பாகிஸ்தானுக்குத்தான் போக வேண்டுமா?

அண்மைக் காலமாக மாட்டிறைச்சி தடை, யோகா இவற்றை விமர்சித்து பேசினால், எழுதினால் பாஜக எம் பிக்கள் முதல் கொண்டு இந்துத்துவ அடிபொடிகள் வரை ‘எதிர்த்து பேசினா பாகிஸ்தான் போங்க, மாட்டுக்கறி திங்கனும்னா பாகிஸ்தான் போங்க’ என்று கோஷம் போடுவது அதிகமாக நடக்கிறது.   இன்று ஒரு சைக்கோ ‘தாயின் மாமிசம் உண்பாயா?’ என்று என்னை முகநூலில் கேட்கிறது. ஒத்த கருத்துடன் எல்லோரும் எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. அப்படி எதிர்ப்பார்ப்பதும் இயற்கைக்கு முரணானது.  கடுமையான கருத்தை கடுமையாக எதிர்க்கலாம்.  தாயின் கறி தின்பாயா என்பதெல்லாம் மனநோய் பிடித்தவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும்.

10 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களைத் தவிர்த்து உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது. மாட்டிறைச்சியை வேதங்கள் தோன்றிய காலத்தில் பார்ப்பனியர்களும் உண்டிருக்கிறார்கள் இந்தக் கருத்துக்களை முன்வைத்து ஆதாரத்தோடு நூல்கள், கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இருந்தும் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் இந்தப் பூனைகள் அதையெல்லாம் கருத்தில் கொள்வதே இல்லை.

கோபுரத் தற்கொலைகள் என்கிற நூலி(பரிசல் பதிப்பக வெளியீடு)ல் ஆய்வாளர் ஆ. சிவசுப்ரமணியன், பிராமணர்கள் செய்யும் யாகங்களில் பசுக்கள் பலியிடுவதைப் பற்றியும் அப்படி பலியிடப்படும் பசுக்களின் இறைச்சியை எப்படி உண்ண வேண்டும் என்பது குறித்தும் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, தெய்வத்தின் குரல் என்ற நூலில் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டுகிறார்.

‘‘லோகத்தில் பல பேருக்குப் புரிய ஷேமத்தைத் தேவர்கள் செய்ய வேண்டுமென்ற உசந்த நோக்கத்தில் பசு ஹோமம் பண்ணுவதில் தப்பேயில்லை” என்கிறார் சங்கராச்சாரியார்.

உலக நலன் என்கிற பெயரில் கொன்றால் தவறில்லை, அதுவே எளிய மக்களின் ஆதாரமான உணவுக்காக கொல்லப்பட்டால் தவறா? தவறு என்றுகூட சொல்வதில்லை, மாட்டிறைச்சி உண்பவர்களை நரமாமிசம் உண்ணும் மனநோயாளிகளுடன் ஒப்பிடுவதும் பாகிஸ்தானுக்கு போ என்று பாசிச குணத்துடத்துடன் கட்டளை இடுவதும் இந்துத்துவ குண்டர்களின் வேலையாகிவிட்டது.

பசு என்னும் புனிதம் எப்படி கட்டமைக்கப்பட்டது என்று இந்திய வரலாற்று அறிஞர் டி. என். ஜா தனி புத்தகமே (the myth of the holy cow-D.N.Jha)எழுதியிருக்கிறார். இதுகுறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். முழுமையான வரலாற்று தகவல்கள் அடங்கிய நூல். அதிலிருந்து இரண்டு ஆதாரங்களை பகிர்கிறேன்.

இந்தியாவின் (முதன்முதலாக குடியிருப்புகள் உருவான இடங்கள்) ஆற்றோரங்களில்  நடந்த தொல்லியல் ஆய்வுகளில் மற்ற விலங்குகளைக் காட்டிலும் பசு, எருது போன்றவற்றில் எலும்புகளே அதிகளவில் கிடைக்கப் பெற்றுள்ளன. எலும்புகளுடன் வேட்டையாடப் பயன்பட்ட கற்கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

painted grey ware sites எனப்படும் ஆரிய குடியேறிகளின் வாழிடப் பகுதிகளில் வீட்டு விலங்குகளின் எலும்புகள் அவை, வெட்டப்பட்டு கொல்லப்பட்ட அடையாளங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இதில் சிறப்பம்சம் என்னவென்றால் கால்நடைகளின் பாதுகாவலனாக இந்துக்களால் போற்றப்படும் கிருஷ்ணனுடன் தொடர்புபடுத்தப்படும் மதுராவில்தான் இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலத்தை கிமு 400-200 என்கிறார்கள் தொல். அறிஞர்கள்.

இப்படி வரலாற்று காலம் தொட்டே மாட்டிறைச்சி இந்துக்களாலும் இந்துக்களாக குறிப்பிடப்படும் பூர்வ குடி இந்தியர்களாலும் உண்ணப் பட்ட ஒன்றுதான். புத்த, சமண மதங்களின் தாக்கத்தால் கொல்லாமை, புலால் உண்ணாமையை இந்து மதமும் அதை சுவீகரித்துக் கொண்டது. அண்ணல் அம்பேத்கரும்  இந்திய வரலாற்று அறிஞர் டி. என். ஜா போன்றோரும் இதை ஆதாரத்துடன் சுட்டுக்காட்டியுள்ளனர்.

வரலாற்றை முழுவதுமாக மறைத்துவிட்டு, ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. சாப்பிடக்கூடாதுன்னா சாப்பிடக் கூடாது. இல்லைன்னா பாகிஸ்தான் போங்க’ என்று கட்டளை இடுவது பித்துப் பிடித்த பாசிசம். இதையெல்லாம் குணப்படுத்த முடியாது, தெளிவு படுத்த முடியாது!

மாட்டிறைச்சியை அதிகமாக உண்பவர்களைக் கொண்ட அமெரிக்காவில் மரக்கறி உண்ணும் நீங்கள் சகல வசதிகளுடன் செட்டில் ஆகலாம்,  நாளும் உயிர் பயத்துடன் வாழ நேரும் பாகிஸ்தானுக்கு நாங்கள் போக வேண்டுமா?

தலித்துகளின் துயர் அறியாத மேட்டுக்குடி தலித்துகளின் கவனத்துக்கு…

சமீபத்தில் கவிஞர் சுகிர்தராணி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு ஆசிரியையின் தலித் விரோத நடத்தை குறித்து பதிவு செய்திருந்தார். அந்த பதிவுக்கு பலர் ‘அய்யய்யோ…அப்படியெல்லாமா நடக்குது?’ என்றபடி தங்களுடைய ‘ஆழ்ந்த’ வருத்தங்களை பகிர்ந்திருந்தார்கள், இதில் பலர் தலித் அபிமானிகள்.  தலித் அபிமானிகள் தலித்துகள் படும் பாடுகள் குறித்து அறியாதவர்களாக இருப்பதிலிருந்து அவர்கள் தலித்துகளிடமிருந்து எத்தனை தூரம் விலகியிருக்கிறார்கள் என்பதும் ‘எல்லாம் நன்றாக நடக்கிறது’ என்கிற உலகத்துக்குள் வாழ்ந்துகொண்டிருப்பதையும் அறிய முடிகிறது.  இந்த அன்பர்கள், நண்பர்களுக்காக முத்துலட்சுமி என்கிற தலித் சிறுமியின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தை சொல்கிறேன். இந்த சம்பவத்தை அச்சிலேற்றிய தி இந்து (ஆ), எழுதிய நிருபர் வால்டர் ஸ்காட்டுக்கும் நன்றியை சொல்ல வேண்டும்.

துப்புரவுத் தொழிலாளியின் மகளான முத்துலட்சுமிக்கு தன் 11வது வயதில் காது கேட்கும் திறனில் பிரச்னை எழுந்தது. காதுகளில் கருவியை பொருத்திக் கொண்டு பள்ளிக்குச் சென்றார்.  சென்ற வருடம் பத்தாம் வகுப்பில் நுழைந்த நேரம் அவருடைய காது கேட்கும் கருவியில் தண்ணீர் பட்டு, இயங்காமல் போனது. புதிய கருவி வாங்க வசதியும் வாய்ப்பும் கிடைக்கப் பெறாத முத்துலட்சுமி, படிப்பின் மீதான ஆர்வத்தின் காரணமாக தொடர்ந்து வகுப்புகளுக்குச் சென்றிருக்கிறார். காது கேட்காததால் வகுப்பில் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலையில் இதைக் கண்டுபிடித்த ஆசிரியை செய்ததுதான் மனிதத்தின் உச்சம்! முத்துலட்சுமியை எல்லா மாணவர்கள் மத்தியிலும் அவமானப்படுத்தியதோடு இனி வகுப்பு வரவேண்டாம் என்று சொன்னதோடு, அந்தப் பள்ளியை விட்டே துரத்த தலைமையாசிரியரிடம் பரிந்துரைத்திருக்கிறார். மகளுக்காக தந்தை கெஞ்சியதையும் காதில் வாங்காத செவிடாய் தலைமையாசிரியரும் முத்துலட்சுமியிடம் டிசி கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

இங்குதான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது… பத்தாம் வகுப்பில் ரிசல்ட் காட்ட வகுப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கும் தனியார் பள்ளியா இது? எந்த பள்ளி இது என்று மேற்கொண்டு படித்தேன். அது ராமநாதபுரம் மாவட்டம், பேராவூர் அரசு மேனிலைப் பள்ளி.

இந்நிலையில் முத்துலட்சுமியின் மனதைரியமும் உறுதியும் என்னை நெகிழ வைக்கிறது. தன் குடும்பத்தின் சூழலை கருத்தில் கொண்டு தன்னார்வ நிறுவத்தின் மூலம் தையல் கற்றுக் கொண்டார்.  தையல் மிஷின் வாங்க நிதி கேட்டு ராமநாதபுரம் கலெக்டரிடம் மனுகொடுத்த போது, 15 வயது தொழில் தொடங்கும் வயதல்ல என்று சொல்லி விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான் முத்துலட்சுமி தனக்கு நேர்ந்த அவலத்தை சொல்லியிருக்கிறார்.

புதிய காது கேட்கும் கருவியை வாங்க உதவி கிடைத்து, ஆட்சியரின் பரிந்துரையில் அவர் பள்ளிக்குத் திரும்பலாம். ஆனால் முத்துலட்சுமி, ‘மீண்டும் அவமானப்படுத்தப் படுவேன் என்று எனக்கு பயமாக இருக்கிறது’ என்று சொன்னதாக முடிக்கிறார் நிருபர்.

சினிமா காக்கா முட்டைகளுக்காக விழுந்து விழுந்து நெகிழும், தலித்துகள் இப்படியெல்லாம் கொடுமைப் படுத்தப் படுகிறார்களா என்று அறியாத மேட்டுக்குடி மக்களுக்கு முத்துலட்சுமியின் நிலையும் அழுவதற்குரிய ஒன்றுதான். அழுவதற்காகவாவது நாலு பேர் வேண்டும் இல்லையா? இந்த அழுகையில் முத்துலட்சுமிக்குரிய நீதி அழிந்து போய்விடக்கூடாது. முத்துலட்சுமியை மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தியதோடு அவருக்குரிய அடிப்படை உரிமை பறித்த அந்த அசிரியையும் இதில் தொடர்புடைய மற்ற ஆசிரியர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், கல்வி கற்பிப்பதற்கே லாயக்கற்ற அவர்களை ஆசிரியர்களாக தொடர்வதற்கு அனுமதிக்கக் கூடாது! உங்களின் நெகிழ்வான கண்ணீர்  வேண்டாம் இதை வலியுறுத்துங்கள், ஒரு சிறுமியின் அடிப்படை உரிமையை நிலைநாட்டுங்கள்!

Follow up:

முத்துலட்சுமி பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். தி இந்து(ஆ) நிருபர் வால்டர் ஸ்காட்டுக்கு வாழ்த்தும் நன்றியும். ஆனால் முத்துலட்சுமியை மனிதமில்லாமல் நடந்துகொண்ட ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மாறாக, பள்ளிக்குப் போக பயப்படும் முத்துலட்சுமிக்கு உளவியல் ஆலோசனை வழங்க உள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்திருக்கிறார். முத்துலட்சுமிக்கு காது கேட்கும் கருவியை வாங்கித் தர பலர் முன்வந்திருப்பதை நிருபர் சுட்டிக்காட்டியுள்ளார். முத்துலட்சுமிக்கு உதவ விருப்பமுள்ளவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரான பி. கனகராணியை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு எண்: 94865 59888.
இது வெறுமனே காது கேட்கும் கருவியின் தேவையை தீர்க்கும் பிரச்னை அல்ல, ஆசிரியரின் நடத்தை சார்ந்த பிரச்னை. வழக்கமாக இங்கேயும் அது mute செய்யப்பட்டுவிட்டது!

பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்

செய்து பாருங்கள்

cartoon

மேலே இருக்கும் கார்ட்டூன் பிரிட்டன் நோபல் அறிவியலாளர் டிம் ஹண்ட்டின் கருத்தை ஒட்டி இண்டிபெண்டண்ட் இதழ் வெளியிட்டது.

ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் காலகட்டம் இது. 2000ன் ஆரம்பங்களில்கூட இந்தியாவில் பத்திரிகை துறை உள்பட பல துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தார்கள். புலனாய்வுப் பத்திரிகைகள் ‘பாதுகாப்பு’ காரணங்களுக்காக பெண் நிருபர்களை பணியமர்த்த மறுத்தன. இன்றும்கூட தமிழக புலனாய்வுப் பத்திர்கைகளில் ஒரு பெண் நிருபர்கூட இல்லை. இதே பாதுகாப்பை காரணம் காட்டி இராணுவத்தில் பிரச்னைக்குரிய பகுதிகளில் பணியாற்ற பெண் இராணுவ வீரர்கள் தடுக்கப்படுகிறார்கள். இராணுவத்தில் 5% அளவிலேதான் பெண்கள் பணியாற்றுகிறார்கள். அரசாங்கமும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லக்கூடிய பத்திரிகைகளுமே, பெண்களின் பங்களிப்பை மறுக்கும்போது பணியிடங்களில் சம வேலைவாய்ப்பு, சமத்துவம் என்கிற பேச்சுகள் துவங்குவது இன்னும் தாமதப்படலாம்.

எழுத்தாளர் சுகிர்தராணியும் தன்னுடைய கட்டுரையில் தன் பணியிடத்தில் நிலவும் சமத்துவமின்மை குறித்தும், அரசும் சமூகமும் பெண் ஆசிரியர்களுக்கான கட்டுப்பாட்டை , உருவகத்தை எப்படி வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன என கேள்விக்குட் படுத்தியுள்ளார்.

கிறித்துவ மடாதிபதிகள், இந்துத்துவ மடாதிபதிகள், இஸ்லாமிய குருமார்கள் பெண்களை வீட்டுக்குள்ளே அடைத்து வைக்க வேண்டும் என்று காலம்காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். ஒரு பெண் வாசல் தாண்டி வெளியேறினால் அவள் ‘மோசமான’ நடத்தை கொண்ட பெண் என்று ஆணாதிக்க அடிப்படை வாதத்துடன் அவர்கள் இப்போதும் கூக்குரலிடுகிறார்கள். இதன் மூலம் வீட்டில் இருக்கும் ஆண்களின் அடிவயிற்றில் பீதியைக் கிளப்புகிறார்கள். சமீபத்தில் தொலைவில் வேலைக்குச் செல்கிறார்கள்…

View original post 201 more words

இன்னுமொரு ’சிறந்த பட்டியல்’!

News reader Poonguzhali

தமக்குத் தெரிந்தவர்கள், தமக்குத் தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் என தன் சுயத்தை சுற்றியிருப்பவர்களை மட்டும் பட்டியல் போடுவது எழுத்தாளர்கள், ஊடகக்காரர்களின் வழக்கமாகிவிட்டது. நியூஸ் மினிட் பட்டியல் எதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது எனத் தெரியவில்லை. பட்டியலில் உள்ளவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்தான்.

ஆனால், பு.தலைமுறையின் ஜென்ராம், நியூஸ் 7 செந்தில், விஜயன் இவர்களின் பங்களிப்பை இந்தப் பட்டியல் புறக்கணித்துள்ளது. பூங்குழலி, வெங்கட பிரசாத்தின் மனைவி என்ற அளவிலே சுருக்கப்பட்டிருக்கிறார். பூங்குழலியின் தமிழ் உச்சரிப்பும் எளிமையும் என்னை மிகவும் ஈர்த்தவை. நியூஸ் 7 செந்தில், விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முன் அந்த தலைப்பு சார்ந்து உழைப்பது அவர், பங்கேற்பாளர்களிடம் முன்வைக்கும் கேள்விகளால் தெரிகிறது. எல்லா நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் கேள்வி எழுப்புகிறார்கள், மடக்குகிறார்கள். ஆனால் செந்திலின் கேள்விகளில் எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மேதைமை இருப்பதில்லை.

அதுசரி, ஏன் பிரைம் டைம் விவாத நிகழ்ச்சிகளை பெண் தொகுப்பாளர்கள் யாரும் தொகுப்பதில்லை? தொலைக்காட்சிகளிலும் பெண்ணுக்கு சமையல், சேமிப்பு, கல்வி, விவசாயம், விளையாட்டு என்கிற சஃப்டான துறைகள் மட்டும் ஒதுக்கப்படுவதன் பின்னணி என்ன?
பெண் தொகுப்பாளர்களுக்கு சர்ச்சையான அரசியல், சமூக விவாதங்களை தொகுக்கும் திராணி இல்லை என்று ஊடகங்கள் ஒதுக்குவதாக எடுத்துக் கொள்ளலாமா?

பேராசிரியர் சாய்பாபா அவர்களை விடுதலை செய்யக் கோரி லண்டன் இந்திய தூதரகத்தின் முன்னால் போராட்டம்!

டில்லி பல்கலைக்கழக பேராசிரியரும் மக்கள் ஜனநாயக உரிமை செயற்பாட்டாளருமான G.N. சாய்பாபா அவர்கள் ரகசியமாக சாதாரண உடையில் வந்திருந்த இந்திய போலீசால் கடந்த வருடம் மே மாதம் 9 ம் திகதி கடத்திச் செல்லப்பட்டார். பின்னர், ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்’ (UAPA), கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூர் மத்திய சிறையில்ஒரு இருண்ட தனி அறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

அவர் சக்கர நாற்க்காலியில் இயங்குகின்ற உடல் குறைபாடு உடைய ஒருவர். சிறையில் அவரது உடல் நலம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டு வருகின்றது. கலாநிதி G.N. சாய்பாபா அவர்கள் மக்கள் ஜனநாயக உரிமை கழகத்தின் முன்னணி செயற்பாட்டளரும்; ஆதிவாசிகள் மற்றும் பழங்குடி மக்கள் வாழும் மலை பிரதேசங்களில் உள்ள கனிமங்களை ஏகாதிபத்தியங்கள் கொள்ளை இடுவதற்க்காக “பச்சை வேட்டை” என்ற பெயரில் அமெரிக்க அரசு ஆப்கானிஸ்த்தானிலும். ஈராக்க்கிலும் குவித்துள்ள ராணுவத்திற்கும் அதிகமான எண்ணிக்கையான ஆயுத துணைப்படைகளை அனுப்பி இந்த மலைப்பிரதேசங்களில் சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்து வருகின்ற “ஆப்பிரேசன் கிறீன் கன்றிற்கு (Operation Green Hunt)” எதிராக தொடர்ச்சியான பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சட்ட விரோதமாக கடத்தி செல்லப்பட்டு போலிக் குற்றச்சாட்டடில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கும் சாயிபாபா அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி, லண்டனில் உள்ள இந்திய தூதராலயத்தின் முன்னால் எதிர்வரும் 28ம் திகதி ஞாயிறு பகல் 1 மணி முதல் மறியல் போராட்டம் நிகழவுள்ளது. இதனை இந்திய தொழிலாள் சங்கம் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து ஒழுங்கமைத்துள்ளது.

Release Delhi University Professor, Dr GN Saibaba from Prison!

Join the picket at the High Commission of India, Aldwych, London, WC2B 4NA

From 1pm on 28th June 2015

Dr GN Saibaba, a professor of Delhi University and a versatile democratic rights champion was clandestinely abducted on 9th May 14 by plain-clothes Indian policemen. Since then, charged under the draconian anti-terror law the ‘Unlawful activities Prevention Act’ (UAPA), he has been kept under solitary confinement in a dark cell of Nagpur Central Prison in the Indian State of Maharashtra.

Dr Saibaba, who is wheelchair bound with 90% disability, has been in the forefront of democratic rights movements across the Indian subcontinent. He campaigned tirelessly against ‘Operation Green Hunt’ – the Indian State’s war on the poorest of the poor of India, such as Dalits, Apasis and peasants of Central and Eastern India, who are struggling to safeguard their lands, forests and rivers from being grabbed by the mighty and powerful multi-national corporations – both foreign and Indian – in the name of ‘development’. For questioning the model of this so called ‘development’, Dr Saibaba is incarcerated. Expression of one’s views on political and socio-economic issues is not a crime but a very basic democratic right granted by the Indian Constitution to all its citizens. Perhaps Dr Saibaba’s only “crime” is that he stood in solidarity with the sons and daughters of the soil, who are on the verge of extinction, thanks to the corporate assault on their lives and livelihood.

Dr Saibaba suffers from a heart ailment and degeneration of the vertepae for which he needs constant expert medical attention. After his incarceration, his health has seriously deteriorated in the prison. The Indian State has ensured that Dr Saibaba’s bail application was rejected thrice. The trial has not started even after a year, and the authorities are denying him the necessary medical attention, which suggests that the Indian State is slowly letting Dr GN Saibaba’s health deteriorate to point of no return. Imprisoning a 90% disabled violates the provisions of the Code of Criminal Procedure, the Persons with Disabilities Act, and the UN Conventions. This is just a glaring example of a complete travesty of justice which happens far too often in the Indian subcontinent. There are 300,000 prisoners waiting for trial in the Indian jails,