‘‘இலக்கியவாதிகளுக்கு சூழலியல் பற்றி எதுவும் தெரியாது!’’

ச.முகமதுஅலி

ச.முகமதுஅலி

உலகம் சூடாகிறது என்று சொன்னாலும் சொன்னார்கள் சுற்றுச்சூழல் பற்றி பேசுவது இன்று பலருக்கு ஃபேஷனாகிவிட்டது. இயற்கைப் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் சரியாக புரிந்து கொண்டு பேசுபவர்கள் இங்கே ரொம்பவும் குறைவு. இயற்கையியலாளர் ச. முகமது அலி அப்படிப்பட்டவர்களுள் ஒருவர். இவர் பேச ஆரம்பித்தால் நாம் எவ்வளவு தூரம் இயற்கையைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம் என்று பொட்டில் அடித்தமாதிரி தெரிகிறது. மேட்டுப்பாளையத்தில் உள்ள அவருடைய வீட்டில் அவரைச் சந்தித்தேன். கிட்டத்தட்ட 4 மணி நேரம் பேசினார். அதிலிருந்து சில துளிகளைத் தொகுத்திருக்கிறேன்.
‘‘வெறுமனே மரம் நடறது மட்டும்தான் இயற்கையைக் காப்பாத்தறதுக்கான ஒரே வழிங்கறமாதிரி இப்போ நிறையபேர் செயல்பட்டுட்டு இருக்காங்க. அதுல எத்தனைபேர் மரம் நட்ட பிறகு அது வளர்ந்திருக்கான்னு பார்ப்பாங்கன்னு தெரியாது. எனக்கு தெரிஞ்சி பல செடிகள் நட்ட உயரத்திலேயே காணாமல் போயிருக்கு.
இயற்கையை போற்றி அதோட பின்னிப் பிணைந்திருந்த பாரம்பரியம் நம்மோடது. ஆனா, தமிழ் பாரம்பரியங்கற பேர்ல எதை எதையோ பேசிக்கிட்டிருக்கோம். 400, 500 வருஷமா அந்த பாரம்பரியத்தை தொலைச்சிட்டு நிற்கிறோம். வெளிநாட்டுக்காரன் ‘குளோபல் வார்மிங்’ பத்தி சொன்னாதான் நமக்கு சுற்றுச்சூழல் காப்பாத்தறது பத்தி நினைப்பு வருது.
பெரிய பெரிய இலக்கியவாதிகளிலிருந்து உலகமெல்லாம் சுத்திவந்த அரசியல்வாதி வரைக்கும் ‘ஆண்சிங்கம்’ங்கிற அடைமொழி கொடுக்கிறோம். உண்மையில் பெண் சிங்கம்தான் வேட்டைக்குப் போகும். ஆண்சிங்கம் இயற்கையிலேயே சோம்பேறியான உயிரி. அது அதோட இயல்பு. அதேபோல ஆண் குயிலுக்குத்தான் இனிமையான குரல் உண்டு. ஆனா பெண் பாடகிகளுக்கு ‘இசை குயில்’னு அடைமொழி கொடுக்கிறோம்.
நம்முடைய எழுத்தாள மெதாவிகளுக்கு உயிரினங்கள் பற்றி  எந்த அறிவும் கிடையாது. பெயர் தெரியாது. வகையும் தெரியாது. பொதுமக்கள் மத்தியில் வனஉயிரினங்களைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்புறதில இவங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. ‘பயங்கரமான காடு’, ‘சூழ்ச்சி செய்யும் நரி’னு எவ்வளவோ தவறான உதாரணங்களை தந்துகிட்டு இருக்காங்க.

குயில் குடும்பத்துல மட்டும் 127 வகைகள் இருக்கு. அன்னப்பறவை இந்தியாவிலேயே இல்லை. வானம்பாடின்னு ஒரு பறவையே கிடையாது. 250 வகை இந்திய பாம்புகள்ல 3 வகை பாம்புகளுக்கு மட்டுமே விஷம் இருக்கு. இப்படி அடிப்படையான விஷயங்கள் தெரியாம எதிர்கால சந்ததிகளுக்கு இந்த எழுத்தாளர்கள் தவறான தகவல்களைத்தான் தந்துகிட்டு இருக்காங்க. இந்த நிலையில எப்படி இயற்கை சூழல் காப்பாத்தப்படும்?
சங்க இலக்கியங்கள்ல பறவைகள், விலங்குகள் பற்றி நுணுக்கமான விஷயத்தைகூட பதிவு பண்ணியிருக்காங்க. அத்தனைக்கும் அழகான தமிழ்பெயர் வச்சிருக்காங்க. எல்லாத்தையும் மறந்துட்டு இன்னைக்கு ஆங்கிலப் பெயர்களை அப்படியே தமிழ்ல எழுதற வேலையைச் செய்துட்டு இருக்கோம். குரங்குக்கும் மந்திக்கும் நமக்கு வித்தியாசம் தெரியறதில்லை. யானையைத் தொட்டு பார்த்த குரங்கு கதையாத்தான் நாம இயற்கையைப் புரிஞ்சிவச்சிருக்கோம்.’’அனலாக வார்த்தைகள் வந்து விழுந்தாலும், இவருடைய அக்கறை இயற்கையை காப்பதற்காக மட்டுமே. 20 ஆண்டுகளாக இவர் ‘காட்டுயிர்’ என்ற பத்திரிகையை நடத்தி வருகிறார். பொள்ளாச்சியில் இயற்கை வரலாற்று அறக்கட்டளையை நிறுவி, சூழலில் காப்பதன் அவசியத்தை மக்களுக்கு சொல்லிவருகிறார்.

Untitled-7

‘‘நமக்கு பயன்படக்கூடிய உயிரினங்கள் மட்டும் இந்த உலகத்துல இருந்தா போதாதாங்கிற கேள்வி பலருக்கு வர்றதுண்டு. உண்மையில் இயற்கைளோட ஒவ்வொண்ணும் பிணைந்துதான் இருக்கு. உதாரணத்துக்கு நீலகிரி மலையில வசிக்கிற இருவாசிப் பறவை அழிஞ்சதுன்னா அதோட தொடர்புடைய பத்து வகையான மரங்களும் அழிஞ்சிடும். காரணம், இருவாசிப் பறவை சாப்பிட்டு வெளியேற்றுகிற விதைகளுக்குத்தான் முளைக்கும் திறன் இருக்கு.அதனாலதான் மரங்கள் செழித்து வளருது. இப்படி நம்மைச் சுற்றியிருக்கி பல்லுயிர்களும் செழிப்பா இருந்தாதான் நாமும் செழிப்பா இருக்கமுடியும்’’ என்கிற ச.முகமதுஅலி, ‘யானைகள் அழியும் பேருயிர்கள்’ ‘நெருப்புக் குழியில் குருவி’ ‘பறவையியலாளர் சாலிம் அலி’ போன்ற தமிழில் வந்திருக்கும் முக்கியமான சூழலியல் நூல்களின் ஆரியரும் கூட.

ஆஷிஷ் நந்தியும் இன்னபிற சகிக்க முடியாத பேச்சுக்காரர்களும்

பிரபல அரசியல் மற்றும் கலை விமர்சகரும் சமூகவியல் கோட்பாட்டாளருமான ஆஷிஷ் நந்திக்கு கண்டனங்கள் எழுந்த போது நான் நம்பிக்கை கொண்டேன், ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒலிக்க குரல்கள் இருக்கின்றன என்று! இப்படியெல்லாம்கூட நெகிழ முடிகிறது பாருங்கள். என்னைச் சுற்றி எல்லாவிதமான மக்களும் இருக்கிறார்கள். அவர்களின் எல்லாவிதமான பேச்சுக்களையும் நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். சில சமயம் சகிக்க முடியாத பேச்சுக்களையும்.
சகிக்க முடியாத பேச்சு : 1
‘‘என்கூட படிச்ச …. சாதி பொண்ணு பத்தாவதிலும் பனிரெண்டாவதிலும் பார்டர் மார்க் வாங்கி பாஸ் பண்ணா. கோட்டா மூலமா டீச்சர் டிரெயினிங் முடிச்சு கவர்மெண்ட் ஸ்கூல்ல டீச்சராயிட்டா. எடுத்த எடுப்பிலேயே மாசம் 12 ஆயிரம் ரூபா சம்பளம். அதுபோகட்டும். பார்டர்ல பாஸ் பண்ணவங்க கோட்டாவுல டீச்சர் ஆகற ஸ்கூல்ல நம்ம பிள்ளைகளை படிச்சா நூத்துக்கு நூறா வாங்குவாங்க?’’
சகிக்க முடியாத பேச்சு : 2
‘‘பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் லஞ்சம் வாங்குகிறார்கள். இப்போது அந்த வரிசையில் பழங்குடிகளும் சேர்ந்துவிட்டார்கள்’’
ச.மு.பேச்சு: 1 மற்றும் ச.மு.பேச்சு: 2 ‘ஸோ கால்டு மிடில் கிளாஸ்’ கண்ணோட்டத்தில் மிக மிக சரியானவையாகப் படுகின்றன. இதில் வேதனையான  விஷயம்… இடஒதுக்கீடு மூலம் முன்னுக்கு வந்தவர்கள் இடஒதுக்கீட்டு எதிராக செயல்படுவதும் அறிவுஜீவிகளாக காட்டிக்கொள்பவர்கள் சமூகத்தை பின்னோக்கி இழுப்பதுவும்தான்.
முன்னோக்கிய சமூத்தைச் சேர்ந்தவர்கள் எதை சதா யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்? கையில் இருக்கும் கடைசி ரூபாயைக்கூட பிடிங்கிக்கொள்ளும் தனியார் பள்ளிகளின் அட்டூழியங்களை எப்படி ஒழிப்பது என்றா? இல்லவே இல்லை… என்னைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர் எப்படி முன்னேறலாம்? என்பதாகத்தான் சதா சிந்தனைகள் இருக்கின்றன. அறிவுஜீவிகளும் இதைத்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடிகளும் புதிதாக லஞ்சம் வாங்குவது லஞ்சம் வாங்குவதில் முன்னோடிகளான முன்னோக்கிய சமூகத்துக்கு கண்டனத்துக்குரியதாக இருக்கிறது. அதன் ஒட்டுமொத்த பிரதிநிதியாகி இருக்கிறார் ஆஷிஷ் நந்தி. ஒரு கட்டுரையாளர் எழுதினார் ‘‘ஆஷிஷ் நந்தி பேச நாட்டில் நிறைய விஷயங்கள் இருக்கிறது’’ என்று.
ஆஷிஷ் நந்தி வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ‘‘இது போன்ற கருத்துகளைச் சொல்ல உங்கள் க்ளையண்ட் (ஆஷிஷ் நந்தி) எந்தவித லைசென்ஸும் பெறவில்லை’’ என்று பேசியது, கருத்து சுதந்திரம் பேசும் அறிவுஜீவிகளுக்கு பதில் சொன்னது.
ஆனால் என்னை சுற்றியுள்ள முன்னோக்கிய சமூகத்தின் சகிக்க முடியாத பேச்சுக்காரர்களுக்கு எதன் மூலம் பதில் சொல்வது?

சில பூக்கள், சில பறவைகள் – ஒரு புகைப்பட தொகுப்பு

சமீபத்தில் நான் எடுத்த சில புகைப்படங்கள் இவை…

விடியலில் ரோஜா...

விடியலில் ரோஜா…

கால்களிலும் முளைத்திருக்கும் இறகுகள்...

கால்களிலும் முளைத்திருக்கும் இறகுகள்…

கைவிரித்த நட்சத்திர பூ

கைவிரித்த நட்சத்திர பூ

வெளிர் வானத்தில் இரண்டு புறாக்கள்

வெளிர் வானத்தில் இரண்டு புறாக்கள்

சிவப்பு ரோஜா!

சிவப்பு ரோஜா!

அறுவடை முடித்த நாளில் எதைத் தேடுகிறது இந்தக் குருவி?

அறுவடை முடித்த நாளில் எதைத் தேடுகிறது இந்தக் குருவி?

 என் வீட்டு ரோஜா வண்ணங்களின் கலவையில்.

என் வீட்டு ரோஜா வண்ணங்களின் கலவையில்.

ஒரு மாலை நேர ஓய்வில் இந்த காகங்கள்...

ஒரு மாலை நேர ஓய்வில் இந்த காகங்கள்…