சில புதிய படைப்புகள்…

கடந்த சனிக்கிழமை புதிய அணிகலன்களை உருவாக்க சில வகையான மணிகளை வாங்கினேன். நான் அதிகமாக அணிகலன்களை அணிவதில்லை. தங்கம் அணிவதில் எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. பணிபுரிய தொடங்கிய புதிதில் பெரிய காதணிகளை விரும்பி அணிந்ததுண்டு. இப்போது அதுவும் இல்லை. பத்து மணிகளுக்குள் அடங்கிவிடும் நான் இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் அணிகலன்கள் எளிமையாக இருக்கின்றன. அதற்காகவே இவ்வகையான அணிகலன்கள் மிகவும் பிடித்திருக்கின்றன. அணிகலன்களை அதிகம் விரும்பும் இந்திய பெண்களுக்கு இந்த எளிமையான அணிகலன்களை விரும்புவார்களா என்று தெரியவில்லை. என்னுடைய படைப்புகளை பார்த்தவர்கள் பிடித்திருக்கிறது என்று சொன்னார்கள். உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

 

வட்ட மற்றும் சதுர மர மணிகளால் ஆன அணிகலன்…

sand stone என்று சொல்லப்படும் மணல் கற்களால் ஆன அணிகலன் இது…

இதுவும் மணல் கற்களில் ஒரு வகை. இதன் தட்டையான வட்டவடிவ என்னை ஈர்த்தது…

 நீல நிற படிகக் கற்களால் ஆன அணிகலன்…

இதுவும் மர மணிகளால் ஆனது,  நிறம் இந்த அணிகலனை அழகூட்டுகிறது..

குளவியின் தளராத முயற்சி…

 

 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையில் வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஒரு சிமெண்ட் தொட்டியில் குளவி ஒன்று கூடு கட்டிக் கொண்டிருந்தது. விடியற்காலையில் பெய்த மழையின் சொதசொதப்பு மண்ணில் அப்படியே இருக்க, அதை நேர்த்தியாக ஒரு குயவனைப் போல குழைத்து குழைத்து தன் கூட்டை கட்டிக் கொண்டிருந்தது இந்தக் குளவி.

இந்த இடத்தில் தொட்டிச் செடிகள் வளர்க்க ஆரம்பித்த காலத்திலிருந்த இந்தக் குளவி இங்கே வசிக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருக்கலாம். மழை வரும்போதோ, செடிகள் நடும்போதோ கூடு உடைந்துவிட்டால், அடுத்த சில நாட்களில் கூடு கட்டிவிடும் இந்தக் குளவி. இந்த முறை கூடு கட்டும்போது அதை பதிவு செய்ய விரும்பினேன்.

உள்ளிருக்கும் மண்ணைக் குழைத்து, முன்பக்க கால்களால் உருட்டி மேலே கொண்டி வந்து, அதை கட்டிக்கொண்டிருக்கும் வரிசைப்படி வைத்து தன் பின் பக்கத்தால் மண்ணை அழுத்துகிறது. இதனால் கூட்டின் உள்பக்கம் நேர்த்தியாக உருளை வடிவம் பெறுகிறது. எனக்கு கிராமங்களில் மண் வீடு கட்டுவது நினைவுக்கு வந்தது. ஆனாலும் இத்தனை நேர்த்தியாக மனிதர்கள் கட்டிய மண்வீட்டை நான் பார்த்ததில்லை!
DSCN0807

DSCN0808

DSCN0819

DSCN0820

குளவி கட்டி முடித்த மண் கூடு!

 

இதை காணொலியாகவும் பதிவு செய்திருக்கிறேன். ஆர்வமும் பொறுமையும் உள்ளவர்கள் பார்க்கவும்…

etsyல் என்னுடைய அங்காடி…

எனக்கு சிறுவயதில் இருந்தே கைவினை கலைகள் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. என்னுடைய கலைத் திறமையை சோதித்துப் பார்க்கும் வகையில் கைவினை கலைஞர்களுக்கான பிரபல தளமான etsyல் ஒரு அங்காடியைத் துவக்கியிருக்கிறேன்.

 

my shop

நான் செய்த சில கைவினைப் பொருட்களின் செய்முறைகளை நான்கு பெண்கள் தளத்தில் பகிர்ந்திருக்கிறேன்.  etsyல் எப்படி கைவினைப் பொருட்களை விற்கலாம் என்றும் சிறு அறிமுகத்தை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

 

பழவேற்காடு பயணம்!

 

பழவேற்காடு செல்ல வேண்டும் என்பது கிட்டத்தட்ட மூன்று ஆண்டு முயற்சித்தேன். இப்போதுதான் அது நிறைவேறியது. பறவைகள் சீசன் இல்லாத காலமான ஆகஸ்ட் மாதத்தில் எங்கள் பயணம் அமைந்தது. திட்டமிட்டதே பூநாரைகளைப் பார்க்க வேண்டும் என்பதாக. ஆனால் பழவேற்காடில் பூநாரைகள் இல்லை, பழவேற்காடு ஏரியின் இன்னொரு பகுதியான அண்ணாமலைச் சேரியில் பூநாரைகள் இப்போதும் இருப்பதாக சமீபத்தில் படித்தேன். பூநாரைகளை காணும் வாய்ப்பை நாங்கள் இழந்துவிட்டோம்…

மகன் கோசிகனும் கணவரும் இந்தப் பயணத்தில் மிகுந்த உற்சாகமாக இருந்தார்கள்.  DSCN0723

 

பழவேற்காடு ஏரியில் மீன்பிடித் தொழில்…

சில நீர்க்காகங்கள், கொக்குகள், கூழைக்கடா, செங்கால் நாரைகளைக் கண்டோம். பழவேற்காடு ஏரியை ஒட்டியுள்ள கடற்கரை மிக தூய்மையாக, அமைதியாக இருந்தது.

இத்தனை அமைதியான கடற்கரையை நான் ரசித்ததில்லை…மகனும் கணவரும் அலைகளோடு விளையாடினார்கள்.

 

 

DSCN0662 DSCN0657 DSCN0649 DSCN0673

DSCN0635 DSCN0630

 

4நூற்றாண்டுகள் பழமையான கல்லறை…