ஆறு மாதங்களுக்கு முன் இந்த காக்கடாம் பூ செடியை வாங்கினேன். தற்போது புதர்போல வளர்ந்துவிட்டது. சிறுசெடியாக வாங்கியபோதே இரண்டு பூக்கள் பூத்திருந்தன. தற்போது புதர்ச்செடியாக வளர்ந்து நிற்கிறது. கடந்த வார மழைக்குப் பிறகு, நேற்று இது பூ பூத்தது. மொட்டு இளங்சிவப்பு நிறத்திலும் பூ வெண்மையாகவும் இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிறைய இடங்களில் இந்த மலர் சாகுபடி நடக்கிறது. எனக்கு இது பழக்கப்பட்ட பூ, எனக்குத் தெரிந்தவரை இதை காக்கடாம் பூ என்பார்கள். மல்லிகை குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனம் இது. பூக்கும்போது மட்டும் வாசனையாக இருக்கும். அடுத்த நாள் காலை வரையில் வாடாமல் (இது வாடாமல்லி அல்ல, வாடாமல்லி மல்லிகை குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் அல்ல) இருக்கும்.
மேலதிக தகவல்களுக்கு இணையத்தில் தேடினேன். இதன் உயிரியல், தமிழ்ப்பெயர்களை சரியாக அடையாளம் காண முடியவில்லை.