நான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது

ஊடகங்கள் சமூகத்தின் நாடி. இங்கே நான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது. நமக்குத் தேவை மேற்குவங்கத்தின் டெலிகிராப் போல துணிச்சலான வெகுஜென ஊடகம். உ.பி. தேர்தலில் தோல்வியடைந்த பாஜக குறித்த தலைப்பு செய்தி இப்படி சொல்கிறது, ‘லெனினுக்கு பிறகு, நகரத்தில் புதிய சிலை’. இந்தத் தோல்வி குறித்து கருத்து சொல்லாத மோடியின் மவுனம் குறித்து பேசுகிறது இந்த தலைப்பு! டெலிகிராப்பின் முகப்பு பக்க தலைப்புகளை தொகுத்து கட்டுரை எழுதலாம். அடுத்து வருகிற ஊடகவியலாளர்களுக்கு முன்மாதிரியாக இப்படி ஊடகம் இருக்கும் என காட்டுவதற்கு உதவும்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டமோ, காவிரிக்கான போராட்டமோ நீர்த்துப் போகிறது, உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது எனில் அதற்கான முதன்மையான காரணமாக நான்காவது தூண் சாய்ந்து கிடப்பதே. ஸ்டெர்லைட்டின் விளம்பரத்துக்காக மக்களை விற்றவர்கள் அல்லவா இவர்கள்?
#IndiaBetraysTamilnadu