பள்ளிக்கரணையைச் சுற்றிலும் 31 இயற்கை நீர்த் தொட்டிகள் அமைந்துள்ளன. ஏரிகளாகவும் கால்வாய்களாகவும் உள்ள இந்த நீர்த்தொட்டிகளை சீரமைத்து பாதுகாத்தாலே மழைக் காலங்களில் அதிகப்படியான நீர் கடலுக்குள் சென்று கலப்பதை தடுத்து சேமிக்கலாம். பள்ளிக்கரணைக்கு நீர் வரத்தைத் தரும் வேளச்சேரி ஏரி தற்போது ஆக்கிரப்புகளாலும் பராமரிப்பின்மையாலும் பாழடைந்து வருகிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சில கட்டடங்கள் இதோ…
* போக்குவரத்துக் கழக பணிமனை 92 ஹெக்டேர் பரப்பளவில்
* ஃபெப்ஸி சினிமா தொழிலாளர் சங்கத்துக்கு சொந்தமான இடம் 34 ஹெகடேரில்
* லதா ரஜினிகாந்தின் ஆஷ்ரம் டிரஸ்டுக்கு சொந்தமான நிலம் 5 ஹெக்டேரில்
* தமிழ்நாடு வேளாண் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான இடம் 12 ஹெக்டேரில்
* டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 8 ஹெக்டேரில்
* சட்ட கல்வியகம் 6 ஹெக்டேரில்
* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பிரிக்கும் சாலை 13 ஹெக்டேரில்
* சட்டப்படி வழங்கப்பட்ட பட்டாக்கள் 2 ஹெக்டேர்
* ஐஐடி, சென்னை 17 ஹெக்டேரில்
* முன்னாள் ராணுவ பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் 61 ஹெக்டேர்
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி, 20 ஹெக்டேர்
சென்னை பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இவை. இதில் பெரும்பாலானவை அரசு நிறுவனங்கள் என்பது முக்கியமானது. மெத்தப்படித்த அதிகாரிகளே தொலைநோக்குச் சிந்தனை சிறிதும் இல்லாமல் வடிகால் நிலத்தை ஆக்கிரமிப்பை அனுமதித்ததன் விளைவை ஒட்டுமொத்தமாக அந்தப் பகுதியில் உள்ள அனைவரும் அனுபவிக்கிறார்கள்.
அதுபோல, தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களின் வருகை காரணமாக, வேளச்சேரி-பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நிலத்தை ஆக்கிரமித்து விற்றன.
சென்னை புறநகர் பகுதிகளும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் ஊதிப் பெருக்கப்பட்டு 15 ஆண்டுகளில் கட்டிடங்களால் நிரம்பின. வாங்கும் வசதி படைத்தவர்கள் 2, 3 ஃபிளாட்டுகளை வாங்கினார்கள். இப்படி வாங்கப்பட்ட ஃபிளாட்டுகள் பலவை இன்னும் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வராதவை. தாம்பரம் பகுதியில் ஏரிக்கு நடுவே, சுற்றியும் நீர் சூழ கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளை எப்போதும் காண முடியும். இப்போது அவற்றின் நிலைமை என்னவானதோ?
கிழக்குக் கடற்கரை சாலையில் முட்டுக்காடு கழிமுகப்பகுதியில் நீரின் கரையை ஒட்டி வானுயர்ந்த கட்டடங்கள் முட்டி நிற்கின்றன. வெயில் கொளுத்தும் சென்னைக்கு நீர் நிலையை ஒட்டி வீடிருந்தால் நன்றாக இருக்குமே என்கிற அழகான கற்பனையில் இந்த குடியிருப்புகள் உருவாகியிருக்கும். இந்த அழகான கற்பனை, கற்பனையாக இருப்பதே நல்லது! இந்த பெருவெள்ளத்தில் அந்தக் கட்டடங்களில் பாதி மூழ்கியிருக்கும். சுனாமி வந்தால் மொத்தமாக அள்ளிக் கொண்டு போகும்.
நகரமயமாக்கள் திட்டம் தமிழக அரசினால் ஊழல் நிறைந்ததாக, நிர்வாக சீர்கேடு கொண்டதாக இருக்கும் போது, சென்னைக்கு மிக அருகில் மட்டுமல்ல அபாயம்.
கடவுளே! கண் திறந்து பாராயோ!
http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html