விநோதினி தன் எதிர்காலம் குறித்து எத்தனை கனவுகள் கண்டிருப்பார் என்று தெரியாது. ஆனால் இன்று அவருடைய அத்தனை கனவுகளும் அமிலக் கரைசலில் கரைந்துபோய் இருண்ட வெளியில் தவித்துக் கொண்டிருக்கின்றன.
காரைக்காலில் சமீபத்தில் 23 வயதே ஆன விநோதினியின் மீது நடந்த ஆசிட் வீச்சு பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். தன் அப்பாவுடன் சென்று கொண்டிருந்த விநோதினியின் மீது தன்னை காதலிக்க மறுத்ததாகச் சொல்லி சுரேஷ் என்பவன் பாட்டில் ஆசிட்டை வீசியிருக்கிறான். அடுத்த நொடியே முகம் முழுக்க சிதைந்துபோனது. அமில சிதைவுகளோடு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப் பட்ட விநோதினியை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு கண்ணிலும் பார்வை பரிபோய்விட்டதைச் சொன்னார்கள். ஆரம்பகட்ட மருத்துவத்துக்கே லட்சங்கள் செலவாகியிருக்கிறது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த விநோதினியின் பெற்றோரால் அடுத்த கட்ட மருத்துவ சிகிச்சைக்கு பணம் திரட்ட முடியவில்லை.
இப்போது முழுக்க சிதைந்துவிட்ட கண்களின் தோற்றத்தை உருவாக்கும் அறுலை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக விநோதினியின் நண்பர்கள் நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். விநோதினிக்கு உதவ விரும்புகிறவர்கள் இந்த இணைய தளத்தின் மூலமாக உதவாலாம். உதவி செய்ய நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இருந்த இடத்திலிருந்தே உதவி செய்யலாம். http://www.orangestreet.in/projects/vinodhini இங்கே க்ளிக்குங்கள். உங்களில் ஒருத்தியாக உதவி கேட்டு நிற்கும் விநோதினிக்கு உதவுங்கள்-.
விநோதினி பற்றிய விடியோ இணைப்பு