய நீதிமன்றங்கள் ஏன் உத்தரவு போடுவதில்லை-? மது, சிகரெட் பாக்கெட்டுகளின் மேல் எச்சரிக்கை வாசகம் அச்சடிக்கப்பட்டிருப்பதுபோல, அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகளின் மீதும் எச்சரிக்கை வாசகம் அச்சடித்து விற்க அனுமதித்திருக்கலாம். அப்படி எதுவும் செய்யவில்லை. அயோடின் கலந்த உப்புக்கு பெரிய அளவில் மார்க்கெட்டை பிடித்து வைத்திருக்கும் டாடா போன்ற நிறுவனங்கள் பலனடைவதைத்தான் அரசு விரும்புகிறது&#8221; என்று அரசின் தகிடுதத்தங்களை அடுக்கிக்கொண்டே போன மருத்துவர் புகழேந்தி சற்றே இடைநிறுத்தினார். பெண்களுக்கான நலத்திட்டங்களின் இப்படித்தானா? என்கிற கேள்விக்கு புகழேந்தியின் பதில்&#8230;</h4>
<h4>
&#8221;பொதுவான நோய்களைத்தவிர பெண்களுக்கென்றே தனிப்பட்ட சில மருத்துவ பிரச்னைகளும் உள்ளன. உலகில் சத்துக்குறைவால் பாதிக்கப்படும் நான்கில் மூன்று பெண்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதனால் பிரசவத்தின்போது தாயும் குழந்தையும் உயிரிழப்பது அதிகமாக நிகழ்கிறது. நம்முடைய ஆணாதிக்க குடும்பச்சூழலையும் இதற்கு காரணமாகக்கூற முடியும். இரத்தசோகையால் பாதிக்கப்படும் பெண்களும் இந்தியாவில்தான் அதிகம்! இரண்டரை கோடி பெண்கள் கர்ப்பபையில் தோன்றும் ஃபைபிராய்டு கட்டிகளால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகிறார்கள். இருந்தும் பெண்களுக்கான திட்டங்கள் அரசுகளால் மேற்கொள்ளப்படாமலேயே உள்ளன&#8221; என்கிறார்.</h4>
<h4>
&#8221;ஒவ்வொரு தனிமனிதனுடைய நலனிலும் அக்கறை செலுத்தவேண்டியது அரசின் கடமை. அரசோ, தனிநபர் ஒருவருக்கு செய்யும் மருத்துவச் செலவு 15 சதவீதம் மட்டுமே. மீதி 85 சதவீத மருத்துவ செலவுகளை மக்களே பார்த்துக்கொள்கிறார்கள்.<br />
வருடந்தோறும் போடப்படும் பட்ஜெட்டில் 2 சதவீதத்துக்குள்தான் மருத்துவநிதி ஒதுக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச நிதியான 5 சதவீதத்தைக்கூட எட்டவில்லை&#8221; என்றவர், அடுத்து சொன்ன விஷயம் நம் ஆட்சியாளர்களின் நிஜ சொரூபங்களை வெட்டவெளிச்சமாக்குகிறது.</h4>
<h4>
&#8221;வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்ற நோய்களுக்கு குறைந்தது 5 லட்சம் பேர் வருடந்தோறும் பலியாகிறார்கள். போலியோ உள்ளிட்ட தண்ணீர் மூலம் பரவும் அத்தனை நோய்களையும் வராமல் தடுக்க முடியும். மருத்து விஞ்ஞானிகள் மூளையை குழப்பி கண்டுபிடித்த வாயில் நுழையாத மருந்துகளால் அல்ல. பாதுகாக்கப்பட்ட தண்ணீரால்! நம் அரசியல்வாதிகளுக்கு தண்ணீரில் போதிய வருமானம் இல்லை என்று நன்றாக​​வே தெரியும்!&#8221; மருத்துவர் புகழேந்தி ஆட்சியாளர்களை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.</h4>
<br /> Tagged: <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/'>அரசியல்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/'>சமூகம்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%ae%e0%af%87%e0%ae%be%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf/'>மருத்துவ மோசடி</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/mvnandhini.wordpress.com/443/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/mvnandhini.wordpress.com/443/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/mvnandhini.wordpress.com/443/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/mvnandhini.wordpress.com/443/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/mvnandhini.wordpress.com/443/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/mvnandhini.wordpress.com/443/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/mvnandhini.wordpress.com/443/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/mvnandhini.wordpress.com/443/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/mvnandhini.wordpress.com/443/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/mvnandhini.wordpress.com/443/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/mvnandhini.wordpress.com/443/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/mvnandhini.wordpress.com/443/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/mvnandhini.wordpress.com/443/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/mvnandhini.wordpress.com/443/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=443&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://mvnandhini.wordpress.com/2010/05/26/%e2%80%8b%e0%ae%aa%e0%af%87%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e2%80%8b%e0%ae%af%e0%af%87%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%af%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%81%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c403bc00d4b681b8c57c4c84bcd40832?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">மு.வி.நந்தினி</media:title>
		</media:content>

		<media:content url="http://mvnandhini.files.wordpress.com/2010/05/polio_vaccine_in_jakarta.jpg" medium="image">
			<media:title type="html">Polio_vaccine</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>&#8220;ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்!&#8221; &#8211; அசோகமித்திரன்</title>
		<link>http://mvnandhini.wordpress.com/2010/05/21/%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/</link>
		<comments>http://mvnandhini.wordpress.com/2010/05/21/%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/#comments</comments>
		<pubDate>Fri, 21 May 2010 09:49:08 +0000</pubDate>
		<dc:creator>மு.வி.நந்தினி</dc:creator>
				<category><![CDATA[அசோகமித்திரன்]]></category>
		<category><![CDATA[இந்துத்துவம்]]></category>
		<category><![CDATA[ஊடகம்]]></category>
		<category><![CDATA[சாதி]]></category>

		<guid isPermaLink="false">http://mvnandhini.wordpress.com/?p=434</guid>
		<description><![CDATA[அப்போது எனக்கு இலக்கியத்தின் மீது பேரார்வம். தேடித்தேடி இலக்கியங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். பத்திரிகை தொழில் காரணமாக இலக்கியத்தின் மீது ஆர்வம் வந்ததா? அல்லது இலக்கிய ஆர்வத்தை என் தொழிலுக்கு பயன்படுத்திக் கொண்டேனா? எனத் தெரியவில்லை. ஆனால் இலக்கியம் படிப்பதையும், அதைப் பற்றி எழுதுவதையும் மிகவும் விரும்பியே செய்தேன். ஆரம்ப நிலை வாசகி என்பதால் எழுத்தாளர்களைத் தேடிப் போவதும் விருப்பமாய் இருந்தது. எழுத்துக்கும் நிஜத்துக்கும் நிறைய வித்தியாசங்களை பலரிடம் கண்டேன். உடைந்த பிம்பங்கள் குறித்து எனக்கு வருத்தமும் இல்லை, வியப்பும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=434&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<h4><span style="color:#ff0000;">அப்போது எனக்கு இலக்கியத்தின் மீது பேரார்வம். தேடித்தேடி இலக்கியங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். பத்திரிகை தொழில் காரணமாக இலக்கியத்தின் மீது ஆர்வம் வந்ததா? அல்லது இலக்கிய ஆர்வத்தை என் தொழிலுக்கு பயன்படுத்திக் கொண்டேனா? எனத் தெரியவில்லை. ஆனால் இலக்கியம் படிப்பதையும், அதைப் பற்றி எழுதுவதையும் மிகவும் விரும்பியே செய்தேன். ஆரம்ப நிலை வாசகி என்பதால் எழுத்தாளர்களைத் தேடிப் போவதும் விருப்பமாய் இருந்தது. எழுத்துக்கும் நிஜத்துக்கும் நிறைய வித்தியாசங்களை பலரிடம் கண்டேன். உடைந்த பிம்பங்கள் குறித்து எனக்கு வருத்தமும் இல்லை, வியப்பும் இல்லை! நானும் என்னுடன் வந்திருந்த புகைப்படக்காரரும் என்ன ஜாதி என்று அசோகமித்திரன் கேட்டதையும் அதே மனநிலையில் தான் எதிர்கொண்டேன். சில கட்டுரைகள், சில சிறுகதைகள் தவிர அசோகமித்திரனை அதிகம் படித்ததில்லை. கட்டாயம் படிக்கவேண்டும் என்று வாங்கி வைத்திருக்கும் அவருடைய நாவல்கள், சிறுகதைகள் தொகுப்புகள் புரட்டப்படாமல் கிடக்கின்றன. அந்த புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் நான் பிறந்த கிராமத்தில் வீட்டுக்குள் எங்களை அனுமதிக்காத லிங்காயத்து &#8216;சாமி&#8217;களை, அசோகமித்திரன் நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறார். பிரபல பத்திரிகை ஒன்றில் பணியாற்றியபோது எடுத்த பேட்டி இது. சுவாரஸ்ய குறைவு காரணமாக பேட்டி பிரசுரமாகவில்லை. பேட்டியில் சுவாரஸ்யத்தைக் கூட்டச் சொல்லி ஆசிரியர் குழு பலமுறை சொல்லியும் அதை செயல்படுத்த முடியாமைக்கான காரணங்களில் என் ஜாதி குறித்த அசோகமித்திரனின் கேள்விக்கு நிச்சயம் இடம் உண்டு. பழைய காகிதங்களுக்கு நடுவே இருந்த இந்த பேட்டியை கீழித்துப் போட மனம் வரவில்லை. பிரசுரிக்கிறேன்&#8230;</span></h4>
<h4><a href="http://mvnandhini.files.wordpress.com/2010/05/brahmin_strip_2_20050411.jpg"><img class="alignleft size-full wp-image-435" title="brahmin_strip_2_20050411" src="http://mvnandhini.files.wordpress.com/2010/05/brahmin_strip_2_20050411.jpg?w=120&#038;h=453" alt="" width="120" height="453" /></a><a href="http://mvnandhini.files.wordpress.com/2010/05/brahmin_strip_20050411.jpg"><img class="alignright size-full wp-image-436" title="brahmin_strip_20050411" src="http://mvnandhini.files.wordpress.com/2010/05/brahmin_strip_20050411.jpg?w=120&#038;h=453" alt="" width="120" height="453" /></a></h4>
<h4>&#8221;முதுமையை என்னால் கொண்டாட முடியவில்லை. இறக்கி வைக்க முடியாத மாபெரும் சுமையாக இருக்கிறது. அதை இறக்கி வைக்கும் காலத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்&#8221; என்கிறார் அசோகமித்திரன். அறிமுகம் தேவையில்லாத தமிழ் இலக்கிய உலகின் மூத்த ஆளுமை.</h4>
<h4>&#8221;என்னுடைய இளமை பருவத்தில் செகந்திராபாத்திலிருந்து சென்னை வந்தேன். ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக வேலை. அப்போதிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். நாடகத்தின் முடிவு நான் எழுதிய முதல் சிறுகதை. அந்த வேலையிலிருந்து விலகி முழு நேர எழுத்தாளனாகி அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. இடையே இருபத்தி மூன்று ஆண்டுகள் கணையாழி ஆசிரியராக இருந்தேன். எல்லாமே அனுபவம்தான். வாழ்க்கையில் எல்லாவிதமான அனுபவங்களையும் கடந்துவர வேண்டியிருக்கிறது. அந்த அனுபவங்களே படைப்புகளாகின்றன&#8221;</h4>
<h4><strong><span style="color:#ff0000;">&#8221;தமிழ் இலக்கிய சூழல் தற்போது எப்படியுள்ளது?&#8221;</span></strong></h4>
<h4>&#8221;தமிழ் ஜொலிக்கிற காலம் இது. நிறைய படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள். நிறைய புத்தகங்கள் வெளிவருகின்றன. என்னால் முடிந்தவரை எல்லா படைப்பாளிகளையும் படைப்புகளையும் வாசிக்கிறேன். ஒரு காலத்தில் தீவிர எழுத்தை சிற்றிதழ்களில்தான் பார்க்க முடியும். இன்று வெகுஜன பத்திரிகைளே தீவிர எழுத்துக்களை தேடிப்பிடித்து பிரசுரிக்கின்றன. சிற்றிதழ்களின் தேவையும் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. நிறைய படைப்புகள் வெளிவந்தாலும் சமகாலத்தில் ஒரு படைப்பு சிறந்தது என்று சொல்லிவிட முடியாது. அப்படி கொண்டாடப்பட்ட எத்தனையோ படைப்புகள் காலப்போக்கில் காணாமல் போயிருக்கின்றன. கல்கி எழுதிய போது இதெல்லாம் எழுத்தா என்ற கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று அவருடைய எழுத்து கொண்டாடப்படுகிறது. அதனால் ஒரு படைப்பு சிறந்ததா? இல்லையா? என்பதை பத்து, இருபது வருடங்கள் கழித்துதான் தெரிந்துகொள்ள முடியும்&#8221;</h4>
<h4><span style="color:#ff0000;"><strong>&#8221;சமீப காலங்களில் நீங்கள் எதைப்பற்றி பேசினாலும் அது சர்ச்சைக்குரியதாகிறதே?&#8221;</strong></span></h4>
<h4>&#8221;நிஜத்தை பதிவு செய்வதில் எனக்கு விருப்பம் அதிகம். எழுத்தைப் போலவே தான் நானும் நிஜமாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு இறை நம்பிக்கை உண்டு. மனிதர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத மனக்கஷ்டங்களை கடவுளிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும் என்று திடமாக நம்புகிறேன். இதில் எந்தவித போலித்தனத்தையும் காட்டவில்லை. அதுபோலவே சில சமயம் எதார்த்தமாக சொல்லிப்போகிற வார்த்தைகள் சர்ச்சைகள் ஆகிவிடுகின்றன. ஒரு கலைஞன் மீது சொல்லப்படுகிற இப்படிப்பட்ட அவதூறுகள் எவ்வளவு தூரம் அந்த கலைஞனையும் அவனுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனாலும் இந்த அவதூறுகள் எல்லாம் உண்மையான வாசகனையோ, படைப்பையோ ஒருபோதும் பாதிப்பதில்லை.&#8221;</h4>
<h4><span style="color:#ff0000;"><strong>&#8221;ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தவர் நீங்கள். அதை விட்டுவிட்டு தமிழிலேயே தொடர்ந்து இயங்குவது பற்றி வருத்தம் உண்டா?&#8221;</strong></span></h4>
<h4>&#8221;தமிழின் வசீகரம் என்னை ஆட்கொண்டதால் ஆங்கிலத்தில் எழுதுவதை விட்டுவிட்டேன். ஒரு முறை வி.எஸ்.நைபால் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதியிருந்தீர்களானால் நிச்சயமாக உங்களுக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்றார். ஆனால் எனக்கு தமிழில் எழுதுவதில் வருத்தம் ஒன்றும் இல்லை. எழுத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்ததால் குடும்பத்தை சரியாக கவனிக்க முடியவில்லை என்கிற மனக்குறை இப்போது அழுத்துகிறது. சில தீர்க்கமான முடிவுகளை நான் எந்தவித பலாபலன்களையும் எதிர்பார்க்காமல்தான் எடுக்கிறேன்.&#8221;</h4>
<h4><strong><span style="color:#ff0000;">படங்கள் நன்றி : அவுட்லுக்</span></strong></h4>
<h4><strong><span style="color:#ff0000;">&#8220;நாங்கள் (பார்ப்பனர்கள்) யூதர்களைப் போல் வாழ்கிறோம்&#8221; என்கிற அசோகமித்திரனின் அவுட்லுக் கட்டுரைக்காக போடப்பட்ட சித்திரங்கள் இவை.</span></strong></h4>
<br /> Tagged: <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/'>அசோகமித்திரன்</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/mvnandhini.wordpress.com/434/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/mvnandhini.wordpress.com/434/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/mvnandhini.wordpress.com/434/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/mvnandhini.wordpress.com/434/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/mvnandhini.wordpress.com/434/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/mvnandhini.wordpress.com/434/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/mvnandhini.wordpress.com/434/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/mvnandhini.wordpress.com/434/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/mvnandhini.wordpress.com/434/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/mvnandhini.wordpress.com/434/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/mvnandhini.wordpress.com/434/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/mvnandhini.wordpress.com/434/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/mvnandhini.wordpress.com/434/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/mvnandhini.wordpress.com/434/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=434&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://mvnandhini.wordpress.com/2010/05/21/%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>25</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c403bc00d4b681b8c57c4c84bcd40832?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">மு.வி.நந்தினி</media:title>
		</media:content>

		<media:content url="http://mvnandhini.files.wordpress.com/2010/05/brahmin_strip_2_20050411.jpg" medium="image">
			<media:title type="html">brahmin_strip_2_20050411</media:title>
		</media:content>

		<media:content url="http://mvnandhini.files.wordpress.com/2010/05/brahmin_strip_20050411.jpg" medium="image">
			<media:title type="html">brahmin_strip_20050411</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கதைக்கான முடிவு உங்களிடமே &#8211; புதுமையான புத்தக அனுபவம்!</title>
		<link>http://mvnandhini.wordpress.com/2010/05/06/%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae/</link>
		<comments>http://mvnandhini.wordpress.com/2010/05/06/%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Thu, 06 May 2010 13:01:33 +0000</pubDate>
		<dc:creator>மு.வி.நந்தினி</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அன்சுமணி ருத்ரா]]></category>
		<category><![CDATA[புத்தக அறிமுகம்]]></category>
		<category><![CDATA[Scholastic India]]></category>

		<guid isPermaLink="false">http://mvnandhini.wordpress.com/?p=427</guid>
		<description><![CDATA[இது வீடியோ கேம்ஸ் காலம். குழந்தைகளை மட்டுமல்லாது, முப்பதுகளைத் தொட்ட இளைஞர்களையும் கவர்ந்த பிளே ஸ்டேஷன் என்னும் வீடியோ கேம்ஸ் பாணியில் உருவாக்கப்பட்டதே &#8216;தி எனிமி ஆஃப் மை எனிமி&#8217;(The Enemy of my enemy)-யின் கதைக்களம். அதாவது கதையின் அடுத்த அடுத்த கட்டங்களை வாசகர்களே முடிவு செய்வார்கள். முடிவும் வாசகரின் விருப்பத்தைப் பொறுத்தது. தி எனிமி ஆஃப் மை எனிமி முதல் பாகத்தின் கதை இதுதான்&#8230;சூரிய தேவதை பூமியில் ஓர் அழகிய இளம் பெண்ணாக அவதரிக்கிறாள். [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=427&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>இ</strong>து வீடியோ கேம்ஸ் காலம். குழந்தைகளை மட்டுமல்லாது, முப்பதுகளைத் தொட்ட இளைஞர்களையும் கவர்ந்த பிளே ஸ்டேஷன் என்னும் வீடியோ கேம்ஸ் பாணியில் உருவாக்கப்பட்டதே &#8216;தி எனிமி ஆஃப் மை எனிமி&#8217;(The Enemy of my enemy)-யின் கதைக்களம். அதாவது கதையின் அடுத்த அடுத்த கட்டங்களை வாசகர்களே முடிவு செய்வார்கள். முடிவும் வாசகரின் விருப்பத்தைப் பொறுத்தது. தி எனிமி ஆஃப் மை எனிமி முதல் பாகத்தின் கதை இதுதான்&#8230;சூரிய தேவதை பூமியில் ஓர் அழகிய இளம் பெண்ணாக அவதரிக்கிறாள். அவள் எடுக்கும் அசாதாரண முடிவால் ஜப்பான் நகரம் சிற்பமாக உறைந்துபோய்விடுகிறது. அதோடு அந்நகரம் மட்டும் எப்போதும் பகலாகவும் உலகின் மற்ற இடங்கள் எப்போதும் இரவாகவும் இருக்கும்படி சபிக்கப்படுகிறது. இதை கதையின் நாயகனான ஜப்வாலா  நினைத்தால் மட்டுமே மாற்ற முடியும். சாகச நாயகனான ஜப்வாலாவின் அடுத்தடுத்த நகர்வுகளை தீர்மானித்து, உலகுக்கு ஒளியேற்றி வைக்கவேண்டிய பொறுப்பு வாசகரிடமே.</p>
<p><a href="http://mvnandhini.files.wordpress.com/2010/05/cover1-50.jpg"><img class="aligncenter size-full wp-image-428" title="enemy1 FINAL" src="http://mvnandhini.files.wordpress.com/2010/05/cover1-50.jpg?w=459&#038;h=322" alt="" width="459" height="322" /></a><br />
முதல் பாகத்தில் உலகத்துக்கு ஒளியேற்றி வைக்க பாடுபடும் ஜப்வாலா, இரண்டாம் பாகத்தில் ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு என்ற பெயர் கொண்ட பப்பூன்களை தேடிப் பயணிக்கிறார். அன்டார்டிகாவில் இருக்கும் உலகத்தையே கைக்குள் வரவழைக்கும் சக்தி படைத்த மந்திர மையைத் தேடிப்போகும் பப்பூன்களை கண்டுபிடித்து ஜப்வாலாவிடம் ஒப்படைக்கும் பணி வாசகருடையது.</p>
<p><a href="http://mvnandhini.files.wordpress.com/2010/05/cover-final-1.jpg"><img class="aligncenter size-full wp-image-429" title="Cover-Final-1" src="http://mvnandhini.files.wordpress.com/2010/05/cover-final-1.jpg?w=460&#038;h=327" alt="" width="460" height="327" /></a><br />
புதுமையான கதை சொல்லும் யுத்தியின் மூலம் முடிவில்லா கற்பனை உலகத்துக்கு அழைத்துச்செல்கிறது தி எனிமி ஆஃப் மை எனிமி &#8211; பாகம் 1 மற்றும் 2. எளிய ஆங்கில நடையில் எழுதியிருக்கிறார் புத்தக ஆசிரியர் அன்சுமணி ருத்ரா. இந்தியாவில் வெளியாகும் முதல் மல்டிபிளேயர் கேம்புக் என்னும் அறிமுகத்தோடு வந்திருக்கும் இந்த புத்தகம், குழந்தைகளுக்கான கதையும் புதிர் விளையாட்டும் கொண்ட டபுள் ட்ரீட்.<br />
<strong>The Enemy of my enemy<br />
Banana Republic &#8211; The Enemy of my enemy 2</strong><br />
விலை : ரூ. 90<br />
<strong>ஆசிரியர் : Anshumani Ruddra</strong><br />
<strong>வெளியீடு : Scholastic India</strong></p>
<br /> Tagged: <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be/'>அன்சுமணி ருத்ரா</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/'>புத்தக அறிமுகம்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/scholastic-india/'>Scholastic India</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/mvnandhini.wordpress.com/427/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/mvnandhini.wordpress.com/427/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/mvnandhini.wordpress.com/427/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/mvnandhini.wordpress.com/427/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/mvnandhini.wordpress.com/427/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/mvnandhini.wordpress.com/427/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/mvnandhini.wordpress.com/427/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/mvnandhini.wordpress.com/427/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/mvnandhini.wordpress.com/427/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/mvnandhini.wordpress.com/427/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/mvnandhini.wordpress.com/427/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/mvnandhini.wordpress.com/427/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/mvnandhini.wordpress.com/427/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/mvnandhini.wordpress.com/427/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=427&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://mvnandhini.wordpress.com/2010/05/06/%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c403bc00d4b681b8c57c4c84bcd40832?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">மு.வி.நந்தினி</media:title>
		</media:content>

		<media:content url="http://mvnandhini.files.wordpress.com/2010/05/cover1-50.jpg" medium="image">
			<media:title type="html">enemy1 FINAL</media:title>
		</media:content>

		<media:content url="http://mvnandhini.files.wordpress.com/2010/05/cover-final-1.jpg" medium="image">
			<media:title type="html">Cover-Final-1</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>புலி உறுமல் கேட்குமா?</title>
		<link>http://mvnandhini.wordpress.com/2010/04/01/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/</link>
		<comments>http://mvnandhini.wordpress.com/2010/04/01/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Thu, 01 Apr 2010 08:12:30 +0000</pubDate>
		<dc:creator>மு.வி.நந்தினி</dc:creator>
				<category><![CDATA[ஆனைமலை]]></category>
		<category><![CDATA[கழிமுகப்பகுதி]]></category>
		<category><![CDATA[காட்டுயிர்]]></category>
		<category><![CDATA[நேச்சர் டிரஸ்ட்]]></category>
		<category><![CDATA[புலி]]></category>

		<guid isPermaLink="false">http://mvnandhini.wordpress.com/?p=423</guid>
		<description><![CDATA[புலிகளை வீரத்தின் அடையாளமாகக் கருதி கொண்டாடிய சமூகம் நம்முடையது. இன்று அதே சமூகத்தின் சந்ததிகள்தான் புலிகள் எங்கே இருக்கின்றன? என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் நம் தேசிய விலங்கான புலிகள் எஞ்சியிருப்பது வெறும் 1411 மட்டுமே. புலி ஒரு காட்டுயிர் மட்டுமல்ல, வளமான காட்டின் அடையாளம். அதாவது நாமும் நமக்குப் பின்னால் வரும் சந்ததிகளும் சிறப்பான வாழ்வை வாழப்போகிறோம் என்பதற்கான குறியீடு. அடர்ந்து வளர்ந்த மரங்களும் புல்லும் புதரும் நிறைந்த காட்டில் அதை உணவாக உண்ணும் முயல், மான், [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=423&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color:#ff6600;"><strong>புலிகளை வீரத்தின் அடையாளமாகக் கருதி கொண்டாடிய சமூகம் நம்முடையது. இன்று அதே சமூகத்தின் சந்ததிகள்தான் புலிகள் எங்கே இருக்கின்றன? என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் நம் தேசிய விலங்கான புலிகள் எஞ்சியிருப்பது வெறும் 1411 மட்டுமே. </strong></span></p>
<p>புலி ஒரு காட்டுயிர் மட்டுமல்ல, வளமான காட்டின் அடையாளம். அதாவது நாமும் நமக்குப் பின்னால் வரும் சந்ததிகளும் சிறப்பான வாழ்வை வாழப்போகிறோம் என்பதற்கான குறியீடு. அடர்ந்து வளர்ந்த மரங்களும் புல்லும் புதரும் நிறைந்த காட்டில் அதை உணவாக உண்ணும் முயல், மான், மாடு, காட்டுப் பன்றி, குரங்கு போன்ற உயிரினங்கள் வாழும். இவற்றின் எண்ணிக்கை கூடும்போது புலி, சிறுத்தை, நரி, ஓநாய் உயிரினங்களின் உணவுத் தேவை தீர்ந்து அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. இந்த மூன்றும் சங்கிலித்தொடராக தொடரும்போதுதான் காடு தன் இயல்பைத் தொலைக்காமல் இருக்கிறது. பருவ மழை சரியான பருவத்தில் பொழிந்து ஆறு பெருகி மக்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது. எல்லாமே ஒன்றொடொன்று தொடர்புடையவை. சென்னையில் இருக்கும் நான், மேற்கு தொடர்ச்சி மலையின் ஏதோ ஒரு சரணாயத்தில் வாழும் புலிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என ஏன் கவலைப்பட வேண்டும் என கேட்டுவிட முடியாது! நம் ஒவ்வொருவரின் கவனத்துக்கும் அக்கறைக்கும் உரியவை புலிகள். காடுகள் வேகமாக அழிக்கப்படுவதாலும் தோலுக்காக வேட்டையாடப்படுவதாலும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அழிவின் விளிம்பில் இருக்கும் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசும் தன்னார்வர்லர்களும் முழுமூச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த செயல்பாடுகளால் புலிகளின் எண்ணிக்கையும் சக இரையுண்ணிகள், அவற்றின் இரைகள், தாவர வளம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக வருடந்தோறும் மத்திய வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.<br />
கடந்த ஒன்பது வருடங்களாக வனவிலங்குகள் கணக்கெடுப்பில் பங்கேற்று வருகிறார் சென்னையிலிருந்து இயங்கிவரும் நேச்சர் டிரஸ்ட் அமைப்பைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் திருநாரணன்.<br />
&#8220;தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வனங்களில் நடந்த கணக்கெடுப்பில் பங்கேற்று வருகிறேன். இந்த வருடம் ஆனைமலை பகுதியில் கணக்கெடு எடுத்தோம். புலிகள் கணக்கெடுப்பு என்று பெயர் இருந்தாலும் காட்டில் உள்ள அதாவது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் இருக்கும் மரம், செடி, விலங்குகள், பறவைகள் என அத்தனையையும் கணக்கெடுக்க வேண்டும். இதுதான் செயல்முறை. இதை வைத்துதான் புலிகளின் எண்ணிக்கையும் வாழ்வாதாரமும் கணிக்கப்படும்.</p>
<p>அந்த வகையில் ஆனைமலை சரகம் வளமோடு இருக்கிறது என்பதை நேரிடையாக பார்க்க முடிந்தது.<br />
இவ்வளவு உயிரினங்கள் இருக்கின்றன என்று ஆறே நாட்களில் கணக்கிட்டு சொல்லிவிட முடியாது. புலி, சிறுத்தை போன்றவற்றை நேரிடையாக பார்ப்பதும் அரிதான விஷயம். அதனால் அவற்றின் கால்தடங்கள், கழிவுகள், மரங்களின் மேல் அவை ஏற்படுத்திச் சென்ற உராய்வுகள் இவற்றை வைத்து கணக்கெடுப்பு செய்கிறோம். மான் இனத்தில் பல்வேறு வகைகள் உண்டு. அவற்றின் கழிவு பொருட்களை வைத்துதான் அவை இந்த வகையைச் சேர்ந்தவை என்று குறித்துக்கொள்கிறோம். நீர் நிலைகளில் விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். அங்கு அவை விட்டுச்சென்ற அடையாளங்களையும் சேகரிப்போம். நீர்நிலைகளை வைத்து யானைகளின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள முடியும். இதெல்லாம் மறைமுக கணக்கெடுப்பில் வருபவை. பெரும்பாலும் காட்டுயிர் கணக்கெடுப்பில் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. <strong><strong>» </strong></strong><strong><strong>» </strong></strong><strong><strong>» </strong></strong><strong><strong>» </strong></strong></p>
<h3><a href="http://mvnandhini.files.wordpress.com/2010/04/dsc_0593.jpg"><img class="aligncenter size-full wp-image-424" title="DSC_0593" src="http://mvnandhini.files.wordpress.com/2010/04/dsc_0593.jpg?w=460&#038;h=305" alt="" width="460" height="305" /></a></h3>
<h3><span style="color:#ff00ff;">பல காலமாக பின்பற்றிவரும் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கூறமுடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு சொல்லும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள செல்லுலர் மற்றும் மாலிக்குலர் மையம் (Centre for cellular and Molecular Biology) புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது புலிகள் விட்டுச்சென்ற தடயங்களிலிருந்து அவற்றின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து அவற்றின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதே இந்த முறை. உயிரினம் ஒவ்வொன்றுக்கும் டிஎன்ஏ அமைப்பு வேறுபட்டு இருக்கும். இதை வைத்து துல்லியமாக புலிகளின் எண்ணிக்கை சொல்ல முடியும் என்கிறது இந்த ஆராய்ச்சி நிறுவனம். முதுமலை வனசரணாலயத்தில் இந்த கணக்கெடுப்பு முறை சோதனை செய்து பார்க்கப்பட்டிருக்கிறது. இது ஆராய்ச்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டால் அனைத்து சரணாலயங்களிலும் இந்த முறை செயல்படுத்தப்படும் என்கிறது இந்நிறுவனம்.</span></h3>
<p><strong>« </strong><strong>« </strong><strong>«</strong> காட்டுயிர் வளத்தை மட்டுமல்ல, காட்டை நம்பி, அவற்றை சுற்றி வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையை கவனிப்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற வகையில் முக்கியமான பணி. இந்த வருடம் ஆனைமலையில் வசிக்கும் முதுவர் பழங்குடி மக்களை சந்திக்க முடிந்தது. காட்டின் நடுவே உடுவம்பாறை, சங்கரன்குடி, பரமன்குடி போன்ற வசிப்பிடங்களில் அவர்களைப் பார்த்தோம். காடு, வனஉயிரினங்கள் குறித்த அவர்களின் அறிவு வியத்தலுக்குரியது. பழங்குடி இன மக்களைத்தான் வேட்டை தடுப்பு நடவடிக்கைக்காக அரசு பயன்படுத்திவருகிறது. காடு குறித்த அறிவுச்செல்வம் மிக்க இந்த மக்கள் வாழ்வாதாரத்தில் மிகவும் கீழ்நிலையில் இருக்கிறார்கள். இவர்களின் அறிவை பயன்படுத்திக் கொள்ளும் அரசு, அதற்குரிய வேலை உள்ளிட்ட பொருளாதார தேவைகளை செய்துகொடுக்க வேண்டும்&#8221; என்ற திருநாரணன்&#8230;<strong><strong>» </strong></strong><strong><strong>» </strong></strong><strong><strong>» </strong></strong><strong><strong>» </strong></strong></p>
<h3><span style="color:#ff00ff;">அடர் காடுகளில் மட்டுமே புலிகள் வசிக்கும். கடலும் ஆறு சேரும் முகத்துவாரப் பகுதியில் வசிப்பதால் வங்காளப் புலிகள் தனிச்சிறப்பானவை. அலையாத்தி(மாங்குரோவ்) மரங்கள் நிறைந்த சுந்தரவனக்காடுகளில் வாழும் வங்காளப் புலிகள், இன்னும் 60 வருடங்களில் அழிந்து விடும் என எச்சரித்துள்ளது உலக காட்டுயிர் பாதுகாப்புக்கான நிதியம்.</span></h3>
<p><strong>« </strong><strong>« </strong><strong>« </strong>&#8220;ஆனைமலை சரகத்தில் காட்டுவளம் நல்லநிலையில் இருந்தாலும் காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தலையீடு அதிகமாகவே இருக்கிறது. புதிதாக முளைத்திருக்கும் தேயிலை தோட்டங்களும் அதை ஒட்டி எழுந்துள்ள குடியிருப்புகளும் காட்டுயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடியவை. இப்படி காட்டின் பகுதிகளை அபகரித்துக்கொண்டு, பின் நாளில் புலிகள் வேட்டையாடுகின்றன, யானைகள் அட்டகாசம் செய்கின்றன என்று கூச்சலிடுவதில் எந்த நியாயமும் இல்லை!&#8221; என்று முடித்தார்.<strong></strong></p>
<p><span style="color:#000000;"><br />
நாடு முழுவதும் நடந்த கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு காட்டுயிர் ஆர்வலர்களுக்கு இது ஆறுதலுக்குரிய செய்திதான் என்றாலும் இந்த வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு இன்னும் நிறைவே செய்யவேண்டியிருக்கிறது.</span></p>
<br /> Tagged: <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%86%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88/'>ஆனைமலை</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/'>காட்டுயிர்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/'>நேச்சர் டிரஸ்ட்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf/'>புலி</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/mvnandhini.wordpress.com/423/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/mvnandhini.wordpress.com/423/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/mvnandhini.wordpress.com/423/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/mvnandhini.wordpress.com/423/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/mvnandhini.wordpress.com/423/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/mvnandhini.wordpress.com/423/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/mvnandhini.wordpress.com/423/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/mvnandhini.wordpress.com/423/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/mvnandhini.wordpress.com/423/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/mvnandhini.wordpress.com/423/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/mvnandhini.wordpress.com/423/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/mvnandhini.wordpress.com/423/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/mvnandhini.wordpress.com/423/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/mvnandhini.wordpress.com/423/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=423&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://mvnandhini.wordpress.com/2010/04/01/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c403bc00d4b681b8c57c4c84bcd40832?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">மு.வி.நந்தினி</media:title>
		</media:content>

		<media:content url="http://mvnandhini.files.wordpress.com/2010/04/dsc_0593.jpg" medium="image">
			<media:title type="html">DSC_0593</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள்</title>
		<link>http://mvnandhini.wordpress.com/2010/03/31/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/</link>
		<comments>http://mvnandhini.wordpress.com/2010/03/31/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/#comments</comments>
		<pubDate>Wed, 31 Mar 2010 08:17:10 +0000</pubDate>
		<dc:creator>மு.வி.நந்தினி</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[கர்ப்பப்பை வாய் புற்றுநோய்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[டாக்டர் டயானா ஹார்ப்பர்]]></category>
		<category><![CDATA[பழங்குடிகள்]]></category>
		<category><![CDATA[பழங்குடியினப் பெண்கள்]]></category>
		<category><![CDATA[மருத்துவ மோசடி]]></category>

		<guid isPermaLink="false">http://mvnandhini.wordpress.com/?p=416</guid>
		<description><![CDATA[&#8216;உங்கள் வீட்டு 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பு மருந்து கொடுங்கள்&#8217; என சில மாதங்களுக்கு முன் ரேவதி உள்ளிட்ட முன்னாள் நடிகைகள் ஒரு தொண்டு நிறுவனம் தயாரித்த விளம்பரத்தில் பிரச்சாரம் செய்தது நினைவில் இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தகைய பிரச்சாரங்கள் உதவலாம். ஆனால் இவற்றுக்கு இன்னொரு புறம் இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும். &#8216;நோய் வருவதற்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=416&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://mvnandhini.files.wordpress.com/2010/03/cs3.jpg"><img class="aligncenter size-full wp-image-417" src="http://mvnandhini.files.wordpress.com/2010/03/cs3.jpg?w=271&#038;h=200" alt="" width="271" height="200" /></a></p>
<p><strong>&#8216;உங்கள் வீட்டு 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பு மருந்து கொடுங்கள்&#8217; என சில மாதங்களுக்கு முன் ரேவதி உள்ளிட்ட முன்னாள் நடிகைகள் ஒரு தொண்டு நிறுவனம் தயாரித்த விளம்பரத்தில் பிரச்சாரம் செய்தது நினைவில் இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தகைய பிரச்சாரங்கள் உதவலாம். ஆனால் இவற்றுக்கு இன்னொரு புறம் இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும். </strong></p>
<p>&#8216;நோய் வருவதற்கு உண்டான காரணங்களை கண்டறிந்து அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்காமல், தடுப்பு மருந்துகளை பயன்படுத்துங்கள் என்கிற பிரச்சாரங்கள் மருந்து நிறுவனங்களின் பணப்பையை நிரப்புவதற்காக செய்யப்படுபவை&#8217; என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்ட மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து பற்றி ஒரு பகீர் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. ஆந்திராவில் சோதனைக்காக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை உட்கொண்ட மூன்று இளம்பெண்கள் உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்த இந்த மூவரும் பழங்குடி இன பெண்கள். இன்னொரு தகவல் என்னவென்றால் ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் பழங்குடி பெண்களுக்கு சோதனை ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து கொடுத்திருக்கிறார்கள். இந்த பெண்கள் இறந்ததற்கான காரணம் தடுப்பு மருந்தை உட்கொண்டதுதான் என்று தெள்ளத்தெளிவாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது. வழக்கம் போல ஆந்திர காவல் மற்றும் சுகாதாரத்துறை மூன்று பெண்களும் தற்கொலை செய்துகொண்டார் என அறிக்கை (டெக்கான் கிரானிக்கல் செய்தி) விட்டு, சம்பவத்தை மூடிமறைத்துவிட்டார்கள்.</p>
<p>இந்திய அரசு, பழங்குடி மக்கள் மேல் ஆபரேஷன் கிரீன் ஹண்டில் இறங்கியிருக்க, மற்றொரு புறம் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பழங்குடி பெண்களை சோதனை எலிகளாக்கி இருக்கின்றன. இந்த மருத்துவ அத்துமீறலை எமக்கு தெரியப்படுத்தியவர் மருத்துவர் வீ. புகழேந்தி. கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படுத் கதிர்வீச்சு அபாயம் குறித்து தொடர்ந்து குறல் எழுப்பி வருபவர். சர்ச்சை குறித்தும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்தும் இவரிடம் கேட்டோம்&#8230;</p>
<p>&#8220;இந்தியாவில் அதிக பெண்கள் பாதிப்புக்கும் உயிரிழப்புக்கும் உள்ளாவது சர்விக்கிள் கேன்சர் என்று சொல்லப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குத்தான். வருடத்திற்கு கிட்டத்தட்ட 75 ஆயிரம் பெண்கள் இறப்பதாகவும், ஒன்றரை லட்சம் பெண்களுக்கு இந்த புற்றுநோய் அறிகுறி கண்டறியப்படுவதாகவும் அரசு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>சிறு வயதிலேயே பாலியல் தொடர்பு (பால்ய திருமணங்கள் மூலமாக) ஏற்படுவது, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பாலியல் உறவு கொள்வது, பால் உறுப்புகளை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது, கர்ப்பத்தடை சாதனங்கள் பயன்படுத்துதல் போன்றவையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படக் காரணங்கள். இந்தக் காரணங்களை ஒதுக்கிவிட்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து குறித்துதான் இப்போது அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்&#8221; என்கிறார் டாக்டர் வீ. புகழேந்தி. தொடர்ந்த அவர்,</p>
<p>&#8220;இந்த புற்றுநோய் தடுப்பு மருந்தின் விலை 10 ஆயிரம் ரூபாய். தடுப்பு மருந்துகளை இலவசமாகப் போடுகிறோம் என்று கூவிக்கூவி அழைக்கும்போதே அலட்சியம் காட்டுபவர்கள் இருக்க, பத்தாயிரம் ரூபாய் கொடுத்து எத்தனை பேர் போடுவார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தின் பெரிய பெரிய கார்ப்பொரேட் மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்தை போடுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் Gardasil என்ற பெயர் கொண்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை, ஆந்திரா மற்றும் குஜராத்தில் வசிக்கும் 14 வயதுக்குக்கு உட்பட்ட (செக்ஸுவலாக ஆக்டிவ் ஆகும்முன் இந்தத் தடுப்பு மருந்து போடப்பட வேண்டும்) பழங்குடி பெண்கள் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை ரீதியில் அளித்திருக்கிறார்கள். மூன்று தவணைகளில் போடப்பட்ட இந்த மருந்தை மூன்றாவது தவணையாக உட்கொண்ட ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நடந்திருக்கிறது. தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதால்தான் இந்தப் பெண்கள் உயிரிழந்தார்கள் என மருத்துவபரிசோதனை முடிவுகள் சொல்கின்றன.</p>
<p>தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும்போது மயக்கம், தலைவலி, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு, அஜீரணக்கோளாறு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் எனவும் உச்சபட்சமாக உயிரிழப்பும் நிகழலாம் எனவும் இந்த மருந்தை கண்டுபிடித்த டாக்டர் டயானா ஹார்ப்பர் தெரிவித்திருக்கிறார். லண்டனில் 14 வயது இளம் பெண் ஒருவருக்கு தடுப்பு மருந்து கொடுத்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து டயானா ஹார்ப்பரே ஒப்புக்கொண்ட உண்மை இது. அதோடு இந்தத் தடுப்பு மருந்து புற்றுநோய் வந்தால் அதனுடைய தாக்கத்தை குறைக்குமே தவிர, முற்றிலும் வராமல் தடுக்காது என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.</p>
<p>இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடுதான் பழங்குடியின இளம்பெண்கள் சோதனை மிருகங்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்கள் விபரீத சோதனைகளுக்குப் பலியாவோர்களோ என்பதுதான் நம்முடைய கவலையாக இருக்கிறது.ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் தடுப்பு மருந்தின் விலை அதிகமாக இருக்கிறது என்று கவலைப்படுகிறார்களே தவிர, தடுப்பு மருந்தின் பக்கவிளைவுகள் குறித்து அக்கறைப்படவில்லை&#8221; என்று காட்டமான டாக்டர் வீ. புகழேந்தி, கர்ப்ப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டார்.</p>
<p>&#8220;ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பிரச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும். திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ளும் பழக்கம் கிராமப்புறங்களில்தான் அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. இத்தகைய காலகட்டத்தில் பாலியல் குறித்த சரியான விழிப்புணர்வை கட்டாயம் செய்தாக வேண்டும். அடுத்து, நாப்கினை உபயோகப்படுத்துவதன் அவசியம் குறித்தும் பால் உறுப்புகளை தூய்மையாக பராமரிப்பது குறித்தும் எடுத்துச் சொல்ல வேண்டும். அரசு, இவற்றை முழுவீச்சோடு செய்தாலே கர்ப்ப்பை வாய் புற்றுநோய் இறப்பு விகிதம் தன்னால் கீழே இறங்கிவிடும்&#8221; என்று முடித்தார்.</p>
<p><strong>கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து சர்ச்சை</strong><strong> குறித்து தெஹல்கா இதழ் விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. <a href="http://www.tehelka.com/story_main44.asp?filename=Ne200310coverstory.asp">படிக்க&#8230;</a></strong></p>
<br /> Tagged: <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%8b/'>கர்ப்பப்பை வாய் புற்றுநோய்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d/'>டாக்டர் டயானா ஹார்ப்பர்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>பழங்குடியினப் பெண்கள்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%ae%e0%af%87%e0%ae%be%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf/'>மருத்துவ மோசடி</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/mvnandhini.wordpress.com/416/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/mvnandhini.wordpress.com/416/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/mvnandhini.wordpress.com/416/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/mvnandhini.wordpress.com/416/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/mvnandhini.wordpress.com/416/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/mvnandhini.wordpress.com/416/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/mvnandhini.wordpress.com/416/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/mvnandhini.wordpress.com/416/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/mvnandhini.wordpress.com/416/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/mvnandhini.wordpress.com/416/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/mvnandhini.wordpress.com/416/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/mvnandhini.wordpress.com/416/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/mvnandhini.wordpress.com/416/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/mvnandhini.wordpress.com/416/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=416&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://mvnandhini.wordpress.com/2010/03/31/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c403bc00d4b681b8c57c4c84bcd40832?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">மு.வி.நந்தினி</media:title>
		</media:content>

		<media:content url="http://mvnandhini.files.wordpress.com/2010/03/cs3.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>வலைப்பதிவர்கள் குறித்து தினகரன் வசந்தம்&#8230;</title>
		<link>http://mvnandhini.wordpress.com/2010/03/29/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/</link>
		<comments>http://mvnandhini.wordpress.com/2010/03/29/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/#comments</comments>
		<pubDate>Mon, 29 Mar 2010 07:52:47 +0000</pubDate>
		<dc:creator>மு.வி.நந்தினி</dc:creator>
				<category><![CDATA[ஊடகம்]]></category>
		<category><![CDATA[தினகரன் வசந்தம்]]></category>
		<category><![CDATA[வலைப்பதிவர்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://mvnandhini.wordpress.com/?p=407</guid>
		<description><![CDATA[வலைப்பதிவர்கள் சங்கம் அமைப்பது குறித்து சூடான விவாதங்களைப் படித்தபோது, வலைப்பதிவர்கள் குறித்து நான் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. கூகுளில் தேடினேன் கிடைத்தது. சென்னைப் பட்டினம் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காமில் இருந்தது. நன்றியுடன் இங்கே பிரசுரித்து, சேமித்துக் கொள்கிறேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு குங்குமம் இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தினகரன் வசந்தம் இணைப்பின் பொறுப்பாசிரியர் சிவராமன் சார் கொடுத்த அசைண்மெண்ட் இது. அதே தேதியிட்ட வசந்தம் இணைப்பில் மு.வி. நந்தினி பெயரில் வேறு கட்டுரை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=407&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>வலைப்பதிவர்கள் சங்கம் அமைப்பது குறித்து சூடான விவாதங்களைப் படித்தபோது, வலைப்பதிவர்கள் குறித்து நான் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. கூகுளில் தேடினேன் கிடைத்தது. சென்னைப் பட்டினம் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காமில் இருந்தது. நன்றியுடன் இங்கே பிரசுரித்து, சேமித்துக் கொள்கிறேன்.</strong></p>
<p><a href="http://mvnandhini.files.wordpress.com/2010/03/dinakaran-news.png"><img class="aligncenter size-full wp-image-408" title="dinakaran-news" src="http://mvnandhini.files.wordpress.com/2010/03/dinakaran-news.png?w=459&#038;h=553" alt="" width="459" height="553" /></a><strong><br />
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு குங்குமம் இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தினகரன் வசந்தம் இணைப்பின் பொறுப்பாசிரியர் சிவராமன் சார் கொடுத்த அசைண்மெண்ட் இது. அதே தேதியிட்ட வசந்தம் இணைப்பில் மு.வி. நந்தினி பெயரில் வேறு கட்டுரை எழுதியிருந்ததால், கட்டுரை சாரா என்கிற புனைபெயரில் பிரசுரமானது.</strong></p>
<br /> Tagged: <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/'>தினகரன் வசந்தம்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>வலைப்பதிவர்கள்</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/mvnandhini.wordpress.com/407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/mvnandhini.wordpress.com/407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/mvnandhini.wordpress.com/407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/mvnandhini.wordpress.com/407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/mvnandhini.wordpress.com/407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/mvnandhini.wordpress.com/407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/mvnandhini.wordpress.com/407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/mvnandhini.wordpress.com/407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/mvnandhini.wordpress.com/407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/mvnandhini.wordpress.com/407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/mvnandhini.wordpress.com/407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/mvnandhini.wordpress.com/407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/mvnandhini.wordpress.com/407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/mvnandhini.wordpress.com/407/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=407&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://mvnandhini.wordpress.com/2010/03/29/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c403bc00d4b681b8c57c4c84bcd40832?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">மு.வி.நந்தினி</media:title>
		</media:content>

		<media:content url="http://mvnandhini.files.wordpress.com/2010/03/dinakaran-news.png" medium="image">
			<media:title type="html">dinakaran-news</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>&#8220;கோர்வையாக எழுதுகிறவர்களெல்லாம் பத்திரிகையாளர் ஆகிவிட முடியாது!&#8221; &#8211; ஜெயராணி</title>
		<link>http://mvnandhini.wordpress.com/2010/03/04/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://mvnandhini.wordpress.com/2010/03/04/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Thu, 04 Mar 2010 08:00:26 +0000</pubDate>
		<dc:creator>மு.வி.நந்தினி</dc:creator>
				<category><![CDATA[ஆணாதிக்கம்]]></category>
		<category><![CDATA[ஊடக பெண்கள்]]></category>
		<category><![CDATA[ஊடகப்பெண்கள்]]></category>
		<category><![CDATA[குடும்பம்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[ஜர்னலிஸம்]]></category>
		<category><![CDATA[ஜெயராணி]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[பத்திரிகை அறம்]]></category>
		<category><![CDATA[பாலியல்]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[விருது]]></category>

		<guid isPermaLink="false">http://mvnandhini.wordpress.com/?p=385</guid>
		<description><![CDATA[நான் ஜர்னலிஸம் மாணவி. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் படித்தேன். பேசுவதும் பழகுவதும் எழுதுவதும் பள்ளி நாட்களிலேயே எனக்கு இயல்பாகவே வந்தது. பட்டப்படிப்பு முடித்ததுமே நாளிதழ் ஒன்றில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது என்றாலும் ஜர்னலிஸம் படித்துவிட்டுதான் பத்திரிகையாளராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாழ்வில் இதுவரையிலும் எடுத்த மிகச் சரியான முடிவுகளில் அதுவும் ஒன்றென தோன்றுகிறது. எனக்கான எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்துவிட்டது ஜர்னலிஸம் படிப்புதான். புகைப்படக்கலையையும் அங்குதான் கற்றுக் கொண்டேன். தூக்குவதற்கு சிரமமான நிக்கான் மெட்டல் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=385&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://mvnandhini.files.wordpress.com/2010/03/jeyarani.jpg"><img class="aligncenter size-full wp-image-386" title="Jeyarani" src="http://mvnandhini.files.wordpress.com/2010/03/jeyarani.jpg?w=230&#038;h=320" alt="" width="230" height="320" /></a></p>
<p><strong>நா</strong>ன் ஜர்னலிஸம் மாணவி. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் படித்தேன். பேசுவதும் பழகுவதும் எழுதுவதும் பள்ளி நாட்களிலேயே எனக்கு இயல்பாகவே வந்தது. பட்டப்படிப்பு முடித்ததுமே நாளிதழ் ஒன்றில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது என்றாலும் ஜர்னலிஸம் படித்துவிட்டுதான் பத்திரிகையாளராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாழ்வில் இதுவரையிலும் எடுத்த மிகச் சரியான முடிவுகளில் அதுவும் ஒன்றென தோன்றுகிறது. எனக்கான எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்துவிட்டது ஜர்னலிஸம் படிப்புதான். புகைப்படக்கலையையும் அங்குதான் கற்றுக் கொண்டேன்.</p>
<p>தூக்குவதற்கு சிரமமான நிக்கான் மெட்டல் பாடி கேமராவை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றிய நாட்கள் தான் என் எல்லா பயணங்களுக்கும் மூலம். <strong>உலகமென்றால் அது வீட்டின் நான்கு சுவர்தான் என்று கற்றுக்கொடுத்த மிக கட்டுப்பாடானக் குடும்பத்திலிருந்து கற்பிதத்திலிருந்து விடுபட்டு என் கால்களையும் சிந்தனையையும் சுதந்திரப்படுத்திக் கொண்டேன்.</strong> நடந்து நடந்து இவ்வுலகைக் கடந்துவிடும் பேராவலில் சுற்றிய நாட்கள் அவை.     பயணமும் அதில் கிடைத்த அனுபவங்களும்தான் என்னை செதுக்கியது.</p>
<p>கோர்வையாக எழுத வருகிறவர்கள் யாரும் செய்தியாளராகிவிட முடியும் என்றாலும்.. பத்திரிகை அறம், சுதந்திரம் போன்ற அடிப்படை விஷயங்களை கற்றுத் தேர்ந்தது ஜர்னலிஸம் படித்த அந்த இரண்டாண்டுகளில்தான். என்ன மாதிரியான செய்தியாளராக இயங்கப் போகிறோம் என்று புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக என் கற்றல் காலம் அமைந்தது. அதற்காக, ஜர்னலிஸம் படித்தவர்கள் எல்லோருமே பத்திரிகை அறத்தை மீறாதவர்களாக இருப்பார்கள் என்றோ படிக்காதவர்கள் எல்லோரும் அறத்தை புறக்கணிக்கிறவர்கள் என்றோ சொல்ல வரவில்லை.</p>
<p>பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் இன்று இருக்கிற நிலையில், ஊடக அறம் பற்றின புரிதலோ விழிப்புணர்வோ இல்லையென்றால் நிச்சயம் சுரணையற்ற செய்தியாளராகிவிட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் <strong>புதியவர் ஒருவருக்கு செய்தி எழுத கற்றுத் தரும் ஊடகங்கள் ஒருபோதும் அறத்தை போதிப்பதில்லை. </strong>அதனால்தான் பெரும்பாலும் உரிமைகளை பாதிக்கிற செய்திகளாகவே நாம் படிக்கவும் பார்க்கவும் கிடைக்கின்றன. ஜர்னலிஸம் படிக்கிறவர்களுக்கு பத்திரிகை அறம் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இயல்பாக அமைகிறது. பின்னர் பணி காலத்தில் அதை செயல் படுத்த வேண்டுமா வேண்டாமா என்ற முடிவு அவரவர் கைகளில். கற்றல் வழி நடத்தல் என்பது என் பிடிவாதம் என்பதால் இந்த பத்தாண்டுகளில் பத்திரிகை அறத்தை கேள்விக்குள்ளாக்குகிற எந்த செய்தியையுமே நான் எழுதவில்லை.</p>
<p>எழுத்து மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தேன் என்று சொல்வதற்கில்லை. அதனால்தான் பத்திரிகை துறையை தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னால் அது பொய். தனிப்பட்ட முறையில் என் எல்லா உணர்வுகளுக்கும் உகந்ததாக இந்த துறை அமைந்தது. ஒவ்வொருவருக்கும் அவரவரரின் திறமைக்கும் குணத்திற்கும் ஏற்ற வேலை என்று ஏதாவது இருக்குமில்லையா? என் குணத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தியது பத்திரிகைத் துறை. காரணம் எழுத்து, புகைப்படம், பயணம் என்ற மூன்று அற்புதமான விஷயங்களையும் என்னால் இங்கு செயல்படுத்த முடிந்தது.  விரும்பியதையே தொழிலாக, வேலையாக செய்வது எத்தனை சுகம்! எத்தனையோ இன்னல்களுக்கிடையில் அந்த சுகத்தை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.</p>
<p>எல்லா நவீன துறைகளைப் போலவும், பெண்கள் ஊடகப் பணிக்கு வருவதற்கு குடும்பங்கள் தடை போடுகின்றன என்பது உண்மைதான். சில ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே வசிக்கக்கூடிய கிராமம் ஒன்றிலிருந்து சென்னை நோக்கிய என் பயணம் அத்தனை எளிதானதாக அமைந்துவிடவில்லை. பெரும்பாலான பெண்களுக்கு இந்த சவால் இருக்கிறது. இந்த சவால்களை ஏதாவது இயக்கங்கள் வந்துதான் எதிர்கொள்ள வேண்டும் என்றில்லை. தடைகளைத் தாண்டும் மனப் பக்குவத்தை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது. ஊடகத் துறையில் பெண்கள் முதல் தலைமுறையாக காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டுப்பாடுகளோ அடக்குமுறைகளோ இன்று பெருமளவில் தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றும் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கு என்று பேசிக் கொண்டிருப்பது அபத்தம். இந்த மாதிரியான குறுகிய விவாதங்களை நாம் கடந்தாக வேண்டும்.</p>
<p>பெண்களுக்கிருக்கும் சவால் என்பது எல்லாத் துறைகளுக்கும் பொதுவான ஒன்று. கல்வியறிவு பெற்று பணிபுரியத் தொடங்கிய காலகட்டத்தில் பெண்களுக்கான பிரத்யேக வேலைகளில் ஒன்றாக ஒதுக்கப்பட்டது ஸ்டெனோகிராபர் பணி. அந்த காலக் கட்டத்தில் வந்த திரைப்படங்களில் பார்த்தால் ஸ்டெனோகிராஃபர்கள் எப்போதும் மேனேஜர்களின் மடியிலேயே உட்கார்ந்திருப்பதைப் போலவேதான் காட்சிகளை அமைத்தார்கள். அன்றைய தேதிக்கு நவீன துறையாக இருந்த ஸ்டெனோகிராஃபி பணிக்கு பெண்கள் அதிகளவில் வரத் தொடங்கினார்கள். திறமையால் வந்தார்கள் என்பதை விடவும் வயதையும் அழகையும் முன்னிறுத்தி பாலினத்தை தவறாக பயன்படுத்தியதாலே பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக அப்போது நம்பப்பட்டது. அதை தான் திரைப்படங்களில் காட்சிபடுத்தினார்கள்.</p>
<p><strong>வெற்றிகரமான செயல்படும் ஒரு பெண் திறமையால் அதை சாதித்திருக்கமாட்டார் என்று நம்புவது இந்த சமூகத்தின் பொது புத்தி. இந்த பொது புத்திதான் இன்று ஊடகங்களிலும் நிலை கொண்டிருக்கிறது.</strong> பெண்களின் திறமையை புறக்கணிப்பதிலும் சாதனைகளை இழிவுபடுத்துவதிலும் ஆண்கள் அளவிற்கு (கூடுதலாகவே கூட) பெண்களும் ஈடுபடுகிறார்கள்.<br />
ஊடகத் துறையில் பணிபுரியும் பெண்கள் சம அளவில் பெண்களாலும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். போட்டியும் பொறாமைகளும் இருக்கிற வரை இந்த நிலை நிலையானது என்றே தோன்றுகிறது. அதனால் அதிகபட்ச மன உறுதியை வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.</p>
<p>இன்று பெண்களுக்கிருக்கும் சவால்களுக்கு ஒத்த அளவிலான பிரச்சனைகள் ஆண்களுக்கும் இருக்கிறது. அதற்கு காரணம் ஊடகத்துறையில் மேலோங்கி இருக்கும் பண்ணையார்த்தனம். ஆண்களும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்களா என்று  மிக உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் மன உளைச்சலை தரக் கூடிய மற்ற எல்லா துயரங்களையும் ஆண்களும் எதிர்கொள்கிறார்கள். பிரச்சனை ஆண் பெண் என்ற அடிப்படையில் வருகிற பாலின பாகுபாடு அல்ல. புரொபஷனலிஸம் என்று சொல்லக்கூடிய தொழில் நேர்த்திக்கு இருக்கும் தட்டுப்பாடு. ஒரு ஊழியரை எப்படி நடத்துவது அல்லது கையாள்வது என்ற அடிப்படை நாகரிகம் தெரியாத மேலதிகாரிகள் எல்லா துறையிலும் இருக்கிறார்கள். ஊடகத்துறையிலும் இருக்கிறார்கள். ஒரு அலுவலகத்தில் 10 பேர் பணிபுரிகிறார்கள் என்றால் அந்த 10 பேரும் ஒரே மாதிரியான அல்லது சம அளவிலான திறமைகளை கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. யார் யாருக்கு என்னென்ன திறமை இருக்கிறது என்று கண்டறிவதும் அவரை குறிப்பிட்ட அந்த வேலைக்கு பயன்படுத்துவதும் தலைமைப் பண்பின் முக்கிய அம்சம். ஊழியர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகளை வழங்குவதால் மட்டுமே எந்த ஒரு நிறுவனமுமே அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்.</p>
<p>ஊடகங்களில் ஆண்களின் கை மேலோங்கி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனால் செய்திகளில் மிக மோசமாக வெளிப்படும் ஆண் நெடி குமட்டலை உண்டாக்குவதாக இருக்கிறது!. தப்பித் தவறி கூட ஒரு பெண் செய்திகளில் அடிபட்டுவிடக் கூடாது. குற்றச்செய்திகள் என்றால் நிலைமை மிக மோசம். ஆண் நிருபர்களின் அதிகபட்ச கற்பனைத் திறனும் வக்கிரங்களும் வெளிப்படுவது பெண்கள் சம்பந்தப்பட்ட செய்திகளில்தான்.</p>
<p>பெரும்பாலான செய்திகள் இப்படி அந்த நேர கிளுகிளுப்பிற்கும் பரபரப்பிற்காக மட்டுமே எழுதப்படுகின்றன. பத்திரிகைகளில் நிலைகொண்டிருக்கும் ஆண் மொழியும், மேலோங்கியிருக்கும் ஆண் மனோபாவமும் மிகவும் மோசமான பாதிப்புகளை சமூகத்தில் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. எவ்வளவோ விமர்சனங்களுக்கு உள்ளான போதும் இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்திகளில் அடிபடும் பெண்களை அழகி என்று குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. பெருமளவில் பெண்கள் ஊடகப்பணிக்கு வந்தால் இந்த அவலம் மாறுமா என்று கேட்டால் அதுவும் சந்தேகம்தான். ஏனென்றால் வருகிற எல்லோருமே ஆண் பெண் பாரபட்சமில்லாமல் கண்மூடித்தனமாக வழக்கமான இந்த எழுத்துமுறைக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் சில பத்திரிகைகளில் பெண்களும் ஆண் மொழியில் ஆண் மனோபாவத்துடன் எழுதுவதை பார்க்க முடிகிறது. தன்னளவில் மிக நேர்த்தியான மொழியாற்றலையும், சமூகப் பார்வையையும் செய்தி எழுதும் நுணுக்கத்தையும்  கொண்டிருந்தாலே ஒழிய இதுபோன்ற வக்கிரங்களில் இருந்து தப்பிப்பது கடினம். ஜாதி, மத, பாலின அடையாளங்களைக் கடந்த சமத்துவ மொழி ஊடகங்களின் இன்றைய மிகப் பெரியத் தேவையாக இருக்கிறது.   வேண்டும் க்ண்க்இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்திக் பலரை ஏமாற்றி பணம் பறித்தார் அதனால் அவர் செத்துப் போக்</p>
<p>திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவது போலவோ அல்லது இந்த சமூகம் நம்பிக் கொண்டிருப்பதைப் போலவோ ஜர்னலிஸ்ட்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல.<br />
துப்புரவுப் பணியைப் போலத் தான் ஊடகத்துறையும். ஒரு துப்புரவுப் பணியாளருக்கு இருக்கும் பொறுப்பை விடவும் அதிகமாக ஜர்னலிஸ்ட்களுக்கு பொறுப்புணர்வு இருப்பதாக நான் நம்பவில்லை. முன்னவர் புற சுகாதாரத்திற்கும் பின்னவர் அக சுகாதாரத்திற்காகவும் பணி புரிகிறார்கள் அவ்வளவே வித்தியாசம். ஆனால் இங்கு நிறைய பேர் ஜர்னலிஸ்ட் என்று மார்தட்டிக் கொள்வதில் ஒரு வறட்டு கவுரவத்தைப் பார்க்க முடிகிறது. இது தேவையில்லாதது. வேறெந்தத் துறையில் வேலை செய்கிறவர்களைப் போல பத்திரிகையாளர்களும் தங்களை சாதாரண மனிதர்களாக முதலில் கருதத் துவங்க வேண்டும். யாரும் ஜர்னலிஸ்ட்டாகவே பிறப்பதில்லை. மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் போல பத்திரிகையாளர்களுக்கு கல்வி தகுதி கட்டாயமாகத் தேவைப்படாத நிலையில் எழுதத் தெரிகிறவர்களும் பேச முடிகிறவர்களும் பத்திரிகையாளராகிவிட முடிகிறது. கல்வித் தகுதி அவசியமில்லாத ஊடகத் துறைக்குத் தேவைப்படுவது மனித நேயமும், சமூக அறிவும் பொறுப்புணர்வும் மட்டுமே! செய்தி எழுதுதலின் நுணுக்கங்கள் அரசியல் நிகழ்வுகள், பொது அறிவு விஷயங்களை எல்லாம் களத்தில் இறங்கியவுடன் காலப் போக்கில் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மேலே குறிப்பிட்ட மூன்று விஷயங்களும் உள்ளார்ந்தவை. எல்லா தனி நபர்களுக்கும் அது இருக்க வேண்டும் என்றாலும் பல தரப்பினரையும் சென்று பறைசாற்றுகிற பணியைச் செய்கிற ஊடகவியலாளர்களுக்கு கூடுதலாக இருந்தாக வேண்டும்.</p>
<p>மனித நேயத்திற்கும், உரிமைகளுக்கும் சமத்துவத்திற்கு எதிரான வார்த்தைகளை இதுவரையும் நான் எழுதவில்லை. இனிமேலும் எழுதமாட்டேன்.  என் எழுத்துக்களும் கருத்துக்களும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். அது அன்பு. எல்லோருக்குமான அன்பு. குழந்தைகள், திருநங்கைகள் ஆண், பெண், இன்ன மொழி பேசுபவர், இந்த ஊர்க்காரர், நாட்டுக்காரர், சாதி, மதம் என எந்த பாகுபாடுமின்றி வரக்கூடிய இயல்பான அன்பு. இந்த உலகத்தின் அதிகபட்சத் தேவை அதுதான். கூட்டம் போட்டு, மேடையில் முழங்கினால்தான் என்றில்லை, தன்னளவில் எல்லோரும் அன்பானவர்களாக, உரிமை மீறல்களை அனுமதிக்காதவர்களாக இயங்கிக் கொண்டிருந்தாலே போதும். இவ்வுலகத்தின் அவலங்கள் முடிவுக்கு வந்துவிடும். சமூகப் பொறுப்புணர்வோடு பணிபுரியும் எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.<br />
<strong>அன்பும் உண்மையும் நேர்மையும் நிச்சயம் வெற்றி பெறும். அவை அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுமே தவிர ஒருபோதும் தோற்றுப்போவதில்லை.</strong><br />
<span style="color:#ff0000;"><br />
<strong>ஜெயராணி&#8230;</strong></span><span style="color:#ff0000;">ஆறாம்திணை என்ற இணையதளப் பத்திரிகையில் பணியைத் தொடங்கி, குமுதம், விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளில் புகைப்பட நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் சுமார் ஏழாண்டுகள் வேலை பார்த்தவர். தற்போது சன் செய்திப் பிரிவில் சிறப்பு செய்தியாளாராக பணியாற்றும் ஜெயராணி, நிஜம் நிகழ்ச்சியில் செய்தியாளராகவும் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் இருக்கிறார். மெயின் ஸ்ட்ரீம் ஊடகத்தில் இயங்கினாலும் பெண்கள், குழந்தைகள் திருநங்கைகள், தலித் மக்கள், சிறுபான்மையினருக்காகத் தொடர்ந்து எழுதி வருகிறார். தலித் முரசு போன்ற மாற்று இதழ்களிலும் தொடர்ந்து எழுதுகிறார். ஆனந்த விகடன், அவள் விகடன், தீராநதி, புது விசை, முற்றுகை ஆகிய இதழ்களில் கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்திருக்கின்றன.</span></p>
<p><span style="color:#ff0000;">&#8216;இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ஜர்னலிஸ்ட்&#8217; அமைப்பு &#8216;ஆனந்த விகடனில் விகடனில&#8217; வெளியான &#8221;இளைப்பாற விரும்புகிறோம்&#8221; கட்டுரைக்காக சிறப்புப் பாராட்டுச் சான்றிதழை வழங்கியது. (2004 )</span></p>
<p><span style="color:#ff0000;">&#8216;இந்தியா டுடே&#8217; பத்திரிகை &#8216;இந்தியாவின் 38 முக்கியமான பெண்களில்&#8217; ஒருவராக தேர்ந்தெடுத்தது (2005)</span></p>
<p><span style="color:#ff0000;">ஊடகத்துறையில் தொடர்ந்து ஆற்றி வரும் பங்கிற்காக &#8216;அன்னைத் தெரஸா பல்கலைக்கழக&#8217;த்தால் &#8216;சிறந்த பத்திரிகையாளரா&#8217;க கவுரவிக்கப்பட்டார். (2009)</span></p>
<p><strong>பின்குறிப்பு :</strong> எனக்குப் பிடித்த பத்திரிகையாளர் என்ற வகையில் ஜெயராணியிடம்  நேர்காணல் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அது நிறைவேற காலம் இன்னும் கணியவில்லை. பிடித்த பத்திரிகையாளர் என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அது நேர்காணலை எழுதும்போது சொல்லுவேன்.<br />
இங்கே பிரசுமாகியிருக்கும் கட்டுரை நான் எழுதியது அல்ல. பெண்ணே நீ மாத இதழுக்காக ஜெயராணி எழுதியது. மார்ச் பெண்ணே நீ இதழில் எடிட் செய்யப்பட்டு வெளியான கட்டுரையின் முழுவடிவத்தை இங்கே கொடுத்திருக்கிறேன்.<br />
பெண்ணே நீ இதழுக்கு எழுதிய கட்டுரையை இங்கே பிரசுரித்தமைக்காக பெண்ணே நீ க்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.<br />
கட்டுரையில் வெளியாகியிருக்கும் கருத்துக்களை ஒட்டி ஜெயராணி, சுகிதா, நான் மூவருமாக நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்.   அதனாலே இந்தக் கட்டுரையை பிரசுரிப்பதில் ஆர்வம் கொண்டேன். ஜெயராணியும் அனுப்பித் தந்தார். விஷயமுள்ள கட்டுரை எல்லாதரப்பையும் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.</p>
<br /> Tagged: <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>ஊடக பெண்கள்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%ae%e0%af%8d/'>ஜர்னலிஸம்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf/'>ஜெயராணி</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/'>பத்திரிகை அறம்</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/mvnandhini.wordpress.com/385/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/mvnandhini.wordpress.com/385/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/mvnandhini.wordpress.com/385/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/mvnandhini.wordpress.com/385/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/mvnandhini.wordpress.com/385/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/mvnandhini.wordpress.com/385/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/mvnandhini.wordpress.com/385/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/mvnandhini.wordpress.com/385/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/mvnandhini.wordpress.com/385/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/mvnandhini.wordpress.com/385/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/mvnandhini.wordpress.com/385/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/mvnandhini.wordpress.com/385/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/mvnandhini.wordpress.com/385/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/mvnandhini.wordpress.com/385/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=385&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://mvnandhini.wordpress.com/2010/03/04/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c403bc00d4b681b8c57c4c84bcd40832?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">மு.வி.நந்தினி</media:title>
		</media:content>

		<media:content url="http://mvnandhini.files.wordpress.com/2010/03/jeyarani.jpg" medium="image">
			<media:title type="html">Jeyarani</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>குப்பை மேட்டில் ஓர் வேடந்தாங்கல்!</title>
		<link>http://mvnandhini.wordpress.com/2010/03/02/%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%ae%a8/</link>
		<comments>http://mvnandhini.wordpress.com/2010/03/02/%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%ae%a8/#comments</comments>
		<pubDate>Tue, 02 Mar 2010 09:10:21 +0000</pubDate>
		<dc:creator>மு.வி.நந்தினி</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சதுப்பு நிலம்]]></category>
		<category><![CDATA[சுற்றுச்சூழல்]]></category>
		<category><![CDATA[செங்கால் நாரை]]></category>
		<category><![CDATA[பள்ளிக்கரணை]]></category>
		<category><![CDATA[வெள்ளப்பெருக்கு]]></category>

		<guid isPermaLink="false">http://mvnandhini.wordpress.com/?p=379</guid>
		<description><![CDATA[சென்னை, வேளச்சேரியிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் இருக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று சொல்லப்படும் பிரமாண்டமான குப்பைமேடு!  சென்னையின் குப்பைகளைக் கிண்டிப் பசியாற பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்திருக்கிறது பெலிக்கன் பறவை. விரையும் வாகன இரைச்சல்களுக்கு இடையே இன்னும் பல நூறு வெளிநாட்டுப் பறவைகள் திடுக்கிட்டுத் தவிக்கின்றன. காகத்தைத் தவிர, வேறு பறவையைப் பார்க்க முடியாதசென்னை நகரத்துக்குள் விதவிதமான வண்ணத்திலும் வடிவத்திலும் வித்தியாசமான பறவைகள் எப்படி வந்தன? குப்பைமேட்டில் இவற்றுக்கு என்ன வேலை? &#8221;வேடந்தாங்கலைவிட [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=379&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://mvnandhini.files.wordpress.com/2010/03/copy-2-of-dsc_2890.jpg"><img class="aligncenter size-full wp-image-380" src="http://mvnandhini.files.wordpress.com/2010/03/copy-2-of-dsc_2890.jpg?w=460&#038;h=305" alt="" width="460" height="305" /></a></p>
<p><span style="color:#ff0000;"><strong>சென்னை, வேளச்சேரியிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் இருக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று சொல்லப்படும் பிரமாண்டமான குப்பைமேடு!  சென்னையின் குப்பைகளைக் கிண்டிப் பசியாற பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்திருக்கிறது பெலிக்கன் பறவை. விரையும் வாகன இரைச்சல்களுக்கு இடையே இன்னும் பல நூறு வெளிநாட்டுப் பறவைகள் திடுக்கிட்டுத் தவிக்கின்றன. காகத்தைத் தவிர, வேறு பறவையைப் பார்க்க முடியாதசென்னை நகரத்துக்குள் விதவிதமான வண்ணத்திலும் வடிவத்திலும் வித்தியாசமான பறவைகள் எப்படி வந்தன? குப்பைமேட்டில் இவற்றுக்கு என்ன வேலை? </strong></span><br />
&#8221;வேடந்தாங்கலைவிட இரண்டு மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது பள்ளிக்கரணை!&#8221; என்கிறார் கடந்த பத்து ஆண்டுகளாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பல்லுயிர் பெருக்கம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் டாக்டர் ஜெயஸ்ரீ வெங்கடேசன்.<br />
&#8221;கோணமூக்கு உள்ளான், ஊசிவால் வாத்து, சாம்பல் தலை ஆள்காட்டி, மஞ்சள் வாலாட்டி, சோழக் குருவி, நீர் தாழைக் கோழி, நாமக் கோழி, தாமிர இலைக் கோழி, அரிவாள் மூக்கன், செந்நீலக் கொக்கு, கானான் கோழி, பவளக் கொத்தி என உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் வந்து போகும் இடம் இது. இங்கே வளர்ந்து நிற்கிற கோரைப் புல், இயற்கையான பயோஃபில்டர். வேண்டாததை உறிஞ்சிவிட்டு, நல்லதை அப்படியே அரணாகப் பாதுகாக்கும். பறவைகள் இதில்தான் கூடு கட்டி வாழும். ஆனால், குப்பைகளைக் கொட்டிக் கொட்டி நச்சு நிலமாக்கிவிட்டார்கள். ஆமை, மீன் போன்ற உயிரினங்கள் மாசுபட்ட நீரிலும் வாழப் பழகிவிட்டன. ஆனால், அதைப் பிடித்து உண்கிற ஏழை மனிதனுக்குத்தான் புதுப்புது வியாதிகள் வருகின்றன&#8221; என்கிறார் சூழலியல் ஆர்வலரான திருநாரணன்.<br />
&#8221;1970-களின் தொடக்கத்தில், வேளச்சேரியில் இருக்கும் என் தாத்தா வீட்டுக்கு வருவேன். பேருந்தில் வரும்போது சைதாப்பேட்டை முடிகிற இடம்தான் கடைசி நிறுத்தம். அங்கே தொடங்கி நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் வரைக்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் தண்ணீர்தான் இருக்கும். ஏரிக் கரையில் நடந்தபடியே நீரில் மூழ்கி இரை தேடிக்கொண்டு இருக்கும் விதவிதமான பறவைகளை ரசித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.<br />
தென்னிந்தியாவிலேயே பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ரொம்பவும் ஸ்பெஷலான பகுதி. சதுப்பு நிலமென்றால் ஆறு அடிக்கும் குறைவாகத் தண்ணீர் இருக்கும், உயிர் வளம் நிறைந்த குழைவான மண்ணுடன் இருக்கும். மற்ற இடங்களில் உள்ள சதுப்பு நிலத்தில் உப்புத்தன்மை இருக்கும். ஆனால், பள்ளிக்கரணை ஒரு பக்கம் நல்ல தண்ணீர் உள்ள சதுப்பு நிலமாகவும் இன்னொரு பக்கம் உப்புத்தன்மை கலந்த சதுப்பு நிலமுமாகவும் இருக்கிறது. 114 வகையான பறவைகள், 46 வகையான மீன்கள், 29 வகையான புல் வகைகள், ஆமை, தவளை வகைகள், பாம்புகள், பட்டாம்பூச்சிகள் என வளமான பல்லுயிர் சூழல் நிறைந்த பகுதி. 2002-ல் இருந்து இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்ற வேண்டுமெனப் பல போராட்டங்கள் நடத்தினோம். அதன் விளைவாக இப்போதுதான் சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்றியிருக்கிறார்கள்&#8221; என்றவர், இவ்வளவு வளமிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாழான கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.</p>
<p><a href="http://mvnandhini.files.wordpress.com/2010/03/jaccana-burmanagar1.jpg"><img class="aligncenter size-full wp-image-383" title="jaccana burmanagar" src="http://mvnandhini.files.wordpress.com/2010/03/jaccana-burmanagar1.jpg?w=320&#038;h=214" alt="" width="320" height="214" /></a><br />
&#8221;சென்னை நகரம் விரிவடைந்துகொண்டே போனபோது, வட சென்னைப் பகுதி கிட்டத்தட்ட ஆந்திர எல்லையைத் தொட்டுவிட, தென் சென்னையின் மீது அனைவரின் கவனமும் திரும்பியது. வெள்ளைக்காரன் காலத்திலேயே &#8216;புறம்போக்கு மேய்ச்சல் நிலம்&#8217; என அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத் தைச் சீரழிக்கும் பணி அப்போது மும்முரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. &#8216;புதுசா காலனி போடணுமா&#8230; பட்டா போடணுமா&#8230; பள்ளிக் கரணையில் போடலாம்&#8217; என்கிற அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அதிவேகமாக நடந்தன. இது எல்லாமே அரசாங்கத்தின் ஆதரவோடுதான் நடந்தது. உண்மையில் பள்ளிக்கரணையைச் சீரழித்ததே அரசாங்கம்தான்.<br />
பெருங்குடியில் குப்பை கொட்டுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட நிலத்தை தனியார் கல்லூரிகளுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டவும் கொடுத்துவிட்டு, வளமான தண்ணீர் உள்ள பகுதியில் எந்தவித ஒழுங்கும் இல்லாமல் இஷ்டப்படி குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறது சென்னை மாநகராட்சி. ஏறக்குறைய 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த சதுப்பு நிலத்தில், இப்போது உயிர்ப்போடு இருப்பது 420 ஹெக்டேர் மட்டும்தான். ஆக்கிரமிப்புகள் போக மீதியிருக்கிற 132 ஹெக்டேர் அளவுக்கு குப்பைகளைக் கொட்டிப் பாழடித்து வைத்திருக்கிறார்கள்.</p>
<p>சென்ற மாதம் ஏதோ ரசாயனத்தைக் கொட்டியதால் இந்தப் பகுதி தண்ணீர் முழுக்க சிவப்பு நிறமாக மாறிவிட்டது; கூடவே சகிக்க முடியாத நாற்றம் வேறு. மக்கும் குப்பை, மக்காத குப்பை என எல்லாமே ஒன்றாகக் கொட்டி அமுக்கிவைத்திருக்கிறார்கள். குப்பை பொறுக்குகிறவர்கள் டயர் போன்ற பொருட்களில் இருக்கும் இரும்பைப் பிரித்தெடுக்க நெருப்பு வைத்துக் கொளுத்திவிடுகிறார்கள். அந்த நெருப்பு எல்லா இடங்களுக்கும் பரவி, ஏரியாவே எப்போதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. ஒரு லட்சம் பேர் ஒரே இடத்தில் அமர்ந்து புகை விடுவதற்குச் சமமான அளவு, புற்றுநோய் உண்டாக்கும் டயாக்சின் உள்பட நச்சு வாயுக்கள், இந்தக் குப்பைகள் எரிக்கப்படுவதால் வெளியாகிறது. அரசாங்கத்திடம் இந்தப் பிரச்னையை எத்தனையோ முறை எடுத்துச் சொல்லிவிட்டோம். இன்னும் நடவடிக்கைதான் இல்லை!&#8221; என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ.<br />
தற்போது பள்ளிக்கரணையில் குப்பைமேட்டில் குப்பை பொறுக்குகிறவர்களுக்குத் தடை விதித்திருக்கிறது ஒக்கியம் நகராட்சி. ஆனாலும் நூறு சிறுவர்களுக்கு மேல் குப்பை பொறுக்க தினமும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறார் குப்பை மேட்டில் காவல் காக்கும் அரசு ஊழியர் ஒருவர். அந்தப் பகுதி யைக் கடக்கும்போதே நுனி நாசிவரை நாற்றம் ஏறுகிறபோது, அதிலேயே உழலும் குப்பை பொறுக்குகிற சிறுவர்களின் உடல் நலனுக்கு யார் பொறுப்பாவார்கள் என்று தெரியவில்லை.<br />
குண்டூசி குத்துமளவுக்குக்கூட இடம் தெரியாமல் மொய்த்துக்கொண்டு இருக்கும் ஈக்களோடு நாள் முழுக்கக் காவலில் இருக்கும் அரசாங்க ஊழியர்களின் நிலைமையும் பரிதாபம்தான்.<br />
&#8221;மாநகராட்சி இப்போது கொடுங்கையூரிலும் பெருங்குடியிலும் மட்டுமே குப்பை கொட்டுகிறது. இந்தக் குப்பைகளிலிருந்து உரம், மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. கூடிய விரைவில் பெருங்குடியில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது&#8221; என்கிறார் சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன்.</p>
<p>சென்னையின் நீர்வளம் குறையவோ கூடவோ காரணம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக் கப்படுவதில்தான் இருக்கிறது என்கிறார்கள் சூழலியலாளர்கள். இன்னொரு அதிர்ச்சியானவிஷ யமும் தெரிய வந்தது. 2005-ல் சென்னையில் ஏற் பட்ட வெள்ளப்பெருக்குக்குக் காரணம்பள்ளிக்கரணைச் சதுப்பு நிலம் பாழடிக்கப்பட்டதுதான்!</p>
<p>&#8221;சென்னையின் ஒட்டுமொத்த மழைநீருக்கும் வடிகாலாக இருப்பது பள்ளிக்கரணைச் சதுப்பு நிலம்தான். ஒரு பக்கம் நீரைத் தேக்கிவைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் சிறிது சிறிதாக மீதியிருக்கிற நீர் ஒக்கியம் மடுவுக்குச் செல்கிறது. அந்த மடுவிலிருந்து பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கடலுக்குள் செல்கிறது. அந்த வழியாகத் தான் கடல் தண்ணீரும் உள்ளே வரும். ஆனால், ஒக்கியம் மடுவு இருந்த இடத்தை முற்றிலுமாக அடைத்துவிட்டது ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. தண்ணீரைத் தேக்கிவைக்கும் இடத்திலும் குப்பைகளைக் கொட்டி சின்னச் சின்ன மலை களை உருவாக்கிவிட்டார்கள். பிறகு எப்படி வெள்ளம் வடியும்? வெள்ளப்பெருக்கு வராமல் இருக்கும்?<br />
ஒட்டுமொத்தமாக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கத்தின் மீது மட்டுமே சொல்லி விட முடியாது. நம்முடைய வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தால் போதும் என்று அத்தனை குப்பைகளையும் வீதியில் சேர்க்கிற நாமும்தான் குற்றவாளிகள். எத்தனை பேர் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று வீட்டிலேயே தரம் பிரித்து அனுப்புகிறோம்?! நாமே தவறுக்குப் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு, எல்லாம் பாழான பிறகு உச்சுக்கொட்டுவதில் என்ன பயன்?&#8221; &#8211; நாளைய சந்ததி கேட்கப்போகும் கேள்வியை இப்போதே கேட்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ!</p>
<p><strong>நன்றி : காட்டுயிர் புகைப்படக்கலைஞர்</strong> <span style="color:#ff0000;"><strong>ஸ்ரீராம்</strong></span></p>
<br /> Tagged: <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/'>சதுப்பு நிலம்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88/'>பள்ளிக்கரணை</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/'>வெள்ளப்பெருக்கு</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/mvnandhini.wordpress.com/379/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/mvnandhini.wordpress.com/379/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/mvnandhini.wordpress.com/379/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/mvnandhini.wordpress.com/379/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/mvnandhini.wordpress.com/379/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/mvnandhini.wordpress.com/379/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/mvnandhini.wordpress.com/379/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/mvnandhini.wordpress.com/379/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/mvnandhini.wordpress.com/379/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/mvnandhini.wordpress.com/379/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/mvnandhini.wordpress.com/379/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/mvnandhini.wordpress.com/379/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/mvnandhini.wordpress.com/379/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/mvnandhini.wordpress.com/379/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=379&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://mvnandhini.wordpress.com/2010/03/02/%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%ae%a8/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c403bc00d4b681b8c57c4c84bcd40832?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">மு.வி.நந்தினி</media:title>
		</media:content>

		<media:content url="http://mvnandhini.files.wordpress.com/2010/03/copy-2-of-dsc_2890.jpg" medium="image" />

		<media:content url="http://mvnandhini.files.wordpress.com/2010/03/jaccana-burmanagar1.jpg" medium="image">
			<media:title type="html">jaccana burmanagar</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நம்மைச் சுற்றி 1000 போபால்கள்!</title>
		<link>http://mvnandhini.wordpress.com/2010/02/26/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-1000-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/</link>
		<comments>http://mvnandhini.wordpress.com/2010/02/26/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-1000-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/#comments</comments>
		<pubDate>Fri, 26 Feb 2010 12:22:12 +0000</pubDate>
		<dc:creator>மு.வி.நந்தினி</dc:creator>
				<category><![CDATA[கடலூர் சிப்காட்]]></category>
		<category><![CDATA[கொடுங்கையூர்]]></category>
		<category><![CDATA[சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு]]></category>
		<category><![CDATA[சுற்றுச்சூழல்]]></category>
		<category><![CDATA[தொழிற்சாலை கழிவுகள்]]></category>
		<category><![CDATA[போபால்]]></category>

		<guid isPermaLink="false">http://mvnandhini.wordpress.com/?p=359</guid>
		<description><![CDATA[&#8220;நள்ளிரவில் கனவுகளோடு தூங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி, லட்சக்கணக்கானவர்களை முடமாக்கிய போபால் விபத்து நடந்து 22 வருடங்கள் ஓடிவிட்டன. அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியோ முறையான நிவாரணங்களோ கிடைக்கவில்லை. இத்தனை பேரை காவு வாங்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர்கள் இன்னும் சொகுசு வாழ்க்கையில் தான் திளைக்கிறார்கள். உலகம் அறிந்து நடந்த இவ்வளவு பெரிய விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லையே?  இன்னும் நம்மைச் சுற்றி 1000 போபால்கள் இருக்கின்றன!&#8221; என்கிறார் சென்னையில் இயங்கும் சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=359&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://mvnandhini.files.wordpress.com/2010/02/bopal2.jpg"><img class="aligncenter size-full wp-image-362" title="போபால் விஷவாயு கசிவு சம்பத்தில் பாதிக்கப்பட்டவர்" src="http://mvnandhini.files.wordpress.com/2010/02/bopal2.jpg?w=300&#038;h=190" alt="" width="300" height="190" /></a></p>
<p><strong><span style="color:#ff0000;">&#8220;நள்ளிரவில் கனவுகளோடு தூங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி, லட்சக்கணக்கானவர்களை முடமாக்கிய போபால் விபத்து நடந்து 22 வருடங்கள் ஓடிவிட்டன. அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியோ முறையான நிவாரணங்களோ கிடைக்கவில்லை. இத்தனை பேரை காவு வாங்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர்கள் இன்னும் சொகுசு வாழ்க்கையில் தான் திளைக்கிறார்கள். உலகம் அறிந்து நடந்த இவ்வளவு பெரிய விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லையே?  இன்னும் நம்மைச் சுற்றி 1000 போபால்கள் இருக்கின்றன!&#8221; என்கிறார் சென்னையில் இயங்கும் சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா நாராயணன்.</span></strong></p>
<p>&#8221;கடலூர் மாவட்டத்திலுள்ள சிப்காட் வளாகத்தில் பெருமளவில் காற்று மாசு நிறைந்து இருக்கிறது. அழுகிய முட்டையின் நாற்றம், ரப்பர் எரிக்கும் போது வரும் மணம், அழுகிய உடம்பின் நாற்றம், நெயில் பாலிஷ் வாசனை என மாசுபட்ட காற்றிலிருந்து ஏராளமான சாம்பிள்கள் எடுத்திருக்கிறோம். அத்தனையும் சிப்காட்டிலுள்ள ஒவ்வொரு கம்பெனியும் வெளிவிடும் மாசுக்கள்.</p>
<p>இந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு தொடர்ந்து சளி, ஆஸ்துமா என சுவாசம் தொடர்பான பாதிப்புகள் அதிகம். இதில் இன்னொரு அவலம்&#8230;சிப்காட் பகுதியில் வாழும் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவது சவாலான விஷயமாகிவிட்டது. பெண்கள் வயதுக்கு வருவது தள்ளிப்போவது முதல், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு, கருச்சிதைவு, குழந்தையின்மை என்று அவர்களின் வாழ்க்கையில் கோர விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கின்றன.</p>
<p>இந்தப் பகுதியின் ஒவ்வொரு அணுவிலும் கலந்துவிட்ட விஷ வேதிப் பொருட்கள் சிப்காட்டில் மட்டுமல்ல, மேட்டூரில் உள்ள சன்மார் ஆலை, சென்னைக்கு அருகில் அங்கீகரிக்கப்படாத குப்பை எரிக்கும் இடமாக மாறிக் கொண்டிருக்கும் கொடுங்கையூர், கேரளாவில் உள்ள காசர்கோடு எண்டோசல்பான் ஆலை என்று ஆபத்தை அடுத்த தலைமுறைக்கு விதைத்துக் கொண்டிருக்கும் இவற்றின் ஹிட் லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்கிறது.</p>
<p>சென்னை கொடுங்கையூரில் குப்பைகளை எரிப்பதால் அருகில் வசிக்கும் 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. சன்மார் ஆலை வெளியிடும் ரசாயனத்தால் மேட்டூரைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நிலத்தடி நீரின் நிறமே மாறிவிட்டது. அந்தப் பகுதிகளில் மக்கள் தண்ணீரைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தும் புதிய பாத்திரங்கள் ஒரு வாரத்திற்குள் பழுப்பு நிறத்துக்கு வந்துவிடும். இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் உடல் குறைபாடுகளுடனோ, மூளை வளர்ச்சி அற்றவர்களாகவோ பிறக்கிறார்கள். இதைத்தான் அந்தந்த பகுதியில் வசிக்கும் தன்னார்வம் மிக்க புகைப்படக் கலைஞர்களை வைத்து பதிவு செய்திருக்கிறோம்.</p>
<p>இந்த இடங்களில் எந்த வகையில் பாதிப்பு இருக்கிறது என்பதை ஆவணமாக அரசுக்கு கொடுக்கப் போகிறோம். நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடவும் தயாராக இருக்கிறோம்&#8221; என்கிறார் ஸ்வேதா.</p>
<p><strong>சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழுவினர் &#8217;1000 போபால்கள்&#8217; என்ற பெயரில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியே வரும் கழிவுகள் எந்த அளவு மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது என்பதை புகைப்படமாக்கி காட்சியமைத்திருந்த போது &#8216;குங்குமம்&#8217; இதழில் எழுதியது. </strong></p>
<br /> Tagged: <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/'>கடலூர் சிப்காட்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/'>சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>தொழிற்சாலை கழிவுகள்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/'>போபால்</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/mvnandhini.wordpress.com/359/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/mvnandhini.wordpress.com/359/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/mvnandhini.wordpress.com/359/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/mvnandhini.wordpress.com/359/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/mvnandhini.wordpress.com/359/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/mvnandhini.wordpress.com/359/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/mvnandhini.wordpress.com/359/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/mvnandhini.wordpress.com/359/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/mvnandhini.wordpress.com/359/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/mvnandhini.wordpress.com/359/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/mvnandhini.wordpress.com/359/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/mvnandhini.wordpress.com/359/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/mvnandhini.wordpress.com/359/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/mvnandhini.wordpress.com/359/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=359&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://mvnandhini.wordpress.com/2010/02/26/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-1000-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c403bc00d4b681b8c57c4c84bcd40832?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">மு.வி.நந்தினி</media:title>
		</media:content>

		<media:content url="http://mvnandhini.files.wordpress.com/2010/02/bopal2.jpg" medium="image">
			<media:title type="html">போபால் விஷவாயு கசிவு சம்பத்தில் பாதிக்கப்பட்டவர்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மனிதனோடு தோன்றிய உயிரினம்&#8230;</title>
		<link>http://mvnandhini.wordpress.com/2010/02/20/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9/</link>
		<comments>http://mvnandhini.wordpress.com/2010/02/20/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Sat, 20 Feb 2010 07:39:25 +0000</pubDate>
		<dc:creator>மு.வி.நந்தினி</dc:creator>
				<category><![CDATA[காட்டுயிர்]]></category>
		<category><![CDATA[சுற்றுச்சூழல்]]></category>
		<category><![CDATA[தியடோர் பாஸ்கரன்]]></category>
		<category><![CDATA[பிந்து ராகவன்]]></category>
		<category><![CDATA[லடாக்]]></category>
		<category><![CDATA[வரையாடுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://mvnandhini.wordpress.com/?p=345</guid>
		<description><![CDATA[அழிந்துவரும் இந்திய வனஉயரினங்களின் பட்டியலில் வரையாடும் ஒன்று. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகள், இமயமலை தொடர்களில் மட்டுமே வரையாடுகள் வாழுகின்றன. இந்த இரண்டு பகுதிகள்தான் வரையாடுகள் வாழத் தேவையான சூழல் உள்ளதாக காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். வரையாடுகள் குறித்து ஆராய்ச்சிகள்கூட குறைவாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில பத்தாண்டுகளில் இந்த உயிரினத்தை வனவிலங்கு காட்சியகங்களில்கூட பார்க்க முடியாமல் போகலாம். சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் தன்னுடைய எழுத்தில் வரையாடுகள் குறித்து பதிவு செய்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த பிந்து ராகவன் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=345&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://mvnandhini.files.wordpress.com/2010/02/ladakh-urial.jpg"><img class="alignright size-full wp-image-346" title="ladakh-urial" src="http://mvnandhini.files.wordpress.com/2010/02/ladakh-urial.jpg?w=180&#038;h=400" alt="" width="180" height="400" /></a><span style="color:#ff0000;"><strong>அழிந்துவரும் இந்திய வனஉயரினங்களின் பட்டியலில் வரையாடும் ஒன்று. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகள், இமயமலை தொடர்களில் மட்டுமே வரையாடுகள் வாழுகின்றன. இந்த இரண்டு பகுதிகள்தான் வரையாடுகள் வாழத் தேவையான சூழல் உள்ளதாக காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். வரையாடுகள் குறித்து ஆராய்ச்சிகள்கூட குறைவாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில பத்தாண்டுகளில் இந்த உயிரினத்தை வனவிலங்கு காட்சியகங்களில்கூட பார்க்க முடியாமல் போகலாம். </strong></span></p>
<p>சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் தன்னுடைய எழுத்தில் வரையாடுகள் குறித்து பதிவு செய்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த பிந்து ராகவன் என்பவர் வரையாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் எழுதியதன் அடிப்படையில், பிந்து ராகவனை சந்தித்தேன். கால்நடை மருத்துவரான பிந்து ராகவன். கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்சமயம் கணவருடன் சென்னையில் வசிக்கிறார். கணவரும் கால்நடை மருத்துவர், பாம்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறார். இருவரும் டேராடூனில் இருக்கும் காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனத்தில் படித்தவர்கள். படிக்கிற காலத்தில் லடாக் வரையாடு குறித்து சிறப்பு ஆராய்ச்சி செய்தவர் பிந்து. பிறகு, அதையே தொடர்ந்து லடாக் வரையாடுகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் என்கிற தலைப்பில் ஆராய்ந்து வருகிறார்.<br />
&#8220;மனிதன் தோன்றிய காலத்தில் வரையாடுகளும் தோன்றிவிட்டன என்பதுதான் இவற்றை ஆராய காரணம். உயரமான பனிமலைச் சிகரங்களைக் கொண்டது லடாக். வரையாடுகள் இத்தகைய சூழலில்தான் வாழும். பாறைகளுக்கு நடுவே முளைத்திருக்கும் தாவரங்களை உண்டு வாழக்கூடியவை இவை. ஆடுகளைப் போல இருக்கும் இதன் உருவமும் செங்குத்தான பாறைகளில் ஏறுவதற்கு ஏற்ப உடல்வாகும் கொண்டது. பாறை இடுக்குகளில் வசிக்கும் இவை, பனிக்காலங்களில் மலை அடிவாரங்களுக்கு வரும். மலை அடிவாரங்களில் வசிக்கும் மக்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளுடன் இவை சேர்ந்து கொள்ளும். இப்படி சேரும்போது வீட்டு விலங்குகளுக்கு வரக்கூடிய தொற்றுநோய்கள், வரையாடுகளுக்கும் பரவும். தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் வேட்டையாடப்பட்டு வேகமாக அழிந்துவரும் வரையாடுகள், தொற்றுநோய்க்கு ஆளாகியும் அழிந்துவருகின்றன. இதுகுறித்த ஆராய்ச்சியில் இருக்கிறேன்&#8221; என்கிற பிந்து, நூறு வருடங்களுக்கு முன் வரையாடுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்ததாகவும் தற்போது 2 ஆயிரம் வரையாடுகள் தான் இருக்கின்றன என்கிறார். இவை மலை அடிவாரத்திற்கு வரும் பனிக்காலங்கள்தான் ஆராய்ச்சி செய்வதற்கு உகந்த காலம் என்கிறார் இவர்.<br />
&#8220;வரையாடுகள் வேகமாக ஓடக்கூடியவை. இவற்றை பின்தொடர்ந்து போகும்போது சில சமயம், இருட்டிவிடும். தங்கியிருக்கிற இடத்துக்குச் செல்ல முடியாது. பக்கத்தில் மக்கள் வசிக்கிற இடங்களைத் தேடிப் போவேன். விருந்தாளி போல அந்த மக்கள் என்னை உபசரிப்பார்கள். பொதுவாக இந்த பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் என்று சொல்வார்கள். ஆனால் நான் ஒரு போதும் அப்படிப்பட்டவர்களை சந்தித்ததில்லை&#8221; என்கிறார் பிந்து.<br />
தன் கணவர் ராகவன், மற்றும் சில நண்பர்களுடன் இணைந்து நிழிகிறிணி என்கிற அமைப்பை நடத்திவருகிறார். பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது இந்த அமைப்பு.</p>
<p><strong>நன்றி : தினகரன் வசந்தம்<br />
13.5.2007</strong></p>
<br /> Tagged: <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/'>தியடோர் பாஸ்கரன்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/'>லடாக்</a>, <a href='http://mvnandhini.wordpress.com/tag/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>வரையாடுகள்</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/mvnandhini.wordpress.com/345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/mvnandhini.wordpress.com/345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/mvnandhini.wordpress.com/345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/mvnandhini.wordpress.com/345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/mvnandhini.wordpress.com/345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/mvnandhini.wordpress.com/345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/mvnandhini.wordpress.com/345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/mvnandhini.wordpress.com/345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/mvnandhini.wordpress.com/345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/mvnandhini.wordpress.com/345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/mvnandhini.wordpress.com/345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/mvnandhini.wordpress.com/345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/mvnandhini.wordpress.com/345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/mvnandhini.wordpress.com/345/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=mvnandhini.wordpress.com&amp;blog=3498421&amp;post=345&amp;subd=mvnandhini&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://mvnandhini.wordpress.com/2010/02/20/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c403bc00d4b681b8c57c4c84bcd40832?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">மு.வி.நந்தினி</media:title>
		</media:content>

		<media:content url="http://mvnandhini.files.wordpress.com/2010/02/ladakh-urial.jpg" medium="image">
			<media:title type="html">ladakh-urial</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
