”கச்சத்தீவை மீட்போம் என்று கூச்சலிடும்போதெல்லாம் கடலில் இருக்கிறவனுக்கு மரண அடி விழுகிறது!”

  

இதுவரைக்கும் வந்த தமிழ் நாவல்களில் மீனவர்களின் வாழ்க்கை பின்னணியில் ஜோ டி குருஸ் எழுதிய ஆழி சூழ் உலகு நாவலுக்கு தனித்த இடம் உண்டு. மீனவ சமூகத்தின் சிக்கல்கள், அவலங்களை அவர்களுடைய மொழியிலேயே வெளிப்படுத்தியது இந்நாவலின் தனித்துவத்துக்கு காரணம் என்பது விமர்சகர்களின் கருத்து. கொற்கை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தின் பின்னணியில் அடுத்த நாவலை தந்திருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ். புத்தக காட்சியை ஒட்டி வெளியான கொற்கை நாவல்(காலச்சுவடு பதிப்பக வெளியீடு) வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கொற்கையை முன்வைத்து ஜோ டி குருஸுடன் இந்த நேர்காணல்..

கொற்கை நாவல் எதைப்பற்றி பேசுகிறது?

”ஆழிசூழ் உலகு நாவலில் அடித்தள மீனவ மக்களின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை சொல்லியிருந்தேன். பரதவர்கள், மீன் பிடிக்கிறவர்கள் மட்டுமல்ல கடல்வழி வாணிபத்தின் முன்னோடிகள் என்பதை கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டில் கொற்கை செழித்து விளங்கிய துறைமுகம். பாண்டிய நாடு வளமுடைத்து என்ற வாக்கு உருவானதே கொற்கை துறைமுகத்தை வைத்துதான். கொற்கையில் கிடைத்த நன்முத்துக்கள் பாண்டிய நாட்டை வளமுள்ளதாக ஆக்கியிருந்தது. கொற்கையில் கிடைத்த முத்துக்கள் அந்நூற்றாண்டுகளிலேயே பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இதனால் கடல்வழி வாணிபம் சிறந்திருக்கிறது. சில்க் ரூட், பெப்பர் ரூட் என்று சொல்வதைப்போல கொற்கைக்கு பெர்ல் ரூட் இருந்திருக்கிறது. முத்துக்களுக்காக கிரேக்கர்கள், அரேபியர்கள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், வெள்ளையர்கள் கொற்கையைத் தேடி வந்திருக்கிறார்கள். ஆனால் இது எதுவுமே வரலாற்றில் சரியாக பதிவாகவில்லை. ஏராளமான கடல் வளமுடைய மிகப்பெரிய துறைமுகமான கொற்கை பரதவர்களால் ஆனது, ஆளப்பட்டது. வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு அந்த சந்ததிகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து வரலாறு இல்லை. வணிகமும் கலாச்சாரமும் சிறந்து விளங்கிய கொற்கையை பார்த்து ரசித்து வெள்ளையன் உள்ளே வந்திருக்கிறான். இதுபற்றிய குறிப்புகள் நம்மிடம் இல்லை. வெள்ளையர்கள் பார்த்து, ரசித்து உள்ளே வருகிறான். இப்படி வளம்பெற்ற கொற்கை கடந்துவந்த நூறு ஆண்டுகளின் கதையைத்தான் கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த சமூக, பொருளாதார கலாச்சார மாற்றங்களை பேசுகிறது நாவல். போர்த்துக்கீசியர்கள், வெள்ளையர்கள் வெளியேறி சுதேசி அரசாங்கம் வந்த பிறகு கொற்கையில் வாழ்ந்த பரதவர்கள் சமூகம் எப்படி மாறியது என்பதையும் பரதவர்களின் பல்வேறு பிரிவுகளுக்குக்கிடையேயான சமூக சிக்கல்கள், அதை அவர்கள் கையாண்ட விதம் இதெல்லாம் தான் நாவலாக்கியிருக்கிறேன். இதை வரலாற்று ஆவணம் என்று சொல்லமுடியாது. நாவலுக்குள் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களால் இது வரலாற்று ஆவணமாகலாம்.”

மீண்டும் மீனவ சமூகத்தின் பின்னணியில் நாவல் எழுதக் காரணம்?

”சங்கப் பாடல்களில்கூட அம்மூவனார் போன்றவர்கள் நெய்தல் கரையைப் பற்றி பாடினார்களே தவிர, நெய்தல் நில மக்களின் சுக துக்கங்களை பாடவில்லை. நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் இதுகுறித்து எனக்கு நிறையவே ஆதங்கம் உண்டு. நெய்தலின் மீதும் நெய்தல் மக்களின் மீதும் உள்ள பாசத்தின் வெளிப்பாடுதான் என் எழுத்து முயற்சி. வருமானத்துக்காக ஒரு வேலையில் இருக்கிறேன், ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.

என் சமூகத்தில் உள்ள அவலங்களை கோளாறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாக படுகிறது. ஆழி சூழ் உலகு நாவல் வெளிவந்த பிறகு, ஊரில் நிறைய எதிர்ப்பு வந்தது, வந்துக்கொண்டிருக்கிறது. நிலைக்கண்ணாடி போல ஒரு சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் சமூக குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். ஆடி போல சமூகத்தைக் காட்ட வேண்டும். அதனால் மேற்படியான எதிர்ப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை!

நாவலில் சொல்லவந்ததை ஒரு கட்டுரையிலேயே கூட சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் அதை அப்படி சொல்ல விரும்பவில்லை. வாழ்வாக சொல்ல விரும்பினேன். ஆழி சூழ் உலகு எழுதி முடித்த உடனே கொற்கையை எழுத உட்கார்ந்தேன். 2005 தொடங்கி 2009 ஆண்டு முடிய நாவலுக்காக உழைத்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்து எனக்குள் போன செய்திகளை மெருகுபடுத்தி சேர்த்திருக்கிறேன். வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள், ஆண்களை சந்தித்து பேசி தகவல்களை திரட்டினேன். நாவலை எழுதி முடித்தவுடன் ஒருவித அயற்சி ஏற்பட்டது. எழுதி முடித்த பக்கங்களை தூக்கி பரணில் போட்டதைப் பார்த்த என் மனைவி பதறிக்கொண்டு ஐந்து வருட உழைப்பை வீணாக்கலாமா? என்றார். பிறகுதான் எழுதியதை பதிப்பகத்திடம் கொடுக்கும் முடிவுக்கு வந்தேன். நாவல் எழுதி முடித்தபோது ஏற்பட்ட அயற்சிக்குக் காரணம், முன்னோடியாக இருக்க வேண்டிய சமூகம் இப்படி முடங்கிக் கிடக்கிறதே என்கிற ஆதங்கம் தான்! என் சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்கிற கேள்வி என்னை சதா துளைத்துக்கொண்டே இருக்கிறது”

எழுதுவதைத் தாண்டி மீனவர்களின் இன்னல்களை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறீர்கள். குறிப்பாக இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் தமிழக மீனவர்கள் பற்றி ஆவணப்படங்கள் எடுத்ததன் பின்னணி என்ன?

”காலம்காலமாக தமிழக மீனவர்கள், வடமேற்கு இலங்கை நோக்கி மீன் பிடிக்கப்போவதுதான் வழக்கம். 1983ல் இலங்கை யாழ்பாணத்தில் நூலகம் எரிப்பு என்கிற நிகழ்வுக்குப்பிறகு, விடுதலைப்புலிகளின் எழுச்சி தொடங்கியபோதுதான் தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தின் தாக்குதல் அரங்கேற்றம் பெற்றது. தமிழக மீனவர்கள் மூலமாக விடுதலைப்புலிகளுக்கு உதவிகள் கிடைப்பதாக கருதியே இலங்கை அரசு இத்தகைய தாக்குதல்களை ஊக்குவித்தது. இன்று ஈழம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஈழப் போராட்டத்தின் பின்னணியில் தென் தமிழக மீனவர்களின் இரத்தமும் கலந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தமிழினம் என்கிற காரணம் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு இன்னும் ஏராளமான கோர முகங்கள் உண்டு. மீனவர்கள் பிடித்த மீன்கள் பிடிங்கிக் கொண்டு வளையை அறுத்துவிடுவதிலிருந்து காதில் இருக்கிற கடுக்கணை பிடிங்கிக் கொள்வது வரையான கடற்கொள்ளையர்களைப் போன்ற செயல்களையும் அவர்கள் செய்கிறார்கள். பச்சை மீனை திண்ணச் சொல்வது, ஐஸ்கட்டியில் நிர்வாணமாக படுக்கவைப்பது, கடலில் தள்ளிவிட்டு இரண்டு, மூன்று மணி நேரம் நீந்தவிட்டு களைத்துப்போகும்போது ஹெலிகாப்டரிலிருந்து சுட்டுப் பழகுவது, இதையெல்லாவற்றையும்விட அப்பன்-மகன் என்று தெரிந்த பின்னும் உறவு கொள்ள கட்டாயப்படுத்துவது கொடுமையின் உச்சம்! கச்சத்தீவை மீட்போம் என்று நாட்டில் கூச்சலிடும்போதெல்லாம் கடலில் இருக்கிறவனுக்கு மரண அடி விழுகிறது.

மீனவர்கள் நாதியில்லாதவர், அவர்களுக்கென்று அமைப்புகள் கிடையாது, ஒருங்கிணைந்த குரல் கிடையாது. இதுதான் காரணமேயில்லாமல் இத்தனை பேரின் இறப்புக்கும் பல இழப்புகளுக்கும் காரணம். நம்முடைய அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எல்லைகளில் வாழ்கிறவர்கள் தானே என்கிற விட்டேத்தி மனோபாவம். இருபது வருடங்களுக்கும் மேலாக மீனவர்களிடையே பணியாற்றுவதாக சொல்லிக்கொள்ளும் தொண்டு நிறுவனங்களிடம்கூட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றுவதற்கான எந்தவித திட்டமும் இல்லை. குறைகளை கணக்கெடுத்திருப்பதுதான் தொண்டு நிறுவனங்கள் செய்திருக்கும் மிகப்பெரிய சேவை!

இதெல்லாம்தான் ‘விடியாத பொழுதுகள்’ என்ற முதல் ஆவணப்படம் எடுக்க தூண்டுதலாக அமைந்தது. அவலங்களை மட்டும் சொன்னால் எனக்கும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அதனாலேயே பிழைப்புக்காக எல்லைத் தாண்ட நேரிடும் மீனவர்களுக்கு மாற்று வழியைச் சொல்லும் நோக்கில் விடியலை நோக்கி என்ற ஆவணப்படத்தை எடுத்தேன். மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள மூக்கையூர் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்வு. மூக்கையூர் பகுதியில் வீணாகிக்கொண்டிருக்கும் ஆழ் கடல் வளத்தை பயன்படுத்த வாய்ப்பாகவும் இந்தத் தீர்வு அமையும். பரவலாக கவனம் பெற்ற இந்த ஆவணப்படத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருது கொடுத்திருக்கிறது. விருது பெறுவது, கவனம் பெறுவது என்பதைவிட என் மக்களின் துயரம் அறியப்படவேண்டும் என்பதுதான் என் நோக்கம். மீனவ சமூகத்திலிருந்து வந்த எனக்கு, என் சமூகத்தின் வலி நன்றாகவே தெரியும். ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே அலறுகிறார்கள் எம் மக்கள். கைநிறைய சம்பளமும் வசதி குறைவில்லாத வாழ்க்கையும் எனக்கு நிறைவை தந்துவிடாது. எம் மக்களின் வாழ்வுக்காக எதையாவது நான் செய்துகொண்டே இருப்பேன். ஏனெனில் மூச்சு விடுவது மட்டுமே வாழ்க்கையில்லை!”

இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை

மே 1′  2009ல் எழுதி காணாமல் போன ‘இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை’ கட்டுரையின் மறுபிரசுரம் இது…

”குடிக்கத் தண்ணி வேணும்” என்று இறைஞ்சிய அந்தப் பெரியவரின் முகம் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது. வேகு நேரம் முன்வாசல் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தவருக்கு அந்த வீட்டினர் வேண்டா வெறுப்பாக தண்ணீர் கொடுத்ததற்கும் அவர் சென்று பின் ‘வீட்டை நோட்டம் வீட்டுப்போய் திருட வருவார்கள்’ என தகவல் சொன்னதற்கும் காரணம் இருந்தது. அவர் இலங்கை தமிழர் என்பதுதான் அந்தக்காரணம். சணல் பையை தோல்களில் மாட்டி நிராதரவாதிக்கான அத்தனை தகுதியோடும் முகாமில் அரசாங்கம் தரும் அரிசியை வாங்கக் கிளம்பிக்கொண்டிருந்த இலங்கை தமிழனை ‘திருடன்’ என முத்திரையிட்டது இந்திய(?) தமிழன்..100 சதவீதம் சுத்த தமிழ் ரத்தத்தில் பிறந்த தமிழன்! இது நானே நேரில் கண்டது. இலங்கை அகதிகளாக இங்கே தஞ்சம் புகுந்திருக்கும் தமிழர்கள் குறித்தான கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கிறது. பல்வேறு ஊடகங்களில் தாங்கள் இம்மண்ணில் பட்ட அவமானங்களை அவமதிப்புகளை அகதி முகாமில் இருக்கும் தமிழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அகதி முகாம்களில் இல்லாது தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் சற்றே வசதி படைத்த இலங்கை தமிழர்கள் மீது இந்த கண்ணோட்டம் இல்லை. இலங்கை போரால் மாய்பவர்களும், மாய்வதை மறுத்து அகதியாகவாவது பிழைத்துக் கொள்ளலாம் என திருட்டுப் படகு ஏறுபவர்களும் யார்? விமானத்தில் பறக்க காசில்லாதவர்கள், வறியவர்கள். பொருளாதார பின்புலம் மிக்கவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டு கடைநிலை மக்களாகவேனும் வாழ்க்கையை நடத்துகிற சூழல் வாய்த்திருக்கிறது, சில ஆண்டுகள் உழைத்தால் வசதிகள், மதிப்புகளும் தேடிவருகின்றன. ஆனால் வறியவர்களின் நிலை என்ன? உறவுகளையும் உடைமைகளையும் இழந்து ஏதுமற்றமற்றவர்களாக இறுதிவரை போரிட்டு உங்களுக்கு தனி ஈழம் பெற்றுத்தருவார்கள் நீங்கள் தமிழர் என்று சொல்லிக்கொண்டு, இந்தியாவிலும் புலம் பெயர்ந்த இடங்களிலும் கேக் வெட்டிக் கொண்டாடுவீர்கள்? இலங்கை தமிழருக்கு ஆதரவு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு புழக்கடை வழியாக பண உதவி செய்துகொண்டு புலம்பெயர் நாடுகளில் வாழம் எத்தனைப் பேர் தங்கள் வாரிசுகளை ஆயுதம் தூக்கிப் போராட அனுப்பி வைப்பீர்கள்? வாய்க்கிழிய வீர வசனம் பேசுகிற இந்திய தமிழர்களாகிய நீங்கள், திருட்டுப் படகு ஏறிப்போய் இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட வேண்டியதுதானே? இவ்வளவு பேசுகிற நீங்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வரும் இலங்கைத் தமிழரை எப்படி நடத்துகிறீர்கள்? போர்ச்சூழலில் கணவனை இழந்து கைம்பெண்களாகவும் பெற்றோரை இழந்து அநாதைகளாய் நிற்கும் குழந்தைகளை நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? குறைந்தபட்சம் அகதி முகாம்களுக்காவது சென்றதுண்டா? இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் போர் நூற்றாண்டை எட்டினாலும்கூட பரவாயில்லை என்னும் தோணியில் வெளிப்படும் சிலரின் கருத்துகள் ஆழ்மன வன்மைத்தான் காட்டுகின்றன. இதற்கு தமிழ் இன உணர்வு என முலாம் பூசுவது வறியர்களை சுரண்டிப் பிழைக்கும் ஈனச் செயலன்றி வேறில்லை. 37 முத்துக்குமாரர்களின் தற்கொலைக்கு காரணமானதும் இதுதான். சிங்கள அரசியல்வாதிகள்தான் இனவெறியர்களாக தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள் எனில் தமிழன் இன்னொரு தமிழனை கொல்வதை எந்த வகையில் சேர்ப்பது? அப்பாவித் தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்துவதும், மீறிச் செல்பவர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்வதும் இன சுத்திகரிப்புச் செயலா? இதையெல்லாம் மறைத்துவிட்டு நீங்கள் யாருக்காக போரை நிறுத்து என்று கூவிக்கொண்டிருக்கிறீர்கள்? தமிழ் ஊடகங்களில் இத்தகைய வமர்சனங்கள் வெளிவற வாய்ப்பே இல்லை. புலிகள் ஆதரவு இணைய தளங்கள் கொடுக்கும் செய்திதான் இவர்களுடைய செய்தி மூலங்கள். பிறகு எப்படி நியாயமான செய்திகள் தெரிய வரும்? ‘நேற்று நடந்த சண்டையில் 50 புலிகள் இறந்துவிட்டனர்’ என்கிற செய்தி பலரை தூக்கி வாரிப்போடுகிறது. உடனே செய்தி வெளியிட்ட ஊடகத்திடம் எப்படி நீங்கள் இந்த செய்தியை வெளியிடலாம் என்கிறார்கள். சமீபத்தில் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு அமைதிப்பேச்சுக்கு வரவேண்டும் என்று அமெரிக்கா விட்டிருந்த அறிக்கையை வெளியிட்டதற்காக குறிப்பிட்ட அந்த ஊடகத்திற்கு தமிழகத்தின் மூத்த புலிகள் ஆதரவாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு போயிருக்கிறது. இந்த ஆதரவாளர்களின் நிலையெல்லாம் புலிகள் பலியாகிறார்களே என்கிற கரிசனம் அல்ல.. புலிகள் இல்லையென்றால் ஒட்டுமொத்த போராட்டமே இல்லை, புலிகள் எந்த நிலையிலும் தங்கள் நிலையை விட்டு கீழிறங்கி வரக்கூடாது என்று இவர்களாக கட்டமைக்கும் ஹீரோயிசம்தான் பின்னணி காரணங்கள். இலங்கையில் ஆயுதம் தாங்கிய போராட்டம் 1970க்கு முன்பிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. 1970களுக்குப் பிறகு பெரிய அளவில் பரவியது என ஈழப்போராட்த்தின் முன்னோடிகளில் ஒருவரான, மறைந்த சி.புஷ்பராஜா பதிவு செய்திருக்கிறார். சக போராளிக்குழுக்களை எப்படி திட்டமிட்டு விடுதலைப் புலிகள் அழித்தார்கள் என்பதையும் சி.புஷ்பராஜா தன்னுடைய ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் விரிவாகவே பேசியிருக்கிறார். என்னுடைய நோக்கம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதல்ல, அதற்கான நேரமும் இதுவல்ல என்று எனக்குத் தெரியும். வெறுமனே போர் நிறுத்தத்தை மட்டுமே எத்தனை காலத்துக்கு பேசுவீர்கள் என்ற ஆதங்கத்தின் அடிப்படையிலே நிரந்தர அமைதிக்கான வழிகள் குறித்து பேசுங்கள் என எழுதினேன். உலகில் நடக்கும் எந்தவொரு போராட்டத்தையும் மற்றொரு போராட்டத்துடன் ஒப்பிட முடியாது. நேளாப சூழலுடன் இலங்கை சூழலை ஒப்பிடவில்லை. அதிலிருந்து கற்க விஷயங்கள் உண்டு என்பதையே வலியுறுத்துகிறேன். புதிய புத்தகம் பேசுது இதழுக்கு அளித்த நேர்காணலில் அ.மார்க்ஸ் இதை தெளிவாக சொல்லியிருக்கிறார். கீற்றுவில் வெளியான அவருடைய நேர்காணலைப் படிக்க இங்கே சொடுக்கவும். ஈழத்தமிழர் போராட்டத்தையும் இன்னல்களையும் மலிவான அரசியலுக்காகப் பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகளைப்போல சாகச மனநிலையில் அணுகும் பெருங்கும்பல்கள் தமிழகத்திலும் புலம்பெயர்ந்த இடங்களில் இருக்கிறது என்ற ஷோபா சக்தியின் கூற்றை இங்கே நினைவுபடுத்துகிறேன் . உங்கள் சாகச மனோநிலைக்கு இன்னும் பல அப்பாவிகளை பலியாக்க விரும்புகிறீர்கள். ஈழத்தமிழர்களின் அடிப்படை மனிதாபிமான பிரச்சினைகளை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? இனப்படுகொலையைவிட இதுதான் கொடியது! இறுதியாக…எனக்கும் போதாமைகள் இருக்கலாம். ஆனால் அடிப்படைக்கூட தெரியாமல் எழுத எப்போதும் நான் முயற்சித்தது கிடையாது. தெரியாத விஷயங்களை எழுதுவதும் கிடையாது. தமிழனாக அல்லது இலங்கை தமிழனாக பிறந்து வாழந்தால் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேச தகுதியாக நீங்கள் வரையறுத்து வைத்திருக்கலாம். ஆனால் பேசுவது மனிதாபிமான அடிப்படையில். அதற்கு மனிதன் என்பதைவிட வேறு எந்த தகுதிகளும் தேவையில்லை!

இலங்கை இப்போது…

தமிழ் இலக்கிய சூழலில் சமூகத்தின் மீது அக்கறையும் கரிசனமும் கொண்டு எழுதிவரும் படைப்பாளிகளில் முக்கியமானவர் ஆதவன் தீட்சண்யா. அதிகார வர்க்கத்தின் மீது தயங்காமல் விமர்சனம் வைக்கக்கூடியவர். சிறுகதை, கவிதை, கட்டுரை என இயங்கிவரும் ஆதவன், புதுவிசை என்கிற கலாச்சாரக் காலண்டிதழின் ஆசிரியராகவும் செயல்படுகிறார். இவர் எழுதி பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம், தந்துகி என இரு கவிதை நூல்களும் எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள், இரவாகிவிடுவாதலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை என இரு சிறுகதை நூல்களும் வெளியாகியுள்ளன. மலையக மற்றும் இலங்கை தமிழர்களின் வாழ்நிலை குறித்து அறிய சமீபத்தில் இலங்கை சென்று வந்திருக்கிறார் ஆதவன். சூரியகதிர் மாதமிருமுறை இதழுக்காக மின்னஞ்சலில் அனுப்பிய கேள்விகளுக்கு ஆதவனின் பதில்

 
# இலங்கைபயணத்தின்நோக்கம்என்ன?  
நமதுநேரடிச்சொந்தங்களானமலையகத்தமிழரை சந்திப்பது, இலங்கைத்தமிழர்களின்வடபகுதிக்குச்செல்வதுவிடுதலைப்புலிகளைஒடுக்குவதாகச்சொல்லிக்கொண்டுஅந்தஅப்பாவித்தமிழர்கள்மீதுஇலங்கைராணுவம்நிகழ்த்திமுடித்திருக்கும்அட்டூழியங்கள், அத்துமீறல்கள், படுகொலைகள் குறித்து நேரடியாகஅறிவது, இன்றைய சூழலை விளங்கிக்கொள்வது, வாய்ப்பிருந்தால் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள வவுனியா முகாம்களுக்கு சென்று நிலைமையை நேரில் அறிவது என்பவைதான் எனது பயணத்திட்டம். அக்டோபர் 8 முதல் 15 வரை கண்டி, மாத்தளை, ஹட்டன்ஆகியமலையகநகரங்கள்மற்றும்அவற்றைச்சுற்றியதோட்டங்கள். 16-18 கொழும்பு. 19-21 யாழ்ப்பாணம். 22 மாலைநாடுதிரும்பினேன். குழுவிவாதங்கள். அந்தனிஜீவா, ஜோதிகுமார், ரங்கன்போன்றதோழர்கள்ஏற்பாட்டில்சிறியதும்பெரியதுமாகநடந்த 11 நிகழ்வுகளில்பங்கெடுத்தேன். 
# போருக்குப்பின்இலங்கைஎப்படிஇருக்கிறது? பாதுகாப்புகெடுபிடிகள், மக்களின்அன்றாடவாழ்க்கைநிலை, அரசியல், ராணுவரீதியானபோக்குகள்?
 நாட்டின் எந்த மூலையிலும் துண்டுத்துக்காணி இடத்திலும் மணல்மூட்டைகளுக்குப் பின்னால் தயார்நிலையில் குமிந்திருக்கிறது ராணுவம். போர்உக்கிரமாக நடந்துகொண்டிருப்பதான பீதியே நிலவுகிறது. குண்டுதுளைத்து பாழடைந்த கட்டிடங்கள், கைவிடப்பட்டவீடுகள், அடர்ந்தபுதர்கள் என்று எங்கு பார்த்தாலும் ஒருதுப்பாக்கிக்குழல் துருத்திக்கொண்டுள்ளது. எந்நேரமும் நம்மை கண்காணிக்கிறது ஒருராணுவக்கண். தினசரி ஒருமுறையாவது ராணுவச்சோதனைக்கு உட்படாமல் பொதுஇடங்களில் நடமாடும் சுதந்திரம் அங்கு ஒருவருக்கும் வாய்க்கவில்லை. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் 40 நிமிட விமானப்பயணம். ஆனால் பறப்பதற் குமுன்னும்பின்னுமாக ஒருவர் 6 மணிநேரம்ஆர்மிக்காரர் முன்கைகளை பக்கவாட்டில் விரித்துக்கொண்டு சோதனைக்கு நின்றாகவேண்டும். -9 பாதை வழியே கொழும்பு திரும்புவதற்கும் இதேபாடுதான். பயணிகளை மூட்டைமுடிச்சுகளோடு இறக்கி சோதனையிடுவதும், அரசாங்க கட்டிடங்களுக்குள் நுழைகிறவர்களை அங்குலம் அங்குலமாக சோதிப்பதுடன் அவர்களின் செல்போன்காமிரா போன்றவை பறித்துவைத்துக் கொள்ளப்படுவதும், உயர்பாதுகாப்புவலயம் என்றபெயரால் முள்வேலிகளால் தடுத்துவைக்கப்பட்ட பிரதேசங்களும் ஆட்சியாளர்களின் அச்சத்தையும் சந்தேகப்புத்தியையும் அம்பலப்படுத்துகின்றன. பிடிபடாமல் தப்பித்துவிட்ட புலிகள் என்ற சந்தேகத்துடனேயே பொதுமக்களை அரசாங்கமும் ராணுவமும் அணுகுகின்றன.
 முன்பேனும் ராணுவத்திற்கு புலிகள் என்ற திட்டவட்டமான கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள் இருந்தார்கள். இப்போதுஎதிரியாரென்றேதெரியாதநிலை. ஆனால் எவரொருவராலும் எந்தநேரத்திலும் தன்நாட்டுக்கு ஆபத்துவரக்கூடும் என்கிற தன்முனைப்பை விரைத்து நிற்கிற ஒவ்வொரு ராணுவச் சிப்பாயிடமும் பார்க்கமுடிகிறது. இந்த தன்முனைப்பு, வெறுமனே ஒரு ராணுவத்தானுக்கு உரியதல்ல. அது, நீ சிங்களவன், இதுஉன்னுடையஉனக்கே உனக்கான நாடுஅதை பத்திரமாக பார்த்துக்கொள்வது உனது பொறுப்பு என்று இனவெறியேற்றப்பட்டவனின் மனநிலையிலிருந்து பிறக்கிறது. எனவே தன்னை கடந்துபோகிற ஒருவரை உயிரோடு அனுப்புவதோ தன்நாட்டுக்கு ஆபத்தானவர் என்று சுட்டுத்தள்ளுவதோ அந்தகணத்திலான அந்த சிப்பாயின் கருணையின் பாற்பட்டதாக இருக்கிறது. அவ்வாறு சுட்டுத்தள்ளினாலும் அதற்காக அவர் யாரிடமும் பதில் சொல்லவேண்டிய கடப்பாடு ஒன்றுமில்லை. அத்துமீறல்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட மக்களோ அமைப்புகளோ அங்கு இல்லை. மனித சமூகத்தின்மேன்மைக்குமகத்தானபங்களிப்புசெய்யவேண்டியஇளைஞர்சக்திசீருடையணிந்தஒருஇனவெறிப்பட்டாளமாகதிசைமாற்றப்பட்டுள்ளது. எதிரியைவேட்டையாடும்வன்மத்தையும்கனத்தஆயுதங்களையும்சுமந்துகொண்டுதினமும்விரைப்பாகதயாராகிகுறுக்கும்நெடுக்கும்உலாத்திக்கொண்டிருக்கிறஅந்தசிப்பாய்களின்மனநிலையில்ஏற்படும்சிதைவுகள்அந்தசமூகத்தைஎன்னவாக்கப்போகிறதுஎன்பதுவெறுமனேஉளவியல்பிரச்னைஅல்ல. நம்மூரில் நடிகர்களுக்கும் தலைவர்களுக்கும் ஊதாரித்தனமாக வைக்கப்படுவதை விடவும் பலமடங்குப் பெரியதான கட்அவுட்களில் ராணுவத்தினரின் மூர்க்கமான முகங்கள் அச்சமூட்டுகின்றன. ராஜபக்ஷேகட்அவுட்களில்கூடதனியாய்நிற்பதில்லை, ராணுவத்தினர்புடைசூழவேகாட்சிதருகிறார். அரசாங்கவிளம்பரங்களில்கூடராணுவச்சிப்பாய்களின்படங்களேபெருமிதத்தோடுஇடம்பெறுகின்றன. ராணுவத்தினரை கதாநாயகர்களாகக் கொண்டாடுவது அவர்களது வீரதீரச் செயல்களுக்காக அல்ல. அவர்கள் வெளிப்படுத்திய சிங்கள இனவாதத்திற்காகத்தான் என்பதை புரிந்து கொள்வது கடினமானவிசயமல்ல. போரின் வெற்றியைக் கொண்டாடுவது என்ற பெயரால் ராணுவத்தை முன்னிறுத்தி சிங்களப்பெருமிதம் தொடர்ந்து விசிறிவிடப்படுகிறது. ராணுவத்தின் மீதான மக்களின் இந்த ஈர்ப்பை யார் அறுவடை செய்வது என்கிற போட்டியின் வெளிப்பாடுதான் இப்போது ராஜபக்ஷேவுக்கும் சரத்பொன்சேகாவுக்கும் இடையேமுட்டித் தெறிக்கிறது. அந்தநாட்டில்இன்றுவரைநாடாளுமன்றஜனநாயகம்நீடித்திருப்பதாகஅலட்டிக்கொண்டாலும்உண்மையில்அங்குராணுவம்தான்சமூகத்தைகட்டியாள்கிறது.
 யாழ்ப்பாணத்திற்குள்ஒருவர்நுழைவதோஅல்லதுஅங்கிருந்துவெளியேறுவதோபாதுகாப்புஅமைச்சகத்தின்அனுமதியைப்பெற்றால்மட்டுமேசாத்தியம். ( இந்தநிபந்தனைகடந்தவாரம்தளர்த்தப்பட்டிருப்பதாகஒருஅறிவிப்புவெளியாகியுள்ளது) யாழ்ப்பாணத்திலிருந்துவவுனியாவுக்குசெல்கிறபேருந்துகளில்உங்களதுஇருக்கைஎண்ணைஒதுக்குவதும்கூடஒருசிப்பாய்தான்என்பதேநிலைமையைவிளங்கிக்கொள்ளப்போதுமானது. வவுனியாசெல்லும்பேருந்துகள்புறப்படும்இடம்கூடராணுவத்திடம்தான்உள்ளது. 8.30க்குபுறப்படும்பேருந்தில்செல்கிறவர், அங்குஅதிகாலை 5.30 மணிக்கேசோதனைக்காகவரிசையில்நின்றாகவேண்டும். அங்குள்ளகழிப்பறைகளில்கூடதண்ணீர்கிடையாது. தமிழருக்குதண்ணீர்ஒருகேடாஎன்றநினைப்பாயிருக்கும். ராணுவச்செலவுக்கானநிதிஒதுக்கீட்டைஅதிகரிப்பது, ராணுவத்தினரின்எண்ணிக்கையைஇப்போதுள்ளதுபோல்இரட்டிப்பாக்குவதுஎன்றஆட்சியாளர்களின்முடிவுகள்தமிழர்களுக்குமட்டுமல்ல, வாழ்வியல்நெருக்கடிதாளாமல்ஒருவேளைசிங்களவர்கள்போராடத்தொடங்கினால்அவர்களுக்கும்எதிரானதுதான். மக்களைப்பொறுத்தவரை, கின்னஸ்புத்தகத்தில்இடம்பிடிக்கசிலர்கொடியவிஷப்பாம்புகளுடன்கண்ணாடிகூண்டுக்குள்வாழ்கிறசாகசத்தைப்போலஇந்தராணுவகெடுபிடிக்குள்வாழப்பழகிவிட்டார்கள். முதல்ராணுவத்தின்கட்டுப்பாட்டில்தான்யாழ்ப்பாணம்இருக்கிறது. இப்போதுதமிழர்களின்முழுப்பகுதியையும்ராணுவம்கைப்பற்றியிருக்கிறது. 9 பாதையில்பயணிக்கிறபோதுஆனையிறவுதொடங்கிஓமந்தைவரைக்கும்ஒரேயொருசிவிலியனைக்கூடகாணமுடியவில்லை. அந்தநெடுஞ்சாலையின்இருமருங்கிலும்இருந்தஎல்லாசிற்றூர்களும்கிளிநொச்சிபோன்றநகரங்களும்இடித்துதரைமட்டமாக்கப்பட்டுள்ளன. கோயில்கள், தேவாலயங்கள், கல்விக்கூடங்கள், அரசுஅலுவலகங்கள், நீதிமன்றங்கள், தண்ணீர்தொட்டிஎதுவும்மிஞ்சவில்லை. எத்தனையோதலைமுறைதாண்டிபலன்கொடுக்கும்பனைமரங்கள்தலைவெட்டப்பட்டுமொட்டைமொட்டையாகஆயிரக்கணக்கில்நிற்பதும்மனிதநடமாட்டமற்றபகுதிகளில்மாடுகள்கேட்பாரற்றுஅநாதைகளாகசுற்றியலைவதும்நெஞ்சையறுக்கும்காட்சிகள். ஆளரவமற்றஅந்தபாதைநெடுகிலும்நிறுத்தப்பட்டிருக்கும்சிப்பாய்களுக்குஇன்னும்எதிரிகள்தேவைப்படுகிறார்கள். அதேவேளையில்மக்களின்நண்பர்கள்என்றுகாட்டிக்கொள்கிறபகட்டுக்கும்குறைவில்லை. இழவுவீட்டாருக்குநெருங்கியஉறவினர்கள்சாப்பாடுசெய்துபகிர்வதுபோல, பொன்னாலைக்கட்டியான்என்றதமிழர்கிராமத்தில்ஒருஇழவுவீட்டிற்குராணுவமுகாமிலிருந்துசாப்பாடுசெய்துஅனுப்பட்டதாம். முகாமிலிருந்துவிடுவிக்கப்படுபவர்களுக்காககட்டப்படவிருக்கிறஅடுக்குமாடிகுடியிருப்புகளில்சிங்களவர்களும்குடியமர்த்தப்படலாம்என்கிறஅச்சம்இப்போதேஉலவுகிறது. -9 பாதையின்இருமருங்கும்காட்டைஅழித்துஉருவாக்கப்பட்டுள்ளவெற்றிடங்களில்ராணுவமுகாம்கள்அல்லதுசிறப்புபொருளாதாரமண்டலங்கள்என்றபெயரில்தமிழரல்லாதாரைகுடியேற்றும்திட்டமும்அரசிடம்இருப்பதாகசந்தேகம்வலுத்துள்ளது. குண்டுசத்தமும்ஷெல்லடியும்ஓய்ந்திருக்கும்இன்றையநிலைஅமைதிக்குபதிலாகஒருஉறைந்ததிகிலூட்டும்மௌனத்தையேகொண்டுவந்திருக்கிறது. மக்கள்இறுகியமௌனத்தின்வழியாகஎல்லாத்துயரங்களையும்கடக்கஎத்தனிக்கிறார்கள். ஒவ்வொருவீட்டிலும்எஞ்சியிருக்கும்விதவைகளையும்அங்கவீனர்களையும்மனநிலைப்பிறழ்ந்தவர்களையும்பார்த்துப்பார்த்துமருகிப்போய்உறைந்துநிற்கும்அவர்கள்மனம்திறந்துபேசஇன்னும்கனகாலம்செல்லும். இந்தப்போரைஉசுப்பேற்றிகொன்றதில்நமக்கும்பங்கிருக்கிறதுஎன்றகுற்றவுணர்வில்நாம்காத்திருக்கவேண்டியதுதான். அங்கிருந்துதமிழர்கள்வெளியிடும்சஞ்சிகைகள்எதிலும்ஈழப்போராட்டம், அல்லதுராணுவத்தின்அட்டூழியங்கள், முகாம்களில்வதைபடும்மக்களின்துயரம்என்றுஎதையும்பேரளவில்காணமுடியவில்லை. தணிக்கையும்சுயதணிக்கையும்அவர்களின்எழுத்துச்சுதந்திரத்தைஅந்தளவுக்குகட்டுப்படுத்தியிருக்கிறது. நாளிதழ்களில்ஓரளவுக்குஇதுகுறித்தசெய்திகளைப்பார்க்கமுடிந்தது.

# முகாம்களுக்குச்செல்லும்வாய்ப்புகிடைத்ததா?

 யாழ்ப்பாணம்செல்வதேஎனக்குபெரும்பாடாகிவிட்டது. யாழ்ப்பாணத்திற்குமுதல்முறையாகசெல்பவர்விமானத்தில்தான்சென்றாகவேண்டும். விமானடிக்கெட்பெறவேண்டுமானால்பாதுகாப்புத்துறைஅமைச்சகத்தின்அனுமதிக்கடிதம்இருந்தால்மட்டுமேசாத்தியம். இந்தஏற்பாடுகளைதோழர்கள்ரங்கனும்அந்தனிஜீவாவும்செய்துகொடுத்தபோதும், எனக்கு 19ம்தேதிதான்டிக்கெட்கிடைத்தது. 22ம்தேதிநாடுதிரும்பவேண்டியநிலையிலிருந்ததால்முகாம்எதற்கும்செல்லமுடியவில்லை. ஆனால்முகாம்களில்இருந்துசமீபத்தில்விடுவிக்கப்பட்டவர்கள்சிலரைசந்தித்துஅவர்களதுதுயரங்களைகேட்டறியமுடிந்தது. நான்தங்கியிருந்தவிடுதியின்சமையல்காரரின்குடும்பம் 1996ல்யாழ்ப்பாணத்திலிருந்துவன்னிக்குகுடிபெயர்ந்திருக்கிறது. மீன்பிடித்தொழில்அவர்களுக்கு. போர்உக்கிரமடைந்தநிலையில்காடுகளுக்குப்போகிறார்கள்புலிகளோடு. நிலவறைகளில்பதுக்கம். ராணுவம்அழித்துநொறுக்கிவரவரஇவர்கள்மூட்டைமுடிச்சுகளோடுபத்துக்கும்மேற்பட்டஇடங்களுக்குஓடியோடிப்போய்பதுங்கவேண்டியிருந்திருக்கிறது. நடந்துவரமுடியாதநோயாளிகள்வயோதிகர்கள்அங்கவீனர்களைஅப்படியப்படியேபங்கருக்குள்கைவிட்டுவிட்டுஓடியுள்ளனர். கைவிடப்படப்பட்டஅந்தபங்கர்களுக்குள்ஒருவேளையாராவதுஉயிர்பிழைத்திருந்தாலும்கூடஒருவருக்கும்தெரியப்போவதில்லை. இனிபுலிகளைநம்பிஉயிரையும்போக்கிக்கொள்வதில்அர்த்தமில்லை. எனவேபடகேறித்தப்பித்துநேவியிடம்சரண். பின்முகாமில்வதிந்துஆகஸ்டில்விடுவிப்பு. இப்போதுஅவர்களின்பிரச்னை, வீடு. வன்னிக்குப்போனஅவர்களின்ஒருகுடும்பம்இப்போதுஐந்தாகபெருகியாழ்ப்பாணம்திரும்பிநடுத்தெருவில்நிற்கிறது. தொழிலுக்குச்செல்லபடகோவலையோஇல்லை. பணம்நகைஎதுவும்மிஞ்சவில்லை. அவற்றைவிற்றுத்தான்கடைசிநாட்களில்சீவித்திருக்கிறார்கள். எல்லாமும்தோற்றாகிவிட்டது. தெரிந்ததொழிலுக்குஅவர்களால்திரும்பமுடியவில்லை. நீர்மேலிருந்தவர்நெருப்புக்குள்கரிபடுகிறார். முகாம்களிலிருந்துவிடுவிக்கப்படுகிறவர்களுக்குஎந்தவாழ்வாதாரமும்இல்லை. முப்பதுரூபாய்குஒருடீவிற்கிறநாட்டில், அரசுகொடுக்கிறசிறுதொகையைவைத்துக்கொண்டுஅந்தமக்கள்எப்படிமீண்டெழமுடியும்?

 # இலங்கைதமிழர்களின்நிச்சயமானவாழ்வாதாரம்குறித்துபேசாதநிலைதமிழகத்தில்நிலவிக்கொண்டிருக்கிறது. தமிழர்களின்வாழ்வாதாரம்குறித்துஏதேனும்முன்னெடுப்புகள்இலங்கையில் (அரசுஅல்லாத) புலம்பெயர்ந்தஇடங்களில்நடக்கிறதா?

 .) ஐரோப்பாஅல்லதுபிறநாடுகளில்அடைக்கலம்புகுந்தஇலங்கைத்தமிழர்களில்பெரும்பாலோர்ஐந்தாறுஆண்டுகளில்அங்குபொதுசமூகத்தோடுஇணைந்துவாழவும்குடியுரிமைபெறவும்முடிகிறது. ஆனால்கால்நூற்றாண்டுகாலமாய்தமிழ்நாட்டின்அகதிகள்முகாமில்வதியும்இலங்கைத்தமிழர்கள்இன்றளவும்அகதிகள்தான்என்பதைஎமதுபுதுவிசையில்தொடர்ந்துஎழுப்பிவந்தோம். வவுனியாமுகாமைப்பார்க்கப்போனநாடாளுமன்றஉறுப்பினர்களில்எத்தனைபேர்தமிழ்நாட்டிலுள்ளமுகாம்களுக்குசென்றிருப்பார்கள்என்பதுதெரியவில்லை. அண்டிவந்தவர்களையேஆதரிக்காதஇந்ததமிழ்நாட்டுசமூகம்இலங்கைக்குப்போய்என்னத்தகிழிக்கப்போகிறது? கழுத்துநரம்புபுடைக்கராஜபக்சேவையும்சிங்களவர்களையும்இங்குவசைபாடித்திரிவதால்அங்குள்ளதமிழர்களுக்குநன்மையேதும்விளையப்போவதில்லை.

) புலம்பெயர்நாடுகளின்புலிஆதரவாளர்களைப்பொறுத்தவரைமாற்றுக்கருத்தாளர்கள்எல்லோரையும்சிறுமைப்படுத்துவதன்மூலம்இலங்கையில்அமைக்கமுடியாததனிஈழத்தைஇணையத்திலாவதுஅமைத்தேதீர்வோம்என்றுமும்முரமாய்பாடுபட்டுக்கொண்டுள்ளனர். ஒருஇருபதாண்டுகள்கழித்துதனிஈழப்போராட்டம்பற்றிஅறிந்துகொள்ளும்தரவுகளைஇணையத்தில்தேடும்ஒருவருக்குஅங்குஏற்பட்டுள்ளஇழப்புகள், தோல்விகள்எதற்கும்புலிகள்அமைப்போதலைமையோபொறுப்பல்லஎன்றமாயத்தோற்றத்தைஉருவாக்கும்அதிரடியானஅறிக்கைகளையும்இட்டுக்கட்டப்பட்டஆவணங்களையும்இணையத்தில்உலவவிடுவதோடுஇவர்கள்பணிநிறைவுபெறுகிறது. எனவேஇவங்கையில்தமிழர்கள்படும்துயரங்கள்அவர்களுக்குஒருபொருட்டல்ல. ஏனெனில்அவர்கள்ஒருபாதுகாப்பானவாழ்க்கையைஎட்டிவிட்டவர்களாகஇருக்கிறார்கள்.

.) யாழ்ப்பாணத்தில்பெரியபெரியபதாகைகளையும்கொடிகளையும்கட்டிக்கொண்டுதொண்டுநிறுவனங்கள்என்கிறஃபண்டுநிறுவனங்களின்குளிரூட்டப்பட்டவாகனங்கள்பறக்கின்றன. மாளிகைபோன்றபெரியவீடுகள்தான்அவற்றின்அலுவலகங்கள். அரசியல்ரீதியானபிரச்னைகளைஇந்தஅமைப்புகள்கொடுக்கும்சோற்றுருண்டைகள்தீர்த்துவைக்கமுடியாது. ஒருசிலஅமைப்புகளைத்தவிரமற்றவற்றுக்குசுனாமிகொள்ளைபோலஇதுவும்ஈழமக்களின்பெயரால்கொள்ளையடிக்கும்வாய்ப்புதான்.

) புலம்பெயர்ந்துவெளிநாடுகளிலும்கொழும்பிலும்வாழக்கூடியபொன்னாலைக்கட்டியான்என்றகிராமத்தைச்சேர்ந்தவர்கள்தங்களுக்குள்ஒருகுழுவைஅமைத்துநிதிதிரட்டிபோரினால்முற்றிலும்அழிந்துபோனதங்கள்ஊரைமீளகட்டியெழுப்புவதாகஅந்தகுழுவின்நிர்வாகிமருத்துவர்.ஞானகுமரன்தெரிவித்தார். இம்மாதிரியானமுயற்சிகளும்அங்கொன்றும்இங்கொன்றுமாகநடக்கின்றன.

) புலம்பெயர்ந்தவர்களில்ஒருசிறுகுழுஇப்போதையசூழலைப்புரிந்துகொண்டுசெயலாற்றவேண்டியதளங்களைகண்டறியமுயற்சிக்கிறது. ராணுவரீதியில்பலவீனமாகஇருந்தபல்வேறுநேரங்களில்அரசியல்தீர்வு, சமஸ்டிமுறைஎன்றெல்லாம்புலிகள்பேசியதைதான்இவர்களும்முன்வைக்கிறார்கள். அதற்காகதுரோகிகள், அரசாங்கத்தின்கைக்கூலிகள்என்றுதூற்றப்படுகிறார்கள். எனினும்அரசியல்உரிமைகளைஅடையும்சக்திகள்இலங்கைதமிழ்ச்சமூகத்தின்மத்தியிலிருந்துதான்உருவாகமுடியும்என்பதைஉணர்ந்துஅதற்கானதொடர்புகளைமேற்கொண்டுள்ளஇந்தசிறுபகுதியினர்நம்பிக்கையளிக்கின்றனர்.

 # விடுதலைப்புலிகள்இனிவிடுதலைப்புலிகள்குறித்துஇலங்கையில்வாழும்தமிழர்களின்நிலைஎன்ன-? அடுத்தக்கட்டபோருக்குதயாராவோம்என்றுஇங்கிருந்துகிளம்பும்கோஷங்களுக்குஇலங்கைவாழ்தமிழர்களின்ரியாக்ஷன்எப்படிஇருக்கு

 பிரபாகரன்மீண்டும்வருவாராமேஎன்றுஅங்குள்ளவர்களிடம்கேட்டால், வரட்டுமே.. வந்துஎன்னசெய்யப்போகிறார்இத்தனைஆயிரம்போராளிகளையும்இவ்வளவுஆயுதங்களையும்பெருந்தொகையானபணத்தையும்வைத்துக்கொண்டேஒன்றும்செய்யஏலாதவர்இனிவந்துஎன்னசெய்யப்போகிறார்என்றுஎதிர்கேள்விகேட்கிறார்கள். ஒருவேளைவந்தால்அவரும்ஒருஇணையதளத்தையோபிளாக்கையோஅமைத்துக்கொண்டுஅட்டைக்கத்திதான்வீசமுடியமேயன்றிஆயுதத்தைதூக்கமுடியாதுஎன்கிறார்கள்.யாழ்ப்பாணம்நாவலர்அரங்கில்நடைபெற்றசந்திப்பின்போதுஒருஅன்பர்சொன்னார்தமிழர்கள்மானஸ்தர்கள், ஆளப்பிறந்தவர்கள், அவர்கள்தனித்துவமானவர்கள், பிறஇனத்தோடுசேர்ந்துவாழமுடியாதவர்கள், தனிநாட்டுக்குகுறைவானஎதிலும்அவர்கள்திருப்திகொள்ளமுடியாதுஎன்றெல்லாம்உங்கள்தமிழ்நாட்டுத்தலைவர்கள்பேசுவதுஉண்மையென்றால், தனிதமிழ்நாட்டுக்காகபோராடவேண்டியதுதானே? அதைவிட்டுவிட்டுஇவர்களதுவீராப்புக்கும்வெத்துச்சவடாலுக்கும்ஏன்எங்கள்உயிரையும்வாழ்வையும்பணயம்வைக்கிறார்கள்? என்று.வவுனியாமுகாமிலிருந்துவிடுவிக்கப்பட்டுவந்துகொண்டிருக்கும் 1280 பேரைஅழைத்துப்போகயாழ்ப்பாணநூலகத்தினருகில்உள்ளதுரையப்பாஸ்டேடியத்தின்வாயிலில்காத்திருந்தஒருகூட்டத்திடம்உரையாடிக்கொண்டிருந்தோம். ஒருமீனவப்பெண்சொன்னார்எத்தனைஇம்சைஇன்னொருதடவைஆயுதம்போராட்டம்னுஎவனாச்சும்சொன்னாதும்புக்கட்டையாலயே ( துடைப்பம்) அடிச்சுசாத்திப்புடுவேன். போரைஎதிர்கொண்டஎளியமக்களின்மனநிலைஇதுதான்.

 # இலங்கைதமிழர்கள்வாழ்வுரிமைக்காகநம்மைப்போன்றவெளியில்இருக்கும்தமிழர்கள்என்னசெய்யவேண்டும்? (அல்லது) இலங்கைதமிழர்கள்நம்மிடம்எதைஎதிர்பார்க்கிறார்கள்?

வாயைமூடிக்கொண்டிருந்தால்போதும், அதுவேநீங்கள்செய்யும்பேருதவிஎன்பதுதான்அவர்கள்நமக்குவிடுக்கும்வேண்டுகோள். காடுஅதிர்கிறதுமீண்டும்எழுகிறதுஎன்றெல்லாம்வீராவேசமாகஇங்குள்ளபத்திரிகைகள்வெளியிடும்பரபரப்புசெய்திகள்கண்டுஅவர்கள்பதறுகின்றனர். இப்படியானசெய்திகள், தனதுராணுவகெடுபிடிகளைநீட்டித்துக்கொள்ளஅரசாங்கத்துக்குஉதவும்என்றுகண்டிக்கின்றனர். ஒருவேளைஅரசாங்கத்துக்குஇப்படிமறைமுகமாகஉதவுவதுதான்இவர்களதுஉள்நோக்கமோஎன்றும்சந்தேகிக்கிறார்கள். ஏற்கனவேஇணையதளங்களிலும்யூடியூப்களிலும்வெளியிடப்பட்டவீரதீரபுகைப்படங்களையும்வீடியோக்காட்சிகளையும்வைத்துக்கொண்டுஒவ்வொருதமிழனையும்உற்றுஉற்றுபார்த்துசந்தேகிக்கும்ராணுவத்தாருக்குஉதவும்பொறுப்பற்றபேச்சுகளையும்அறிக்கைகளையும்நிறுத்தச்சொல்லுங்கள்என்றஅவர்களதுவேண்டுகோள்நம்தமிழ்த்தேசதலைவர்களின்இதயங்களைதைக்கவேயில்லை. இந்தியஅரசாங்கம்ஏன்தமிழர்களைஆதரிக்கவில்லை? இலங்கையின்ஒடும்வாகனங்கள்டாடாவும்லேலண்டும். இருசக்கரவாகனமென்றால்பஜாஜ், ஹீரோஹோண்டா, டி.வி.எஸ். தொலைத்தொடர்பில்ரிலையன்சும்ஏர்டெல்லும். நாடுமுழுதும்இந்தியன்ஆயில்கார்ப்பரேசனின்பெட்ரோல்நிலையங்கள். அங்கிருந்தபெரியசிமெண்ட்ஆலைஇப்போதுபிர்லாவிடம். நாட்டின்பொருளாதாரத்தில்பிரதானபங்குவகிக்கும்தேயிலைத்தோட்டங்கள்இந்தியருக்குசொந்தம். இவையன்றிஇலங்கையின்அன்றாடப்பயன்பாட்டில்புழங்கும்பொருட்களில் 90 சதமானவைஇந்தியதயாரிப்புகள். தமிழர்கள்என்றசிறுபான்மையினரைஆதரித்துஇலங்கைஎன்கிறஇவ்வளவுபெரியசந்தையைஇழக்கஇந்தியமுதலாளிகளும்வர்த்தகநிறுவனங்களும்தயாரில்லை. இவர்களதுசந்தைநலனுக்குபாதிப்பில்லாதஒருஅணுகுமுறையைதான்சோனியா, வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதாஎன்றுயார்ஆண்டாலும்கடைபிடிப்பார்கள்.

# மலையகத்தமிழர்கள்வாழ்நிலைஎன்னவாகஉள்ளது?

இலங்கைக்குப்போய்திரும்பியிருக்கிறேன்என்றதும்எல்லோரும்யாழ்ப்பாணதமிழர்களைப்பற்றிதான்விசாரிக்கிறார்கள். ஆனால்இலங்கையில்ரயில்பாதைஅமைக்கவும்பாலங்கள்கட்டவும்துறைமுகம்தோண்டவும்காப்பிதேயிலைப்போன்றபெருந்தோட்டங்களில்வேலைசெய்யவும் 19 ம்நூற்றாண்டின்தொடக்கம்முதல்தமிழ்நாட்டிலிருந்துபிரிட்டிஷ்காரர்களால்பிடித்துச்செல்லப்பட்டுஇன்றுமலையகத்தமிழர்என்றழைக்கப்படும்நமதுமுன்னோர்களைப்பற்றிஒருவரும்விசாரிப்பதேயில்லை. அவர்களும்தமிழர்கள். அவர்களதுபூர்வீகம்என்றஇந்ததமிழ்நாட்டில்அவர்களுக்காகஒருகைப்பிடிமண்ணும்இல்லை. இருநூறாண்டுகளாகஎஸ்டேட்டுகள்என்றதிறந்தவெளிசிறைச்சாலைக்குள்ளும்அனேகஇடங்களில்முள்வேலிக்குள்ளும்அடைக்கப்பட்டவாழ்க்கைதான்அவர்களுடையது. கடும்உழைப்புச்சுரண்டலுக்குஇன்றளவுக்கும்ஆளாகியிருப்பவர்கள். 83 வன்செயலின்போதுசிங்களவர்களாலும்ராணுவத்தாலும்கடும்ஒடுக்குமுறைக்குஆளானவர்கள். பல்லாயிரக்கணக்கானஅடிஉயரத்திலுள்ளமலைகளுக்குதாங்களேபாதையமைத்துமேலேறிப்போனவர்களில்பலர்இன்னும்சமதளத்திற்குஇறங்கவேயில்லை. உயரங்களிலும்சிகரங்களிலும்வசித்தாலும்அவர்களதுவாழ்க்கைஅதலபாதாளத்தில்தான். ஒருவேளைமலையகத்தமிழர்களில் 87 சதமானவர்கள்தலித்துகள்என்பதோ, டாலரும்பவுண்ட்சும்இல்லாதகூலித்தமிழர்கள்என்பதோஅல்லதுபரபரப்பாககவனிக்கப்படாதுஎன்பதாலோஅவர்களைப்பற்றிதமிழ்த்தேசியவாதிகளோ, இனமானக்காவலர்களோ, ஊடகங்களோபேசுவதேயில்லை. இலங்கையின்மலையகத்தமிழர்பற்றிமட்டுமல்ல, உலகம்முழுவதும்தமதுகாலனிகளாயிருந்த 40 நாடுகளுக்குபிரிட்டிஷ், பிரான்ஸ்ஆட்சியாளர்கள்தமிழ்நாட்டுமக்களைபிடித்துப்போயிருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்குஇந்தியர்அழைத்துச்செல்லப்பட்டதன் (?) 150வதுஆண்டுவிழாவைவெட்கங்கெட்டுகொண்டாடிக்கொண்டிருக்கிறஇந்தநேரத்திலாவது 40 நாடுகளுக்கும்புலம்பெயர்த்துகொண்டுபோகப்பட்டதமிழர்நலன்குறித்தவிவாதம்தொடங்கப்படவேண்டும். இல்லையானால்ஈழத்தமிழருக்காகவடிக்கப்படும்கண்ணீரைகபடம்நிறைந்ததென்றேவரலாறுகுறித்துக்கொள்ளும்.

நன்றி : சூரியகதிர் 

நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை!

nepal-maoist-postersற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து என்ன பேசினாலும் நம்முடைய சார்பு நிலையில் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. அதாவது புலிகளுக்கு ஆதரவுஇலங்கை தமிழருக்கு ஆதரவு அல்லது புலிகளுக்கு எதிர்ப்புஇலங்கை அரசுக்கு ஆதரவு. இவை இரண்டைத்தவிர மற்றொரு நிலைப்பாடும் இருக்கக்கூடும், தேவையாக இருக்கிறது என்பதை பலரும் சிந்திக்கக்கூட மறுக்கிறார்கள். அரசியல் கட்சிகள் முதல்கொண்டு ஊடகங்கள் வரை தங்கள் ஆதாயத்துக்குகேற்றபடி நிலைப்பாட்டினை எடுக்கின்றன. பொதுபுத்தியில் படிந்துபோயுள்ள தமிழர் என்கிற இனவுணர்வைத் தூண்டி ஆதாயம் பெறப்பார்க்கின்றன. அறிவுஜீவிகள் என்று மார்தட்டிக் கொள்கிறவர்களின் செயல்பாடும் இப்படித்தான் உள்ளது. சாதி உணர்வு, மத உணர்வு எந்த அளவுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு கண்மூடித்தனமான இன உணர்வும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதே.

இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் உணர்ச்சி வசப்படுவதை விட்டுவிட்டு அடுத்த நகர்வு குறித்து யோசிப்பதுதான். இன்னும் பல தசாப்தங்களுக்கு போரை நடத்திக்கொண்டிருப்பதா? போர் முடிவுக்கு வரும்பட்சத்தில் தமிழர், இலங்கையில் நிலையான அமைதியோடு வாழ வழிவகை என்ன? நம்முன் இருக்கும் கேள்விகள்

நேபாளத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி ஆயுத ஏந்திய மாவோயிஸ்டுகளின் அணுகுமுறையை இலங்கை பிரச்சினையில் புலிகள் ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? நேபாளத்தில் மன்னராட்சியும் நிலப்பிரபுத்துவமும் பிரச்சினைகள் என்றால் இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினை என்று மேலோட்டமாகப்பார்த்து தள்ளிவைக்காமல் இது குறித்து சிந்தனையும் விவாதமும் செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு நேபாள அரசியல் நிர்ணநய சபைக்கான தேர்தலுக்குப் பார்வையாளராக சென்று வந்திருந்த புதுவை சுகுமாறனிடம் நான் கண்ட நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது. நான் பணியாற்றிய வார இதழில் வெளியானது . சூழ்நிலை கருதி மீள்பிரசுரம் செய்கிறேன்.

மக்கள் ஆட்சியா, மன்னர் ஆட்சியா என்று புயல் வீசிக்கொண்டு இருந்த நேபாளத்தில் இப்போது ஜனநாயகக் காற்று! பத்தாண்டுகளாக நடந்த ஆயுதப் போராட்டத்தின் முடிவில், மாவோயிஸ்ட்கள் தலைமையிலான ஆட்சி அமைந்திருக்கிறது. நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தலின் பார்வையாளராகச் சென்று வந்த மனித உரிமை ஆர்வலர் புதுவை கோ.சுகுமாறனுடன் ஒரு சந்திப்பு

”ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்பான மாவோயிஸ்ட்கள் நேபாளத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எப்படி இது சாத்தியமாயிற்று?”

”நேபாள மக்களின் ஒரே வருமானம் சுற்றுலாதான். காட்மாண்டு நகரம், இரண்டு மலைகளுக்கு நடுவே கோடையிலும் கொப்பளிக்கும் நாராயணி ஆறு. இந்த இரண்டும் கொள்ளை அழகுடையவை. இருந்தாலும், ஏழ்மையும் வறுமையும்தான் நேபாளத்தின் உண்மையான முகம். விவசாயம் நொடித் துப்போன பல லட்சம் பேர் கூர்க்காக்களாக, இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் கிளம்பிவிடுகிறார்கள். கடந்த 240 ஆண்டுகளாக மன்னரைக் கடவுளாக நினைத்து, அவர் தங்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பிக்கொண்டு இருந்தவர்கள் நேபாள மக்கள். 1996ல் மன்னர் குடும்பத்துக்குள்ளேயே நடந்த படுகொலைகள் அந்த நம்பிக்கையை முதன்முறையாகத் தகர்த்தன. அதன் பிறகுதான் கட்சிகளின் மேல் மக்கள் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார்கள். மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள் மாவோயிஸ்ட்கள். கடந்த பத்தாண்டுகளாக நடந்த போராட்டத்தில் இரண்டு தரப்பிலும் சேர்த்து 12 ஆயிரம் பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு, மூன்றாவது முறையாக அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் இப்போது நடந்தது. மாவோயிஸ்ட்கள் இதில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து வென்றதற்கு அரசியல்ரீதியாக நிறைய காரணங்கள் இருந்தாலும் அடித்தட்டு மக்களை ஒன்றிணைத்ததுதான் முக்கியமான காரணம்! தேர்தல் மிக அமைதியாக நடந்தது. கிட்டத்தட்ட 85 சதவிகித ஓட்டுப்பதிவு நடந்தது. ரொம்பவும் சாதாரணமாக மரத்தடியில் ஓட்டுப் பெட்டியை வைத்திருந்தார்கள். ஓட்டு எண்ணுவதும்கூட அதீத பாதுகாப்பு இல்லாமல் எளிமையாக, நேர்மையாக நடந்தது. இந்தத் தேர்தல் வெற்றி என்பது, நேபாள மக்களின் அமைதிக்குக் கிடைத்த வெற்றி!”

”ஆயுதங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு ஜனநாயகத்துக்குத் திரும்பியிருக்கும் மாவோயிஸ்ட்கள், இதே நிலையைத் தொடர்வார்களா?”

”செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு, ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்கள் அனைத்தையும் தீவிரவாத அமைப்புகளாக அறிவித்தது அமெரிக்கா. இதனால், விடுதலைப் புலிகள் உள்பட பல போராட்டக் குழுக்கள் அந்தந்த நாடுகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. பெரும்பாலும் அவை தோல்வியிலேயே முடிந்தன. நேபாள மாவோயிஸ்ட்கள் மட்டுமே இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டவிடம், ‘ஜனநாயகப் பாதையில் நீடிப்பீர்களா?’ என்று கேட்டோம். ”ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில்தான் ஆயுதம் தூக்கினோம். இனி, அது தேவைப்படாது. ஆயுதம் ஏந்திய போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மூன்றாவது உலக நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளுக்கு நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம்” என்றார்.”

”நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்திருப்பதை இந்தியா எப்படிப் பார்க்கிறது?”

”ஒருவகையில் இது இந்தியாவுக்குக் கிடைத்த அடிதான். மாவோயிஸ்ட்கள் தலைமையில் ஆட்சி அமைவதை ஒருவித படபடப்புடன்தான் பார்க்கிறது இந்தியா. நேபாளத்தில் செல்வாக்கான கட்சியான மாதேஸி கட்சி, ஆரம்பத்தில் இந்தத் தேர்தலில் பங்கேற்க மறுத்து வந்தது. இதன் பின்னணியில் இந்திய உளவுத் துறை இருப்பதாகச் சொல்கிறார்கள். அரண்மனையிலிருந்து வெளியேறப்போகும் நேபாள மன்னரை இந்தியாவில் தங்கவைக்க இந்திய அரசு விரும்புவதாகச் சொல்கிறார்கள். அதை மாவோயிஸ்ட்கள் விரும்பவில்லை. இதுவரை சீனா வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், அது மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என்கிறார்கள். இந்தியா என்ன செய்யப்போகிறது என்று பார்க்கலாம்!”

”நேபாள மாவோயிஸ்ட்களின் இந்த வெற்றி, மற்ற ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு வழிகாட்டுமா?”

”நிச்சயமாக! 1983லிருந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் புலிகளால் இதுவரை அமைதியை எட்ட முடியவில்லை. காரணம், மாவோயிஸ்ட்களைப் போல நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை. விடுதலைப்புலிகள் இந்த முன்னுதாரணத்தைப் பரிசீலிக்கச் செய்ய வேண்டிய நேரம் இது!”

14-5-08