போராட்டம் என்பது மக்கள் குறைகளை அரசுக்கு சுட்டிக்காட்டும் ஒரு வடிவம். அரசின் எல்லா அதிகாரக் கதவுகளையும் தட்டிவிட்டுத்தான் இறுதியாகப் போராட்டத்தை மக்கள் கையில் எடுக்கிறார்கள். இவ்வகையில் ஊடகங்கள் போராட்டங்களை இன்னும் விரிவாக அனைத்து தரப்பினரை(அரசு தரப்பு உள்பட)யும் சேரும் பணிகளைச் செய்பவை. செய்ய வேண்டும். அதுதான் ஜனநாயக அமைப்பை தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறையாக இருக்கும். அதைவிடுத்து “தினந்தோறும் 20 போராட்டங்கள்: நிம்மதி இழந்து தவிக்கும் போலீசார்” என்று தலைப்பிட்டு செய்தி எழுதுவது போராட்டங்களை மழுங்கடித்து, போராட்டங்களை விரும்பாத சர்வாதிகாரத் தன்மையை நிலைநாட்டுவதற்கு உதவி புரிவததாகத்தான் தோன்றும்.
போராட்டத்தைக் கண்காணிப்பதும், அன்றாட நடவடிக்கைகளை பாதிக்காமல் போராட்டத்தை கட்டுப்படுத்துவதுதான் காவல்துறையின் பணி. அரசுக்கே போராட்டங்களை முடக்கும் எண்ணம் இல்லை எனும்போது, ஊடகங்கள் ஏன் போராட்டங்கள் என்றால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்ற கோணத்திலே செய்தி வெளியிடுவது ஏன்?
பொது மக்கள் என்பவர் யார்? தண்ணீர் வரவில்லை என்னும் போது அதிகாரத்தின் அனைத்து கதவுகளையும் தட்டிவிட்டு இறுதியாக சாலையில் இறங்கி போராடுகிறார்கள். இப்படிப் போராடுகிறவர்கள் மக்கள் இல்லையா? சாலையில் இந்தப் போராட்டத்தால் அதிகபட்சம் அரைமணி நேரத்தை இழக்கும் பொது மக்களின் துயரம்தான் இங்கே முக்கியமானதா? அல்லது மாதக் கணக்கில் வருடக்கணக்கில் பாதிக்கப்பட்டு போராட்டத்தில் இறங்கியிருக்கும் மக்களின் துயரம் முக்கியமானதா?
நியூஸ் 7 தமிழ் பல நல்ல விவாதங்களை முன்னெடுக்கிறது. ஆனால், போராட்டங்களைக் கொச்சைப் படுத்தும் இத்தகைய செய்திகள் யாரைத் திருப்திப் படுத்த என்கிற…
View original post 139 more words